Pages

Tuesday, October 4, 2011

” மெகலோமேனியா “—மோடியா…நேரு குடும்பமா ?



சஞ்சீவ் பட்மீது காங்கிரஸுக்கு ஏனிந்த காதல் ?---மோகம்---கவலை..

பதவி நீக்கம் செய்யப்பட்ட குஜராத் ஐ.பி.எஸ். ஆஃபீஸர்..சஞ்சீவ் பட்டின் பூர்வாசிரமம் என்ன ?—காங்கிரஸின் கையாள்…மாநிலத்தின் எதிர்கட்சி தலைவரின் ( காங்கிரஸ் )மிக நெருங்கிய நண்பர்..



காங்கிரஸுக்காக அரசுக்குள்ளிருந்து ஒற்றர் வேலை பார்த்து..சோனியாவிற்கு தெரிவிப்பது…இப்படி மோடிக்கு எதிராக—காங்கிரஸுக்கு ஆதரவாக –உதவி செய்தவரை கைவிட்டால்---அவர் போலிஸ் புத்தியை காண்பித்து—காங்கிரஸை காண்பித்து கொடுத்து விட்டு அப்ப்ரூவர் ஆகிவிட்டால்—



காங்கிரஸ் ஆட்சியின் போதுதான் இவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் வழக்குகளும் பதியப்பட்டிருந்தது…அதிலிருந்து தப்பிக்கும் அவர் முயற்சிக்கு அன்று காங்கிரஸ் உதவவில்லை..இன்று அரசியல் காரணக்களுக்காக அவரை காங்கிரஸ் பகடை காயாக உருட்டுகிறது.



அபிஷேக் ” சிங்-” வி—என்ற “ நரி “வி—” குரு “வி---விரக்தியின் எல்லைக்கே போய் சொன்ன வார்த்தைகளை பாருங்கள்..

குஜராத்தில் மோடியின் வார்த்தைகளே சட்டமாம்—மோடியின் புருவம் அசைந்தால் ஜனநாயகம் சாகடிக்கப்படுமாம்---மோடி தும்மினால் பார்லிமெண்ட்டே ஸ்தம்பிக்குமாம்---மோடி ஒரு அதிகார வெறி பிடித்த மனநோயாளியாம்…ஆஹா..என்ன வர்ணனை..என்ன வர்ணனை---சினிமாவுக்கு வசனமெழுத போகலாம்.



அன்று 1975 இல் எமெர்ஜென்சியில்..இந்திரா காந்தி தும்மினால் இந்தியா தும்மியது..இந்திரா கண்னசைத்தால் சட்டம் சதிராடியது..கோர்ட் குப்புற அடித்து படுத்துக்கொண்டது..

இந்திரா கை காட்டியதால் “ ஜேபி “ உள்ளிட்ட லட்சக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு விசாரணை ஏதுமிண்றி 25 மாதம் காலாகிரகத்தில் இருந்தனர்.

சஞ்சய் காந்தியின் ஜனநாயக படுகொலையால் டில்லி துர்க்மான் கேட்டில் ஆயிரக்கணக்கோனோர் கட்டாய குடும்பக்கட்டுப்பாடு ஆப்பரேஷன் செய்யப்பட்டனர்.



நேரு கண்ணசைத்ததால் ஊழல் கிருஷ்ணமேனன் தப்பித்து கொண்டார்..இந்திரா கண்ணசைத்தார்..ஜனநாயகம் சிறைச்சாலைக்குள் போய் ஒளிந்துகொண்டது..

ராஜிவ் கண்ணசைத்தார் “போஃபர்ஸ் ஊழல் புகழ் கொட்ரோச்சி “ஜாலியாக “வலம் வந்தார்..இன்று சோனியா கண்ணசைப்பில் மாப்பிள்ளை “ ராபர்ட் வடோதரா” எண்னிலடங்கா லட்சம் கோடிகளை சந்தடியின்றி குவித்துள்ளார்..




இப்படி சர்வாதிகாரிகளும் கொள்ளைக்காரகளும் கொண்ட காங்கிரஸ் கும்பலில் வளர்ந்ததால் அபிஷேக் சிங்விக்கு அந்த நினைப்புதானே வரும்..

கசாப்புக் கடைக்காரன் வளர்க்கும் கிளி--” வெட்டு--குத்து “ என்று தான் பேசும் --காங்கிரஸ் கசாப்புக்கடை--கிளி--சிங்வி...இப்படி பேசுவது-- ஆச்சரியமில்லையே..

ஆக -----அதிகார வெறிபிடித்த “மெகலோமேனியாக் “ கும்பல் சோனியாவா—மோடியா முடிவு செய்யுங்கள்..

5 comments:

முத்துசாமி said...

காங்கிரசுக்கு நல்ல சாட்டையடி. இந்திய நாட்டில் இந்தியன் ஆளாமல் இத்தாலிக்காரி ஆள்வது கேவலமானது தான். மோடி வந்தால் இந்தியாவும் ஒரு வல்லரசு தான்

LOVE EVER HURT NEVER
Muthusamy@balu
QA/QC Mechanical Engineer
DOOSAN Heavy Industries and Construction
Jebel Ali 'M' Station
Dubai

Bharathram.V said...

Present congress having these kind of trends.
a) For any issues they'll ask either of these (Singhvi, Digvijay
Singh, Kapil Sibal, Manish Tiwari) to make a blind denial irrespective
of sensitivity of the issue.
b) After 3 days they themselves slowly climb down or saying it was mis
intrepreted.
c) This action is followed by Manmohan giving a special press meet
where he said we are commited to eradicate corruption. We have zero
level tolerance.
d) The new addition recent to this was Manmoham himself giving
certificate saying those ministers/MP who are accused, having his full
confidence. Seems like that needs to be accepted by courts/judges....

I think opposition is divided fully on communal lines these people are
sailing. Def.ly they will pay for this sometime.

Anonymous said...

Useless and biased article, full of anti congress and pro BJP political view. Criminal waste

பூங்குழலி said...

மோடி நேரு குடும்பம் இரண்டுமே மெகலோமேனியா கொண்டவை தான் .தேசத்தின் தலைஎழுத்து இப்படி இருக்கிறது

pasu.raghavan said...

அஆஹா.... அருமை.... சரியான நேரத்தில் சரியான பதிலடி. தூள்