Pages

Sunday, October 16, 2011

மகேஷ் குமாரின் மரண வாக்குமூலம்



ஆண்--பெண் உறவு---கணவன் மனைவி நெருக்கம்---காதலன் --காதலி  ஈர்ப்பு---
சிதைந்து போனதா--உடைந்து போனதா?--இளைத்து..சிறுத்து..கருத்துப் போனதா?

அடுக்கடுக்கான கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம் என்கிறது மகேஷ் குமார் மனைவி “சியாமளாவின் “ கொலை

“சீதையை “ தேடிய ராமனுக்கு --சில்க் ஸ்மிதா போன்ற மனைவி அமைந்ததால்--கணவன் மகேஷ் குமார் ராமனுக்கு பதிலாக “வீரபத்திரனாக “மாறிய சோகம் .அரங்கேறியது...

”பெண்ணியம் “ களங்கப்பட்டு விட்டதா?--தகவல் தொழில்நுட்பம்..உலகமயமாக்கல்..கலாச்சார சீரழிவை விதைத்து வருகிறதா?---டி.வி.க்களும்--எஃப்.எம் களும் சமூகசீரழிவை “பாலூற்றி “ வளர்த்து வருகிறதா?--ஒழுக்கம் அறவே கெட்டு விட்டதா?--

இப்படி குமுறும் நெஞ்சங்களுக்கு வடிகால் ஏது?--நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோமா?--நாம் நல்லவர்கள்---இவைகளால்தான் நாம் கெட்டுப்போனோமா?

தற்கொலை செய்துகொண்ட மகேஷ் குமாரின் 26 பக்க கடிதம்--நிச்சயமாக ஒரு “சம்மட்டி அடி “---நம் சிந்தனையை சீண்டும் ஒரு சாட்டை அடி..

ஒரு நடுத்தர குடும்பத்து பெண் ...அடிப்படை வசதி வேண்டி ..வேலைக்கு போனாள்..அங்கு எப்படி எல்லாம் பல ஆண்களை சொக்க வைத்தாள்--சிக்கி மகிழ்ந்தாள்..எனபதும்..

திருமணமான பின்பும்..எப்படி அவளது ஆண் தொடர்புகள் தொடரவும் ..பெருகவும்...செய்தது என்பதையும்..

மகேஷ் குமாரின் மரண வாக்குமூலம் தெளிவு படுத்துகிறது.அப்பெண்ணின் மீதிருந்த காதல் வசத்தாலோ...அல்லது..தனது “கையாலகாத தனத்தாலோ “அவனால் அவளை சகித்து கொள்ள முடிந்தது..சகிப்புத்தன்மை சருக்கியபோது..சியாமளாவின் கழுத்து இருகியது..

மகேஷ் குமாரின் கடிதம் தன் குலம்..கலாச்சாரம்...பெண்ணின் பெருமை...குடும்ப பாசம்..என சோகம் பிழியும் “சொர்ண புஷ்ப மாலை “யாக கட்டப்பட்டிருந்தது.

இதே மாதிரி காதல் கொலைகள்..கணவன் மனைவி கொலைகள்.பலப்பல.நடந்திருக்கலாம்..அவர்கள் செயலின் “கரு “ தெரியாததால்...மகேஷ் குமாரின் மனக்கிடக்கை..கடிதத்தின் மூலம் வெளிப்பட்டதால்..இக்கொலை வித்தியாசமான..படிப்பினையான..பாடம் சொல்வதாக உள்ளது...

கள்ள உறவு கொள்வதும்.... பலபேரிடம் கபட நாடகம் ஆடுவதும்..கண்ணியக்குறைவாக நடந்து கொள்வதும்...அதை செய்பவர்களுக்கு “தவறு “ என தெரியாதா?--சிறு வயதில் நாம் அவர்களுக்கு நல்ல பாடம் புகட்டவில்லையா?--நம் நீதி நூல்களும் பெரியோர்களும் தொடர்ந்து “போதித்துக்கொண்டிருப்பது “ இவர்கள் காதில் விழுந்ததில்லையா?  நாம்..நாமாக தேடிக்கொண்ட “கெட்ட பழக்கங்களுக்கு “ மேநாட்டினரைத்தான் நாம் குற்றஞ்சொல்லவேண்டுமா?

குடும்ப ஒழுக்கம் --சமூக ஒழுக்கம் எந்நாட்டினரையும் விட நமக்கு அதிகமாகவே புகட்டப்பட்டிருக்கிறது..இது நம் ரத்தத்தோடு கலந்தது..எத்தனை புரட்சி வந்தாலும் இவை மிரளாது..மாறாது..ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்கு அவர்களே பொறுப்பு...அவர்களை நாம் தொடராமல் நம்மை காத்துக்கொள்வோம்..

அப்போது ....சமூகம் சீரழிவில் சிக்காமல் இயல்பாகவே தன்னை பாதுகாத்துக்கொள்ளும்..

7 comments:

Renga.Ramanathan said...

Again a nice one from you. Thank you.

Ramanathan

கொசு said...

pls don t flame a girl without 100 knowledge ........ what are you know about the girl? pls explain .......

எஸ்.ஆர்.சேகர் said...

அன்புள்ள கொசு நன்றாகவே கடிக்கிறீர்..நாளிதழ்களை பாருங்கள்..அதில் மகேஷ் குமார் 10 பேரின் பெயர் --முகவரி அலைபேசி எண் கொடுத்து இவர்கள்தான் என் மனைவியோடு தினசரி பேசுவோர்..சுற்றுவோர்..தொடர்பில் இருப்போர்..என்வாழ்வை சூறையாடியோர் என பட்டியலிட்டுள்ளார்..நண்பரே

Anonymous said...

Did anyone made it clear that he has not this condition?

http://en.wikipedia.org/wiki/Morbid_jealousy

usvp.somasundaram said...

Moral instructions classes are not at all conducted. We are drifting away from our Hindu culture. These youngsters are money crazy and do not know what to do with it. Parents are to be held responsible, because they themselves do not know how to bring up their wards. External forces esply media acts and influences today's kids. Can you find out any single girl on the street without talking to Mobile phones. We do not know what she is talking, to whom she is talking and where she is going? Nobody knows. We have to put an end to these things. Our own culture has to imparted right from LKG days and parents should set an example. Let us hope for a better tomorrow.

SOMA

எஸ்.ஆர்.சேகர் said...

No idea
No chance for your doubts of "othello syndrome"--because the deceased's letter mentions ,the girl's affair with several persons

Anonymous said...

we shouldn.t give diciplines to our childrens