Pages

Sunday, May 13, 2012

பொருளுக்கு “ஸ்டைல்” வேண்டும்....அருளுக்குமா?


ஜக்கி வாசுதேவ்வின் புத்தகம் படித்துக்கொண்டிருந்தேன்...பக்கம் பக்கமாக படங்கள்....ஒவ்வொன்றிலும் ஒரு “ரிச்” காஸ்ட்யூம்..தலையில் ஹரியானா விவசாயின் “முருக்கிய” டர்பன்..
ஆர்ட் ஒர்க் செய்த பெரிய சால்வை
 ரஜ்னி ஸ்டைல்லில் போர்த்தியபடி..
பிரசங்கமாயினும்..பிராணாயாமமாயினும் ஸ்டைலான சால்வைதான்..

நேற்று நம்ம “நித்திக்கு “ பட்டாபிஷேகம்..
டி.வி.--வீடியோ...பார்த்தால்..”லலிதா ஜுவல்லரி கடையே நடந்து வருவதுபோல..
ஆபரண யுத்தம்..அழகி போட்டிபோல..உடலெங்கும்..ஆபரணம்..
அடையாளத்துக்கு காவி..இதுதான் நித்தி ..

ஸ்ரீஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்..எதுக்கு 3 ஸ்ரீ..அதுதான் அவருக்கான அடையாளம்..ஸ்டைல்..

முழுநீள சாட்டின் காவி அங்கி...பறக்கவிட்ட சுருள் தலைமுடி..சாயீ பாபா ஸ்டைல்..

இப்படி சாமியாருக்குள் ஸ்டைல் போகவில்லை..ஸ்டைலுக்குள் சாமியார்கள் போனார்கள்...ஏன்?

பொருளுக்கு லோகோ...ஸ்டைல் வேண்டும்..அருளுக்கும் ஸ்டைல் வேண்டுமா ?

சட்டையில் ரோஜா வைத்தால் நேரு ஸ்டைல்
கச்சை கட்டி தடியுடன் நடந்தால் காந்தி ஸ்டைல்
ஃபர்ன் குல்லாய்..முழுக்கை சட்டை..கூலிங் கிளாஸ்..வலது கை வாட்ச்..இது எம்ஜியார் ஸ்டைல்
மேல் துண்டு அண்னாதுரை..மஞ்சள் துண்டு கருணாநிதி..சிவப்புத்துண்டு ராஜபட்ஷே...

தெய்வங்கள் கூட ஸ்டைல்லில்தான் திரிகின்றன..
மீனாஷி என்றால் மாணிக்க மூக்குத்தி...கன்யாகுமரி என்றால் வைரமூக்குத்தி..ஆண்டாள்னா...கொண்டை,,,கிளி.......திருப்பதின்னா நாமம்...காளின்னா கோபம்..

சாமிகளே ஸ்டைல் பண்ணும்போது ..சாமியார்கள் பண்ணக்கூடாதா?
அரசியல் வாதிகள் ஸ்டைல் பண்னும்போது ...அவர்கள் வணங்கும் ஆதீனங்கள் ஸ்டைல் பண்ணக்கூடாதா?

பொட்டிப் பாம்பாய் ..இருக்கும் சாமியார்களை.. எட்டி நின்று பார்க்க ஆளில்லையே
அடங்கி ஒடுங்கி இருக்கும் ஆதீனத்தை.. அண்டியிருக்க ஆளில்லையே

கூட்டம் கூடணும்னா.. ஆட்டம் போடணுமாம்....இதனால்தான் நித்தி பின்னால் ” 292 ” (மதுரை ஆதீனம் )ஓடியது..
ஆர்ப்பாட்டமில்லாத....ஆரவாரமில்லாத....ஆண்டவனும்,, ஆதீனமும்,, அரசியலும்,, வேண்டும்---கிடைப்பார்களா?

1 comment:

அனைவருக்கும் அன்பு  said...

மனிதனின் உள்ள வெளிப்பாடுகளின் உருவங்கள் தான் தெய்வம் .........இதை உணராத வரை ஆதீனங்களின் பின் செல்லும் ஆட்டுமந்தைகள் போல தான் ..........கடவுள் என்பது நம்மை மீறிய சக்தி என்றால் இயற்க்கை சக்தியான நீர் நிலம் ஆகாயம் நெருப்பு காற்று இவைகளைத்தான் நாம் வணங்க வேண்டும் மனிதன் என்பவன் இந்த சக்திகளுக்குள் நிச்சயம் வர இயலாது அவனை பூசிப்பது என்பது மடத்தனம் சக மனிதனிடம் அன்பு கொள்ளலாம் பக்தி எப்படி சாத்தியம் .............உங்கள் பதிவு பல சிந்தனைகளுக்கு கிளை பரப்புகிறது ........ஆல்துக்கள்