Pages

Thursday, June 2, 2011

வீட்டுக்குள் போன ”நிதியால்” ரோட்டுக்கு வந்த “நிதிகள்”




“அஸ்ட்ரோ ஏஷியா நெட்வொர்க்” என்பது ஒரு லெட்டர்பேட் கம்பனி…இந்த லெட்டர்பேட் இன்னொரு லெட்டர்பேட் மேக்ஸ் எனபதின் பினாமி..ஏர்செல் என்னும் செல்போன் கம்பனியை வாங்கியுள்ளது..

இது தயாநிதி மாறன் “தயவால்” நடந்ததால்..அந்த “தயவுக்கு “ கைமாராக ரூ.840 கோடி தயாநிதி மாறன் அண்ணன் கலாநிதி மாறனுக்கு தரப்பட்டுரிக்கிறது..அதாவது “டெக்னிக்கலாக”…முதலீடு செய்யப்பட்டுரிக்கிறது..

தாத்தா..கருணாநிதி கம்பனி கலைஞர் டிவி..சாஹித் பல்வாவிடமிருந்து கடனாக ரூ.210 கோடி பெற்றது..அதாவது கையூட்டை..டெக்னிக்கலாக..கடனாக வாங்கி..கண்ணு கனிமொழி கம்பி எண்ணுது….

இப்போது “டெஹல்கா” பத்திரிக்கையோடு சேர்ந்து வடக்கித்திய பத்திரிக்கைகள் அனைத்தும் தயாநிதியை துரத்தோ துரத்து என்று துரத்து கிறது..

இம்முறை தயாநிதி தப்பிவிடமுடியாது…தடுக்கிவிழத்தான் முடியும்..அது என்ன கர்மமோ சோனியாவை “ஆன்டி”என யார் அழைத்தாலும்..அவர்களுக்கு “திஹார் ஜெயிலில்ல”…ரூம் தயாராவது தவிற்கமுடியாதது ஆகிவிட்டது..

சோனியாவை “ஆன்டி” என்றழைத்த கனிமொழி முதல் ஆளாய் திஹாருக்கு போயாகிவிட்டது..தம்பி தயாநிதி ரொம்ப நாளா சோனியாவை ஆன்டி என்கிறார்..சனி கொஞ்சம் ஸ்லோ..ஆனா இப்ப புடுச்சுடுச்சு..தயாநிதிக்கு திஹார்ல ரூம் ரெடியா இருக்கு..போகிற தேதிதான் முடிவாகல்ல

“மக்கள் நிதியை” வீட்டுக்கு கொண்டுபோனதால்
தயா..கலா..கருணா..”நிதிகள்” ரோட்டுக்கு வருகிறார்கள்

1 comment:

M.Mani said...

2ஜி ஊழல் ஆரம்பம் ஆனது இவர் மந்திரி ஆன பின்னர்தான். ஆனால் தாமதமாக வெளிவருகிறது.