Pages

Sunday, November 6, 2011

நல்ல மாப்பிள்ளை--நல்ல மாமனார்

முத்து வேலருக்கு மூன்று மருமகன்கள்---மனைவி ராசாத்திக்கு மகள்கள் மீது அதீத பாசம்..மகள்களை...மருமகன்கள் நன்றாக வைத்துக்கொள்கிறார்களா? என்கிற சந்தேகம் மாமியாருக்கு நீண்ட நாட்களாக இருந்தது.ஒரு “டெஸ்ட்” வைக்கத்தீர்மானித்தாள்..

ஒரு நாள் முதல் மருமகனை அழைத்துக்கொண்டு ”போட்டில்”-- கடலுக்கு போனாள்..திடீரென தண்ணீரில் குதித்து “காப்பாற்று--காப்பாற்று” --என சத்தமிட்டாள்..மருமகன் பதறிப்போய்...மாமியாரை காப்பாற்றி வீடுவந்து சேர்ந்தான்..ராசாத்திக்கு ஒரே சந்தோஷம்--முதல் மருமகனுக்கு ஒரு “இன்னோவா கார் “ பரிசளித்தாள்.

ஒருமாதம் சென்று இரண்டாவது மருமகனுக்கும் இதே “டெஸ்ட் “டை வைத்தாள்..அவனும் காப்பாற்றி கரை சேர்ந்தான்..இரண்டாவது “இன்னோவா” வீட்டில் காத்திருந்தது..

இன்னொரு மாதம் சென்று மூன்றாவது மருமகனுக்கும் இதே “டெஸ்ட்”--ராஜாத்தி நீரில் குதித்தாள்..காப்பாற்று காப்பாற்று என கதரினாள்.மருமகன் கண்டுகொள்ளவில்லை..”ஒரு ராட்சசியை மகளாக பெற்று என் தலையில் கட்டிவிட்டாய் அல்லவா?”--செத்து மடி--அதான் உனக்கு தண்டனை--என அவளை சாகடித்து விட்டு வீடு வந்து சேர்ந்தான்..

அங்கே அவனுக்கு “ஒரு பென்ஸ் கார் “ காத்திருந்தது...ஆம்..ராசாத்தியிடமிருந்து தன்னை காத்ததற்காக--முத்துவேலரின் அன்புப் பரிசு...

1 comment:

KANNAPIRAN said...

super ji i have share it in face book