Pages

Monday, January 9, 2012

நீ மறைந்தாலும்--உன் நிஜம் மறையாது




நேற்று இருந்தவர் இன்று இல்லை
இன்று இருப்பவர் நாளை இல்லை

உலகே மாயமாம் வாழ்வே மாயமாம்

தத்துவம் எல்லாம் சரிதான்
ஏற்க இதயம் மறுக்கிறதே
சுகுமாரை இழந்து நெஞ்சம் தவிக்கிறதே

பதினோறு மணிக்கு சிரித்துப் பேசியவர்
பனிரெண்டு மணிக்கு அழவைத்து விட்டாரே
காலனின் கொடூரம் தவறாக பாய்கிறதே
காவிகளின் கூடாரம் கண்ணீரில் நனைகிறதே

“பிர”முக”ர்கள் “ என்றாலே பலப்பல முகங்கள்
இந்த பிரபுவுக்கு எப்போதும் ஒரேமுகம்

எத்தனையோ வர்ணனைகள் எத்தனையோ புகழாரம்
எத்தனையோ சிறப்பம்சம் எத்தனையோ தனித்துவம்

அத்தனையும் நிறைந்த முழுமனிதன் நீ
அன்பால் உருவான நல்மனிதன் நீ

அந்த மிடுக்கும் கம்பீரமும் உண்மையும்
காட்டில் எரியூட்டப் பட்டதே கடவுளே

“இவன்போல யாரென்று ஊர்சொல்ல வேண்டும்”
  வாலி உன்னை நினைத்துத்தான் பாடினாரோ.

அரசியலில் நேர்மை பொதுவாழ்வில் தூய்மை
பாஜகவின் லட்சியத்தை லட்ஷணமாக்கிக் கொண்டவனே

எதிரிகள் நண்பர்கள் என்ற இருகுழுக்கள்
இல்லையென சொன்னவனே செய்தவனே சுகுமாரே

எத்தனையோ நினைவலைகள் நெஞ்சமதில் மோதுது
எண்ணஎண்ண கண்ணிரெண்டும் குளமென நிறையுது

அகண்ட பாரதத்தை உறுதியாக நம்பியவரே
அகங்காரம் தெரியாத மாடிவீட்டு நம்மவரே
புதிய...பார்வை.. பாதை காட்டிய .. நம்பியாரே.
நீ மறையவில்லை..எம் இதயத்தில் வாழ்கிறாய்
..

1 comment:

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

TRUE.I feel the same with my karthik.Your description of Sugumar fits exactly to my Karthik.
அந்த மிடுக்கும் கம்பீரமும் உண்மையும்
காட்டில் எரியூட்டப் பட்டதே கடவுளே...exactly. As a mother my sadness is beyond description.
karthik amma