Pages

Tuesday, December 6, 2011

சலிக்குமா.... சரணமையப்பா ?


காலையில் எந்த  ரேடியொவை திருப்பினாலும்…சரணமையப்பா பாடல்களே காதைப் பிளக்கிறது..
கார்த்திகை …மார்கழி மாதங்கள் என்பதால்தான் இது...
ரேடியோ..டி.விக்காரர்களும்…துணிக்கடைக்காரகளும் கடைந்தெடுத்த வியாபாரிகள்..

ஜாதி..மதம் பார்க்காத உண்மையான “செக்குலரிஸ்ட் “ அவர்கள்தான்..
அத்தனை பண்டிகைகளையும் “ சரியாக  ஞாபகபடுத்துபவர்கள் அவர்கள்தான்..
”தவறாக “ ஒளி..ஒலி..பரப்புபவர்களும் அவர்கள்தான்..

இப்படி செய்தால்தான் “ வாடிக்கையாளர்கள்—பக்தர்கள் “—திருப்தியுருவார்களோ..?..
இதை கேட்டு..கேட்டு..உண்மையான பக்தர்கள்..கொதித்துப் போகிறார்கள்….
வெறுத்துப் போகிறார்கள்---சோர்வுறுகிறார்கள்…

இப்படி வருடம் முழுதும் விழாக்கொண்டாடி..கடவுளை தூங்க விடாமல்…
கடவுள் பெயரால் நம்மையும் தூங்க விடாததால்தான் ..
சூரிய உதயத்தையே பார்க்காத சூரியன் கட்சிகாரர்கள்..பொங்கி எழுந்து
“இறைவனுக்கெதிராக “ போராட்டங்கள்  நடத்தினார்கள்..

உண்மையில் நம் முன்னோர்கள்..திருவிழாக்களை காலத்திற்கேற்ப திட்டமிட்டே ஏற்படுத்தி இருக்கிறார்கள்..
அதை “ஓவராக “ செய்யும் வியாபாரிகளும் விவஸ்தை கெட்டவர்களும்..
” ஈ.வே.ரா.க்கள்” உருவாக காரணமாகிவிட்டர்கள்..

நாம் “செம்மரி ஆட்டுக்கூட்டமா /” –பிரிட்டிஷ் காரன் சொன்னது சரியா?..

ஒரு டி.வி—ரேடியொவில் “ ஒரு நிகழ்ச்சி பிரபலமானால்..
உடனே அதே மாதிரியான நிகழ்ச்சிகளை ஒவ்வொரு .டி.வி..க்களும் கொண்டுவருகிறதே..ஏன்.?

ஒரு சினிமாவோ—பாடலோ பிரபலமானால்---
அதே மாதிரி ( பெயர் கூட...கிழக்கு வாசல்...கிழக்குக் கரை..) .கதைகளும்..பாடல்களும்
( கொலவெறி..டி..) புற்றீசல் போல் பிரபலமாவது ஏன் ?

“மானாட..மயிலாட..” பிரபலமானால்—
குயிலாடா..கோட்டானாட…--குட்டிப்போடுகிறதே  ..ஏன் ?”

ஒருவர் தென்னை மரம் வைத்தால்….”வெனிலா கன்று “ வைத்தால்..
பொள்ளாச்சி முழுதும்..மரக்கன்றுகளே..ஏன்..?

பம்பு செட்…கிரைண்டர்….பட்டாசுக்கடை----மெடிகல் ஷாப்----
ஒன்று வைத்தால் கோவை முழுதும் பல முளைக்கிறது..எப்படி..?

லயன் டேட்ஸ்…வியாபார ரீதியில் வெற்றி பெற்றால்…
புலி டேட்ஸ்…நரி டேஸ்…என ஊரெங்கும் ஒரே டேட்ஸ் மயம் ..ஏன்?

பட்டி மன்றங்கள்—இப்படித்தான் பிரபலம் ஆனது
—ஆர்க்கஸ்ட்ரா…கலக்கப்போவது யாரு ?—என கோயில் விழாக்கள்—
குத்தாட்டங்களின் கூடாரம் ஆனது இப்படித்தான்..

“ஜெர்ஸி பசு வந்ததும்—நாட்டு மாடுகள் காணாமல் போயின—
காங்கேயம் காளைகள் வந்தது..உள்ளூர் மயிலை காளைகள்—மொட்டை மாடுகள்..மறைந்தே போயின..

கிராம சந்தைகளில் சிம்லா ஆப்பிள்..மெழுகு பூசப்பட்ட வெளிநாட்டு ஆப்பிள்கள்..
உள்ளூர் காய் கனிகள் எங்கே காணாமல் போயின ?—

இந்த “காப்பி அடிக்கும் பழக்கம்—நோகாமல் நோம்பி நூற்கும் பழக்கம் “ எப்போது மறையும்?

இந்த பழக்கத்தால் உங்களுக்கு என்ன நஷ்டம். ?—ஊருக்கு என்ன நஷ்டம்?—
”survaival of the fittest “—சாமர்த்தியம் உள்ளவன் சம்பாதிக்கிறான்
“ உனக்கு ஏன் பொறாமை ?—என நீங்கள் கேட்பது காதில் விழுகிறது..

புதுமைகளை செய்யாமல்---சிந்திக்காமல்—புகுத்தாமல்---
”சிந்தனைகளை கடன் வாங்கினால் “----
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு ரொம்ப நல்லதிட்டமாகவே தெரியும்..

புதுக்கல்யாணம் ஆறுமாதம் ( ஆசை அறுவது நாள் )--
நல்லாத்தான் இருக்கும்..அதற்குப்பிறகுதான் நம்ம மாப்பிள்ளை..
பெண்ணை அரபு நாட்டுக்கு விற்கும் “ லவ் ஜிஹாத் “ என்று புரியும்…

இதையே “வால் மார்ட் “ தொழிலாக செய்கிறான்..
ஏமாறுவதையே நாம் “தொழிலாக “ கொள்ளலாமா..?

சரி..ஐய்யப்பனிடம் ஆரம்பித்து வால்மர்ட்ல முடிச்சுட்டேனே ....
இது சரிதானா ?—ஆம்..சரிதான்.—

சாமி பேரை சொல்லி கூப்பிட்டாவது..
உங்கள் அகக் கண்களை  திறக்க முடிகிறதா என்று பார்த்தேன்..

சலிக்காது..... சரணமையப்பா…

3 comments:

muthusamy@balu said...

சும்மா உச்சநதலையிலே நச்சுன்னு அடிச்சா மாறி இருக்கு

amaran--artist said...

SUPER JI----

Suresh Subramanian said...

nice bunch... thanks to share... please read my tamilkavithaigal blog and leave your comments in www.rishvan.com