Pages

Tuesday, January 13, 2015

ISIS ன் பாரீஸ் பத்திரிக்கை அலுவலக தாக்குதல்--சில உண்மைகள்

இம்மாதம் . முதல் வாரம்  பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் உள்ள சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலக ஊழியர்கள் உட்பட  17 பேர் ISIS பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கொல்லப்பட்டவர்கள் பிரான்ஸ் நாட்டின் மிகச்சிறந்த “கார்டூனிஸ்டுகள்” ..முகம்மது நபிகளை உருவாக்க வரைந்தார்களாம் அதனால் இந்த தண்டனையாம்.

இப்பத்திரிக்கை மத......மொழி பாகுபாடு இல்லாமல் ஏசுகிறிஸ்து, போப்பாண்டவர் உட்பட பலரை கார்ட்டூன் வரைந்து கிண்டல் அடித்துள்ளது. இத்தனைக்கும் இதனுடைய சர்குலேசன் வெறும் 45,000 தான். ஏற்கனவே ஒருமுறை இதுமாதிரி படம் வரைந்து முஸ்லீம் பயங்கரவாதிகளால், இந்த பத்திரிக்கை தாக்கப்பட்டு அரசு போலீஸ் பாதுகாப்பு அளித்துள்ளது.

இந்த தாக்குதல் நடத்தியது வீடியோவாக இணையதளத்தில் உலாவுகிறது. துப்பாக்கியால் குண்டு மழை பொழிந்த பயங்கரவாதிகள், இலக்கை நோக்கி சுட்டதை பார்க்கும் போது அனுபவம் மிக்க ராணுவ வீரர்களின் “துல்லியம்” மிகவும் அதிதுல்லியமாக இருந்தது, அவர்களுக்கு எவ்வளவு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது என்பதற்கு ஆதாரம். பின்னர் அவர்கள் வேறொரு இடத்தில் அடுத்த நாளே சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்பதுதான் சிறப்பம்சம்.... இந்தியா போல அவர்களை நாட்டிலிருந்து தப்பிவிடுவதும், கைதுசெய்து, தண்டனை கொடுக்காமல் ஆதரவு ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதிப்பதும் அங்கு நடக்கவில்லை.

சுமார் 1400 பேர் பிரான்ஸிலிருந்து சிரியாவிற்கு சென்று ISIS யிடம் பயிற்சி பெறுவதாகவும், அதில் 800 பேர் தற்போது பிரான்சுக்குள் வந்துவிட்டதாகவும், இனி “பிரான்சுக்கு பயங்கரவாத தாக்குதல்கள் சகஜமாகிவிடும்” என்பதும் பிரான்சை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இத்தாக்குதலுக்கு 40 உலகத்தலைவர்களையும் அழைத்து 30 லட்சம் மக்கள் கண்டன ஊர்வலம் போனது, பயங்கரவாததிற்கு எதிராக அம்மக்களின் மனேநிலைக்கு சான்று!

நாமும், மன, மத மாச்சர்யங்களை, மண்ணில் புதைத்துவிட்டு, பயங்கரவதத்தை இந்திய மண்ணிலிருந்து விரட்ட ....என்று ....ஒன்று ..சேருவோம்?

மைத்ரிபாலா சிறீசேனா மோடியோடு ஜோடி சேருவாரா?


இலங்கை அதிபர் தேர்தல், சார்க் நாடுகளில் குறிப்பாக இந்தியாவிற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு.... தேர்தல் வழிமுறைகளும், மிகப் பெரும் ஆச்சரியம், மற்றும் திகில் கதை திடீர் திருப்பங்கள்!

ஜோசியர்களின் பேச்சை நம்பி மகிந்திரா ராஜபஷே தன் பதவி காலம் முடிவதற்கு இரண்டு ஆண்டுகட்கு முன்பே தேர்தலை நடத்தியது... (இந்து மதம் இரண்ய கசிபுகளுக்கு இப்படித்தான் இறுதி நிலை கொண்டு வரும்). “கண்ணுக்கெட்டிய தூரம் எதிரிகளே இல்லை” என்ற ராஜபஷேவிற்கு அவர் வேட்பு மனு தாக்கல் செய்யும் வரை ‘எதிரி’ அவரின் மந்திரி சபைக்குள்ளே இருக்கிறார் என்று தெரியவில்லை.

SLFP மற்றும் UNP கட்சிகளே “வேட்பாளர்” கிடைக்காமல் போட்டியிடாத போது மைதிரிபாலா ஸ்ரீசேன என்னு ம் ராஜபஷே மந்திரிசபை, மந்திரி களத்தில் குதித்தார். தீவிரசிங்களவாத JHU வும் தமிழ்வாத TNA-யும் முஸ்லீம் வாத முஸ்லீம் கட்சிகளும் ஒவ்வொன்றாக களத்தில் ஸ்ரீசேனாவுக்கு ஆதரவு தெரிவித்தன.

கட்சியே இல்லாத, சிறிசேனா என்னும் தன் சொந்த கட்சிகாரரால் ராஜபஷே தோற்கடிக்கப்பட்டார். இதுதான் “அட்ரஸ் இல்லாதவரால்” அக்கிரமக்காரர்கள் ஆண்டவன் தண்டிக்கும் யுக்தி!

சரி ஏன் இந்த தேர்தல் முடிவுகள் நமக்கு முக்கியமானது?

ஸ்ரீலங்கா கடந்த 10-ஆண்டுகளாக அதிகமாக சீனா பக்கம் சாய்ந்துள்ளது. எம்மன ஹோட்ட துறைமுக திட்டத்தில் சீனா 1117 மிலியன் டாலர் முதலீடு செய்திருக்கிறது. கொழும்பு சிட்டி துறைமுக திட்டத்திலும் 1.4 பிலியன் டாலர் முதலீடு செய்துள்ளது. கொழும்பு துறைமுகத்தின் 3-ல் 1-பகுதியை 99-ஆண்டுகால “லீஸ்” எடுத்துள்ளது. 4.8 பிலியன் டாலருக்கு   இலங்கை, விரைவுசாலை, துறைமுகம், ஏர்ப்போர்ட், நீர்பாசனம், குடிநீர் திட்டங்கள் செயல்படுத்த ஆர்டர் வாங்கியுள்ளது.

இதனால் இந்தியாவிற்கு என்ன  பிரச்சனை என்பது நீங்கள் கேட்பது புரிகிறது?

ஒரு அண்டை நாடு, நம்மோடு நல்லுறவில் இல்லை என்றால் நமக்கு பொருளாதார இழப்பு, பாதுகாப்பு அச்சுறுத்துதல், அதுவே, நம் எதிரிக்கு அடைக்கலம் கொடுத்து அவரது வியாபாரம் மற்றும் ராணுவத்தை அந்நாட்டில் முகாமிடச்  செய்தால், நம்நிலை என்னவென்ற் சொல்வது?

அதுதான் இலங்கையில் நடக்கிறது. வெற்றி பெற்ற ஸ்ரீ சேனாவும் அவரை ஆதரித்த ரனில் விக்ரமசிங்கே, சந்திரிகா குமாரதுங்கா இருவரும் சீன எதிர்ப்பு, மேற்கு நாடுகள் ஆதரவு நிலைப்பாடு உள்ளவர்கள் இது நமக்கு சாதகமான அம்சம்!

தமிழர்கள் மற்றும் மைனரிட்டி ஓட்டுக்களை பெற்று வெற்றி பெற்றிருப்பதால், ஸ்ரீசேனா தமிழர்களுக்கு “உதவி செய்ய” கடமைபட்டவர்.... செய்வாரா? என்பது போக போகத்தான் தெரியும்!

இந்தியா தனது ராஜேந்திர உறவை சிறப்பாக பயன்படுத்தி வருவது ஸ்ரீலங்கா விஷயத்தில் கண்கூடு... ராஜபஷேவை “மீனவர்களை தூக்கு தண்டனையிலிருந்து” விடுவிக்க செய்தது முதல் செய்தி. ராஜபஷே ஆட்சி மாற்றத்தை தடுக்க “எமர்ஜன்சி” அறிவிக்க முயன்றதை தடுத்து நிறுத்துயது இரண்டாவது செய்தி. ஸ்ரீசேனாவை மோடி வாழ்த்தியது மட்டுமல்ல, இந்தியாவிற்கு வருகை தர அழைப்புவிட்டது மூன்றாவது செய்தி!


கடனில் மூழ்கியுள்ள ஸ்ரீலங்கா பொருளாதாரத்தை மீட்க இந்தியாவின் பங்கு மிக முக்கியமானது என்பது ஸ்ரீசேனாவிற்கு தெரியும். மோடியும் இதை பயன்படுத்தி, பொருளதார உதவிகள் மூலம் உறவு மற்றும் நட்பை வலுப்படுத்துவார்.

இவை செயலாக்கப் பெறும் போது, இலங்கை வாழ் தமிழர்களின் வாழ்விலும் முன்னேற்றங்கள் ஏற்படும்.தமிழ் நாட்டில் "தமிழ் வியாபாராம் "செய்துவரும் கட்சிகள் வியாபாராம் மூழ்கி போண்டியாகும் ..

Friday, January 9, 2015

தி.மு.க...கிணத்துக்குள் சூராவளி

     திமுக உட்கட்சி தேர்தல்கள் நடந்து முடிந்திருக்கிறது. இது கட்சியின் 12-வது தேர்தலாம்..... ஈ.வெ.ராமசாமி நாயக்கர் “கொள்ளுப்பேத்திவயதில் இருந்த மணி அம்மையை திருமணம் செய்ததால் அண்ணாதுரை, திராவிடர்  கழகத்திலிருந்து பிரிந்து, ஒரு “முன்னேற்றத்தைசேர்த்து (யாருக்கு முன்னேற்றம் என்பது இப்போது தான் தெரிகிறது) திமுக ஆரம்பித்தார்.
     இந்த “கொள்கை வித்தியாசத்தில்உதித்த திமுக பிற்காலத்தில் பல்வேறு “கொள்கைகளைஉருவாக்கி.... பதவிக்காக் பலி கொடுத்தது உலகறிந்த ரகசியம்.... திமுகவின் கதை முடியப்போகும் நேரம் வந்துவிட்ட போது, "இந்த கதைகளை" தொடர்ந்து என்ன லாபம்? சரி விஷயத்துக்கு வருகிறேன்.....
     இந்த கட்டுரையை நீங்கள் படிக்கும் போது திமுக தலைவராக 92-வயது கருணாநிதியும், 94-வயது அன்பழகன் அதன் பொதுச் செயலாளரும், 61-வயது ஸ்டாலின் (கருணாநிதியின் 2-வது மகன்) பொருளாளருமாக அறிவிக்கப்பட்டிருப்பார்கள்.
     இது தான் தெரிந்த விஷயமே! நீங்கள் புதிதாக என்ன சொல்லப் போகிறீர்கள் என்பது எனக்கு கேட்கிறது!

புதிது ஒன்றுமில்லை. புரியாதது ஒன்றை உங்களிடம் கேட்கப் போகிறேன்!
     கருணாநிதியின் மூத்த மகன் மு.க. அழகிரி... ஆரம்பம் முதலே கொஞ்சம் “அழுணிப்பிள்ளை”... சவலைப் பிள்ளை என்பார்கள்! ஸ்டாலினுடன் போட்டி போட்டு திமுக “தென்மண்டல அமைப்புச் செயலாளர்என்ற பதவி உருவாக்கப்பட்டு, மகுடம் சூடப்பட்டு, திருமங்கலம் பார்முலாஎன்ற புதிய “ஊழல் தேர்தல் யுக்தியைஉருவாக்கி, மந்திரிசபை கூட்ட்த்துக்கே போகாத மத்திய அமைச்சராகி, தனது மனதில் நினைத்ததை பேசும் “அம்மா பிள்ளை” ஆவார் ..
     தற்போது திமுக தன் வசம் தான் ஒப்படைக்கப்பட வேண்டும் என கடுமையாக போராடி வருகிறார். இதன் வெளிப்படையாக தனக்கு பதவி வேண்டும்என்பதை அம்மா மூலம் அப்பாவிடம் சொல்ல வந்த அழகிரியை “வாயைக் கிண்டிபத்திரிக்கைகாரர்கள் மனதில் இருந்ததை வெளியேற்றி விட்டனர்.
     திமுக திருடர்களின் கூடாரம்.... யார் திருடன் என்பது உங்களுக்கே தெரியும்.... திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை  ஒழிக்க முடியாது” “திமுக திருந்தினாலே தான் அதில் சேருவதை பற்றி யேசிப்பேன்”... என திருவாய் மலர்ந்து அருளினார்.
அழகிரியின் வார்த்தை ஒவ்வொன்றும் லட்சம் கோடி பெறும்.(2 ஜி  போல ) இதை கண்டித்து திமுக அமைப்புச் செயலாளர் R.S. பாரதி அறிக்கைவிட்டுள்ளார் வெறும் கண் துடைப்பு அறிக்கை....
     அழகிரியை “முதல்வர் பதவிக்குமக்கள் முன்மொழியவில்லை என “தினகரன்பத்திரிக்கை கருத்து வெளியிட்டதால், தினகரன் அலுவலகம் தீக்கரையாக்கப்பட்ட்து. இரண்டு அப்பாவிகள் எரிந்து சாம்பலாயினர்.
     அழகிரியின் வளர்ச்சிக்கு திமுக முன்னாள் மந்திரி தா. கிருஷ்ணன் தடையாக இருந்ததால், தா. கிருஷ்ணன் கொல்லப்பட்டார் என குற்றம் சாட்டப்பட்டபோது, “திமுக வில் இப்படி உட்கட்சி கொலைகள் சாதாரணம் தான்என கருணாநிதி திருவாய் மலர்ந்து அருளியதை யாரும் மறந்துவிட முடியாது.
     ஸ்டாலினுக்கு எதிராக, கருணாநிதிக்கு ஆதரவாக குஷ்பு கருத்து தெரிவித்ததால், அவர் வீடு தாக்கப்பட்ட்து... பாவம் பயந்து ஓடி அவர் காங்கிரசில் ஒளிந்து கொண்டார்.
     ஆக மகன்களை குற்றம் சொல்பவர்கள், தண்டிக்கப்படுவார்கள்! மகன்களுக்குள்ளே எழும் குற்றச்சாட்டுக்கள் மன்னிக்கப்படும்!

லட்சக்கணக்கான தொண்டனின் வேர்வையில், உழைப்பில் உருவான திமுக என்னும் ஆலமரம் அது உருவாக்கிய வழித்தோன்றல் “விழுதுகளை
நம்பாமல், “பழுதுகளால்முட்டு கொடுக்கப்பட்டிருப்பது---, அரசியலில் என்ன கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், கொள்கை மாறுபாடுகள் இருந்தாலும், அமைப்பு ரீதியாக வளர்ந்த கட்சி முறையில், திமுகவின்  “சரிவுவருத்தத்தை அளிக்கிறது.
     நமக்கு புரியாத விஷயம் கருணாநிதியின் உண்மையான ஆதரவு கட்சிக்கா? குடும்பத்திற்கா? குடும்பத்திற்குதான் என்றால் குடும்பத்தில் யாருக்கு? இந்த வாரிசுப் போரைமுடிவுக்கு கொண்டு வந்துவிட்டால், கடைசி காலத்தில் கருணாநிதிக்கு, மகன்கள் துணை வராவிட்டாலும், மன நிம்மதியும் ஆறுதலும் துணைவரும்
.
     குமுதம் குடும்பச் சண்டையை தீர்த்து வைத்த கருணாநிதிக்கு உதவ யாருமே இல்லையா? வைரமுத்துவும் – கி.வீரமணியும் கொஞ்சம் சமாதானம் செய்து பாருங்களேன்!.----பிளீஸ்

Thursday, January 8, 2015

”இந்துக்கள் 4 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்”…… சாஷி மகராஜ் பேசியது தவறா?










  உ.பி. மாநிலம் உன்னோவா லோக்சபா தொகுதியின் M.P சாஷி மகராஜ்... இவர் மனதில் பட்டதை மறைக்காமல் பேசுபவர். இவர் பேசுவதை ”மறைந்து நின்று” பார்த்து, ”மறந்தும்” உண்மை கலக்காமல். தலைப்புச் செய்தியாக வெளியிடுவது பத்திரிக்கைகளுக்கு தலையாய கடமை...ஆகி வருகிறது
.
     கோட்சே பற்றி இவர் பேசிய பேச்சை “பூதமாக்கி பெரிதுபடுத்தி ஒரு வாரம் செய்தியாக ஓட்டினார்கள்”... நிரஞ்ஜனா ஜோதி என்கிற தலித் இன பெண்,--- சாமியாரான இவரது பேச்சுக்களுக்கு “மதவாத உரைஎழுதி “ஒரு மாதம்அமர்களப்படுத்தினார்கள். தற்போது சாஷி மகராஜ் “இந்துக்கள் 4 குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்என்கிற பேச்சை அரசியலாக்கி ஊடகங்கள் “விவாத மேடைகளில்அரங்கேற்றி வருகிறார்கள்!
     அதிலும் கூட “பாதி பேச்சை மட்டும் பிரசுரித்துமீதியை மறைத்து விவாதம் நடத்துகிறார்கள்! ஆம் பாதியை மட்டும் போட்டால் தான்.... மீதியை மறைத்தால்தான்... “விவாதமேநடத்த முடியும்.
     சாஷிமகராஜ்... பேசியது என்ன. உ.பி. மாநிலம் மீரட் நகரில்.. ஒரு இந்து சாமியார்கள் மாநாட்டில் பேசியுள்ளார்.

“நாம் இந்துக்கள்... நாம் இருவர் நமக்கு ஒருவர்
என்கிற கொள்கையை கடைபிடித்து ஒரு குழைந்தை மட்டும் பெற்றுக் கொள்கிறோம். நாம் 4 குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும். ஒரு குழந்தையை ஆன்மீகத்துக்கு தத்துக் கொடுத்து சன்னியாசி ஆக்க வேண்டும். இன்னொரு குழந்தையை -நாட்டுக்கு தத்துக் கொடுத்து ராணுவ வீரனாக்க வேண்டும். குடும்பத்திற்கு ஆண் பெண் என இரண்டு குழந்தைகள் வைத்துக் கொள்ள வேண்டும்.
     இதில் என்ன தவறு இருக்கிறது. உடனடியாக இதற்கு எதிர்ப்பு..... மாபெரும் எதிர்ப்பு.... காங்கிரஸின் அபிஷேக் மனு சிங்வி கண்டனம்... ”உடனடியாக நரேந்திர மோடி இதற்கு பதில் சொல்லியாக வேண்டும். ராஜ் நாத் சிங்கும் நரேந்திர மோடியும் ஏன் மெளனம் காக்கிறார்கள்?” என தொடர்ந்தது மீடியாக்களின் செய்திகள்....

முதலில் ஒரு சில ஊடகங்களில் சாஷி மகராஜ் 4 குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்என்று பேசப்பட்டதாக மட்டும் செய்திகள் வந்தது. இதன் மூலம் சாஷி மகராஜையும் பாஜாகவையும், மோடி அரசையும் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு எதிராக பேசுவதாகவும் இந்திய மக்கள் தொகை கொள்கைக்கு எதிராக பேசுவதாகவும் குற்றம் சொல்ல வழிவகை செய்ய முயன்றார்கள்...
     மாறாக முழு பேச்சான, ”ராணுவத்துக்கு ஒருவர், ஆன்மீகத்துக்கு  ஒருவர், குடும்பத்திற்கு ஆணொன்று பெண்ணொன்று என்று சொன்னால் குற்றம் காண முடியாதல்லவா?
     எனவே இது “செலக்டிவ் அட்டாக்தொடர்ந்து ஊடகங்களும் காங்கிரசும் இதைத்தான் செய்து வருகிறது.
     இதில் வேடிக்கை என்னவென்றால், இது சம்பந்தமான பாஜக மற்றும் மோடி அரசை கண்டிக்கும் வகையிலான ஊடகங்களின் விவாதங்களில் முஸ்லீம் கட்சியினரும் கலந்து கொண்டு சாஷி மகராஜின் 4 குழந்தை பேச்சை கண்டிக்கின்றனர்.
     ”4 மனைவிகளின் 14 குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் இவர்களை கண்டிக்க ஊடகங்களும் மற்ற கட்சிகள்ம் வராது” என்கிற தெம்பு அவர்களிடம் உள்ளது.
     மோடி அரசின் வளர்ச்சிப் பாதையின் வேகம், ஊழலற்ற நிர்வாகம், ஊடகங்கள் கண்களை உருத்துவதால், குறைகள் கண்டுபிடிக்க வாய்ப்புகளே கிடைக்கததால், அர்த்தமற்ற, ஆக்க பூர்வமற்ற “டீக்கடைபேச்சுக்களை, ”திண்ணை லாவணிக் கச்சேரிகளை”.. காங்கிரசும் ஊடகங்களும் நடத்தி வருகின்றனர்.
     இன்னும் கொஞ்சகாலம் ஊடகங்கள் நிலை பரிதாபம்தான். காங்கிரஸ் கொடுத்த மாதிரி “ஊழல்செய்திகள் பாஜக கொடுக்காத்தால் வந்த ஏக்கம் இது!
     ஆனால்,கொஞ்ச காலத்துக்குள் ஊடகங்கள் வளர்ச்சி பற்றி செய்தி வெளியிடும் கட்டாயத்துக்கு மக்களால் தள்ளப்பட்டுவிடும். அப்போதே..அப்போது மட்டுமே  ஊடகங்களின் ஆக்க பூர்வ செயல்பாடுகள் ஆரம்பமாகும்.

Monday, December 1, 2014

ஹெச்.ராஜா..பேசியது..சரியா?

அடிப்பது குற்றம் இல்லை--அழுவதுதான் குற்றம் என்றால் --ராஜா பேசியது தவறுதான்..

கூட்டணிக்காக தன்மானத்தை விட்டுத்தருவது சரி என்றால்-- ராஜா பேசியது தவறுதான்..

ஒரு கட்சியின் தலைவரும்... நீண்ட அரசியல் அனுபவமுள்ள “வைகோ”--- தீப்பொறி ஆறுமுகம் ரேஞ்சுக்கு இறங்கி வந்து பேசியது சரி என்றால்-- ராஜா பேசியது தவறுதான்.. 
பேச்சில் எது சரி?--எது தவறூ ? என்று யார் தீர்மானிப்பது?தமிழருவி மணியனா?--ஜி.ராமகிருஷ்ணனா? 
அரசியல் நாகரீகம் என்பது என்ன?--அதையும் யார் நிர்ணயிப்பது?--ஈ.வி.கே.எஸ். இளங்கோவ்னா? 
போதை மருந்து கடத்தல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கபட்ட 8 மீனவர்களில், ஐவர் இந்தியர்--மூவர் இலங்கையை சேர்ந்தவர்கள்..தண்டனை அறிவிக்கப்பட்ட 18 ஆம் நாள் அவர்கள் ( 5வர்) பொது மன்னிப்பு வழங்கப்பட்டு இந்திய மண்ணில் “சுதந்திரமாக” 
இறங்கினர்.. 
இது எப்படி சாத்தியமாயிற்று?--யாரால் விடுதலை கிடைத்தது?--
காத்மாண்டு நகரில், “சார்க்க்” மாநாட்டில், இலங்கை அதிபர் ராஜபக்‌ஷே --மோடி அவர்களின் வேண்டுகோலினால்தான் விடுதலை செய்தேன்..என்று சொல்லியுள்ளார்.. 
இதற்கு கருணாநிதி உட்பட அனைத்து அரசியல் கட்சிதலைவர்களும் மோடிக்கு நன்றி சொல்லும் போது கூட்டணியில் உள்ள “வைகோ” மட்டும் விடுதலையை” நாடகம்”-- என்று சொல்லுவது எந்த ”அரசியல்”--”கூட்டணி”--”நியாயம்”-”-தர்மம்”-- என்று அவர்கள் கட்சிக்காரர்களே சொல்லட்டும்.. 
வைகோ இதை நாடகம் என்று சொன்னதை புரிந்து கொள்ள முடிகிறது ..காரணம் “இலங்கை பிரச்சனை “ வைகோவிற்கு வியாபாரம்--என்று அநாகரீகமாக சொல்லமாட்டேன்..வாழ்வாதாரம்..மோ--டியால் அது ”முடியும் நிலைக்கு”- வந்துவிட்டதால் ஏற்பட்ட “குமுறல்”..அதன் வெளிப்பாடே இந்த “வார்த்தை பிறழல்கள்”--அல்லது தடித்த வார்த்தைகள்.. 
இலங்கை வடக்கு மாகாண முதல்வர் திரு. விக்னேஸ்வரன்...”இலங்கை தமிழர் விஷயத்தில் இந்திய கட்சிகள், தயவு செய்து வாயை மூடிக்கொள்ளுங்கள்--உதவியும் வேண்டாம்--உபத்திரமும் வேண்டாம்”--நாங்கள் இலங்கை அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டே தீர்வை செய்து கொள்கிறோம்..” என்ற பிறகும்-- வைகோ--”வாக்கெடுப்பு நடத்த கோருவதும்”--அதற்காக ”காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்த  இந்தியா தயங்குவதால்தான்..இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்க வில்லை” என தேசதுரோக பேச்சை பேசுவதும்- நமக்கு ஆச்சரியமான விஷயமில்லை.. 
காரணம்...இவரும் இவரது மாஜி தலைவர் கலைஞரும், அரசியல் சட்டத்தை எரித்த வழக்கில் தண்டனைக்கு பயந்து கோர்ட்டில் “ அரசியல் சட்டம் என எழுதி--வெறும் காகிதத்தைத்தான் எரித்தோம்” என்று ஜகா வாங்கி  விடுதலை பெற்றார்கள்.. 
“அடைந்தால் திராவிட நாடு--இல்லையேல் சுடுகாடு” என்ற கோஷத்தையும் தீயிட்டு எரித்த நிகழ்வுகள் நமக்கு இன்னும் அடக்கமுடியா சிரிப்பை வரவழைத்து கொண்டுதான் இருக்கிறது. 
எனவே இவை திராவிட கட்சிகளின் “ஸ்டைலான” “போர் முழக்கம்”-- 
இது வடிவேலுவின் மிரட்டல் காமெடி..ஆனால் வடிவேலு மத்திய உள்துறை அமைச்சரையும், நாட்டின் பிரதமரையும் ஒருமையில் அழைத்தால், “வா--போ---வாடா--போடா”--என கைத்தட்டலுக்காக பேசினாலும், சட்டங்களும் போலிசும் ந்டவடிக்கை எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் அது நம்  கவலை இல்லை....,  
ஆனால், ஒரு கட்சியின் தலைவனையும் , உலகநாடுகளில் இந்தியாவின் மதிப்பை உச்சத்திற்கு கொண்டு சென்ற மோடி அவர்களையும், இழித்து..பழித்து பேசுவதை யார் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பார்கள்?
 
அப்படிப்பட்ட “ஜடமாக” பாஜகவினர் வளர்க்கப்பட வில்லை.. 
சகதி எடுத்து வீசி--துர்நாற்றநீரை உமிழ்ந்தவர் வைகோ---அதை நவம்பர் 12 சென்னை செயற்குழுவிலேயே கண்டித்தோம்..வைகோ அடங்கவில்லை..தொடர்ந்து அவரின் அநாகரீகம் தொடர்கிறது.. 
நவம்பர் 27 சென்னை பொதுக்கூட்டத்தில், மீண்டும் அவர் பேசிய விதம், விஷயம், அனைத்து அரசியல் கட்சிகளாலும் கண்டித்திருக்கப்பட வேண்டிய விஷயம்.. 
மாறாக-- பலமுறை எச்சரித்தும், எல்லை மீறிய வைகோவை, அவருக்கு புரியும் மொழியில், ராஜா எச்சரித்தது தான் தவறா? 
ஜி.ராமகிருஷ்ணனும், இளங்கோவனும், மணியனும் வைகோவிற்கு வக்காலத்து வாங்குவதற்கு காரணம், அவர்களுடைய “தோலின் சென்சிவிட்டி”--அவ்வள்வுதான்.. 
இன்னும் நிறைய பாஜக எதிர்ப்பு கட்சிகள் வைகோவிற்கு ஆதரவு தெரிவிக்கலாம்..

தலைவனை காக்க  வேறு வழியில்லாமல் அவரது தொண்டர்கள் சிலரும் ராஜா வீட்டை முற்றுகை இட்டு பரபரபேற்றலாம்..

ஆனால் ஒன்று..வைகோ உணர்ச்சிவயப்படுதலிலேயே காலத்தை ஓட்டுபவர்..தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வரும் வைகோவிற்கு, இப்போது பாஜக கூட்டணி-- சட்டமன்ற தேர்தலில் வெற்றிக்கனியை பறிக்கும் சந்தர்ப்பத்தை உருவாக்கி தந்துள்ளது.

வைகோ எப்போதும் “அதிர்ஷ்ட்ட கட்டை” என்பார்கள்..இந்த சனிப்பெயர்ச்சி வைகோவிற்கு சரியில்லை போலும்..அதனால்தான் அவர்து “நாக்கில் நர்தனமாடி” இப்படி சனி ஊறு விளைவிக்கிறான்..

எதுவாயினும், 70 வயதை கடந்துவிட்ட வைகோவிற்கு இனி எதிர்காலம் எப்படி இருந்தால் என்ன?

என்னுடைய கவலை எல்லாம் அவரையே நம்பி இருக்கும்..திறமை மிக்க நல்லுள்ளம் கொண்ட பல ஆயிரம் தொண்டர்களை பற்றியதுதான்..

போகிற போக்கில் என்ன வேண்டுமானாலும் பேசிவிட்டு போக முடியாது வைகோ--புரிஞ்சுக்குங்க---

.

Friday, October 10, 2014

"ஜெ " கைது "ரியாக்ஷன்" சிநிமாத்தனமாக

சினிமா கதாநாயகன்/  நாயகி,..சாதாரண சட்டை --அதுதான்-நாம்  போடும் சட்டை..போல்.. அணிந்திருந்தால் அவன்/ அவள் ..சினிமா கதாநாயகன்/ நாயகி அல்ல..

பத்து பேரோடு பால் குடம்..ஐந்து பேரோடு  அலகு குத்தி,  காவடி,--8 பேரோடு  தீமிதி,---முன்று பேரோடு  அங்க பிரதக்க்ஷ்ணம்---செய்தால் அது   சினிமாத்தனம்  அல்ல ..

108 பால் குடம்--1008 அலகு  குத்தல்,----5008 தீமிதி,-- 508 அங்கபிரதிக்ஷனம்,--செய்தால் அது   சினிமாத்தனம் ..அதாவது அம்மாவை  விடுதலை கோரி அதிமுக காரன்   செய்தது போல-- .

 மந்திரிகள் பதவி ஏற்பு விழாவில் --முதலில் பதவி ஏற்பவர் கேமரா பார்க்கும் படி, கரீசிப்பால் கண்ணை துடைத்துக்கொள்கிறார்..அம்மா படத்தையும் அதேபோல் கேமரா பார்க்கும்படி  வெளியே எடுத்து வைத்து பதவி ஏற்கிறார்.

அவருக்கு பின்னால் வந்தவர்கள், "இவருக்கு" , சளைத்தவர்கள் இல்லை என்பதை  காட்டுவதற்காக "--விதவிதமான""தழுதழுத்த குரல்களில்""சிணுங்கி--குலுங்கி " அழுகிறார்கள்..டைரக்டர் மணி ரத்னமும்,  ஷங்கரும்,வந்து பார்த்துவிட்டு போனால், "கதைக்கும்--கதாநாயகனுக்கும்"--
"புதிய ஆங்கிள் " .கிடைக்கும்... .
  வேலூரில் தீமிதிப்பு,முப்பாத்தம்மன் கோவிலில் பால்குடம்,--குடந்தையில் யாகம், குமரியில் முளைப்பாரி, தேனியில் மண்சோறு, மதுரையில் அரிவாள் நேத்திகடன், பழனியில் மொட்டை என ஊருக்கு ஊர் "மாறுபட்ட ரோலில்" உடன்பிறப்புக்கள் ஆர்பாட்டம்..

, கண்ணீர் சிந்தல்கள், அம்மாவிற்காக கர்ஜனையுடன் பிரார்த்தனைகள், --பெற்ற அம்மாவிற்காகவும், உடன்பிறந்த சகொதரிகளுக்காவும் "அம்மாவின் இந்த உடன் பிறப்புக்கள்" ஈப்டி பிராத்தனை செய்திருப்பார்களா?

""தெய்வத்துக்கு சிறையா ?"---

"கர்னாடகாவே -- காவிரியை எடுத்துக்கொள்-- அம்மாவை விட்டுவிடு?"
" அம்மாவே வாயுபகவான்..உன்னோடு பெங்களுருக்கு வந்துவிட்டதால் ?--தமிழகத்தில் நாங்கள் முச்சுவிட திணறுகிறோம் --உடனே அனுப்பிவிடு அம்மா?"--
 இதைவிட பெரிய சினிமாத்தனம் --அமீருக்கும்--சீமானுக்கும், பாரதிராஜாவுக்கும் தான் .தெரியும்
அம்மா இத்தனை  நாட்கள் ஏசியில் இருந்து சலித்துப்போய் --ஒரு மாறுதலுக்காக "டிசியில்"( டிவைன் செல்) இருக்கிறார்.
பெங்களுருவின் இயற்கையான  குளிர்ச்சியும்,பரப்பர அக்ரஹார "புளியோதரையும், தயிர்சாதமும்," அம்மாவுக்கு அவர்களின் "அம்மாக்கால" நினைவுகளை ரீங்காரம் இடலாம்..
அன்பிற்கினிய  ரத்தத்தின் ரத்தமான அதிமுகவின்  உடன்பிறப்பே---நீ  போய் -பெங்களுரு சிறை --கோர்ட்டுமுன் "கத்தி--கோஷம் போட்டு, "ஜட்ஜுகளை "உசுப்பேத்தி",..வெளியே வரவேண்டிய உன் அம்மாவை--உள்ளே தள்ளிவிட்டாயே..

 ..இதற்கு உன் "சினிமாத்தனமான"---நடவடிக்கைகளும், ஆர்ப்பாட்டங்களும் தான் காராணம் என்றால் நீ  நம்பவா போகிறாய் உடன் பிறப்பே ..
சுப்ரீம் கோர்ட்டிலாவது உன் அம்மாவிற்கு பெயில் கிடைக்க வேண்டும் என்றால் உடன்பிறப்பே ---
பால்குடம் எடு-----ஆனால் அது பக்தியோடு---பணிவாக --கனிவாக--காதும் காதும் -வைத்தமாதிரி-தனியாக -- நீயாக எடு.-.கேமராவை  கூட்டிச்செல்லாதெ --ஜெயா டிவிக்கு "சிடி"கொடுக்காதே..பேஸ் புக்கில் போடாதே
அப்போது--அப்போதுமட்டுமே இது இயல்பானது..எதார்த்தமானது ..
அதுதான் " ஆண்டவனை மயக்கும்..கோர்ட்டை  மடக்கும்,அம்மாவை விடுவிக்கும் "--செய்வாயா?

Tuesday, October 7, 2014

”ஜெ”யை விடுவிக்காவிட்டால்…----?????????


“ஜெ”யை விடுவிக்கக் கூடாது என்பதோ..”ஜெ” வை விடுவித்தே ஆகவேண்டும் என்பதோ என் கருத்து அல்ல..

“ஜெ” கைது சரி என்றோ..”ஜெ” யுக்கு கொடுத்த தண்டனை தவறு என்றோ நான் எழுதப்போவதில்லை..

இந்தியாவின் நீதித்துறை—சட்டம் எல்லாம் மே மாதம் 26 ந்தேதிக்கு முன்பாக “ஒரு மாதிரியாகவும்”, தற்போது “வேறு ஒரு மாதிரியாகவும்”, அதாவது “தள்ளாடாமல்” –சுத்ந்திரமாக, “தன்காலில்” நின்று செயல்படுகிறது..அதனால்தான் எழுதப்பட்ட தீர்ப்புக்கள் ”திருத்தப்படாமல்” வாசிக்கப்படுகின்றன..இங்கே “நீதி விற்பனைக்கல்ல” என்ற நிலை எழுந்துள்ளது..ஆறுதலான விஷயம்..

அது போகட்டும் ,,விஷயத்துக்கு வருகிறேன்..”ஜெ” யின் “வழக்கு தீர்ப்புநாள்” மற்றும் இன்று அதாவது “ஜாமீன் மனு தீர்ப்பு நாள்” இரண்டுக்கும் சில ஒற்றுமைகளை நான் பார்க்கிறேன்..

செப்டம்பர் 27ந்தேதி “தீர்ப்பு” நாளன்று..பகல் 1.00 மணிவரை “தீர்ப்பு” தண்டனையில் முடியுமென்று..யாராலும் ஊகிக்க முடியாத படி கோர்ட்டின் செயல்பாடுகள் இருந்தது..3.00 மணிக்கு “ஜெ” குற்றவாளி—5.00 மணிக்கு தண்டனை விவரம் அறிவிப்பு வெளியானது..

அதெமாதிரி அக்டோபர் 7-ந்தேதியான இன்று..மாலை 4.00 மணிவரை, இடையில் அரசுதரப்பு வழக்கறிஞர் பவானி சிங்கின் “ஒரு பல்டியினால்” ஏர்பட்ட தற்காலிக “ஆரவாரம்” தவிர “ஜாமின் நிராகரிப்பு” இருக்கும் என யாரு கணிக்க முடியாத சூழல் இருந்தது..இவை இரண்டும் ஆட்சியாளர்களை விட நீதி மன்றத்தின் மேலாண்மை உயர்வானது என்பதற்கான ஒரு சிக்னல்..…

ஒரு சாமானியனாக எனக்கு இரண்டு விஷயங்கள் மனதில் தோன்றியது..

ஒன்று---”ஜெ” கைதுக்கும் “ஜாமீன் மறுப்புக்கும்” அதிமுகவினர் ஏன் இவ்வளவு “ரவுஸ்” விடுகின்றனர்..அப்படி என்ன-- “ஜெ” கைது செய்யப்படக்கூடாத—கைது செய்யப்பட முடியாத..”ஸ்பெஷல் பிறவியா”?—”ஜெ”வை விடுவிக்காவிட்டால், காற்று வீசுவது நின்றுபோகும்?—எப்போதாவது பெய்யும் ம்ழையும் கூட பொழியாது போகும்?—திருப்பூர் சாய ஆலைகள் கழிவு நீரை “பூரணமாக சுத்திகரித்து “வெளியில் விடுவர்?—என்பதெல்லாம் நடந்து விடுமா?

இரண்டு—அதிமுகவினர், கருப்பு சட்டை அணிவது.., , வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுவது, சாலையில் படுத்து புரண்டு போராட்டம், அலகு குத்தி, தீ மிதித்து, காவடி எடுத்து, ஊர்வலம் போவது, பதவி ஏற்பில் “அழுதுகொண்டே” உரை வாசிப்பது, --இவை யாவும், ”கேமராவோ, வீடியோவோ படம் பிடிக்காது,” என்று சொன்னால், அப்போதும் இதுபோல செய்வார்களா?

எழுதக்கூடாது என்றுதான் நினைக்கிறேன்..இருந்தாலும் உள்ளுக்குள்ளே உருத்திக்கொண்டிருக்கும் உண்மை எழுதத்தூண்டுகிறது..

சங்கராச்சாரியார்—சங்கராச்சரியார் என்று மடத்துக்கு அதிபதி..ஜெயேந்திரர் என்று பெயர்..தவறு செய்தாரா?—தண்டனைக்கு உரியவரா? என்பதெல்லாம் எனக்குத்தெரியாது..இன்னும் சொல்லப்போனல் நான் மனிதர்களை வணங்குவதில்லை..என் தாய், தந்தை, குரு தவிர.--.எனவே எனக்கு ‘ஜெயேந்திரர்” மீது எனக்கு எந்த ஈர்ப்பும் “சாஃப்ட் கார்னரும்” கிடையாது.

ஆனால் லட்சோபம் லட்சம் இந்துக்கள் புனிதமாக கருதும் ஒரு மடத்தின் அதிபதியை, தர்மம், நியாயம், சாஸ்திரங்களை மீறி, நள்ளிரவில், “விசாரணைக்கு மட்டும்தான்”—வந்து போ—என சொல்லி, அரசு பணத்தை லட்சக்கணக்கில் செலவு செய்து, தீவிர வாதியை பிடிப்பது போல ஹெலிகாப்டரில்  ஆந்திரா சென்று, இழுத்து வந்து, கைய்யில், சந்நியாசி வைத்திருக்கும் “தண்டத்தோடு”, சிறைச்சாலைக்குள் தள்ளிய காட்சி---, அப்ப..பப்பா?—

பிரபல பெண் எழுத்தாளர்கள், திரைப்பட நடிகைகளை எல்லாம் விட்டு, “எனக்கு சாமியாரோடு தொடர்பு உண்டு “ என அறிக்கை விடச்சொன்ன அநியாயம்..

அந்த மகானுபாவரின் “நெஞ்சு” எப்படி “வெந்து” இருக்கும்?—அந்த “மாமடத்தின்” மானம் எப்படி காற்றில் பறந்திருக்கும்??—”வாய்தா—வாய்தா””என எத்தனை முறை, அந்த பாதங்கள், கோர்ட் படி ஏறி இறங்கி இருக்கும்?

இவை எல்லாம் இப்போது நினைத்து பார்க்க காரணம் என்ன?—ஒரு பழமொழி நினைவுக்கு வந்தது,

,”தெய்வம் நின்று கொல்லும்”--.,

இந்து தர்மம் சனாதனமானது..புராதனமானது…இப்பிறவியில் செய்த பாவபுண்ணியங்களின் கணக்கு, இப்பிறவியிலேயே “சரி செய்யப்படும்”
—”நோ டேக்கிங் ஓவர்”—நோ கேரி ஃபார்வர்ட்”

இது “ஆச்சாரியாருக்கும் பொருந்தும்—ஆட்சியாளருக்கும் பொருந்தும்”

சரி பிளாஷ் பேக் முடிவுற்றது..சப்ஜெட்டுக்கு வருகிறேன்..

“ஊழல் என்பது மனித உரிமை மீறலாம்---ஊழல் வாதிகளுக்கு “ஜாமீன்” அடிப்படை உரிமை இல்லையாம்—

இதை கர்னாடகா ஹைகோர்ட் மட்டும் சொல்லவில்லை—ஐ.நா. மனித உரிமை கமிஷன் கூட சொல்கிறது..

சொல்வதை சொல்லிவிட்டேன்..திருந்த வேண்டியவர்கள் திருந்தினால் திருந்தட்டும்..இல்லாவிட்டால்---

காலம் –திருத்தும்—