Pages

Wednesday, July 18, 2012

ராகுலுக்கு பதவியாம்…எங்களுக்கு ஓகே…

“மூக்கு முட்ட குடிச்சவன் மூச்சு முட்டி செத்தான்” இது முது (புது) மொழி..

அதிகார போதை தலைக்கேறிய காங்கிரஸ்…டமாலென கீழே விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறது.

மீண்டும் காங்கிரசை எழுப்பி…நிறுத்தி,,,நடக்க வைக்க..திக் விஜய் சிங்கும்..அம்பிகா சோனியும்..அகமது பட்டேலும்..ஆலோசனை செய்து வருகின்றனர்..வெறும் ஆலோசனை அல்ல…வெல்லம் போட்ட ஆலோசனை..ஆம்..!..ராகுலுக்கு பதவி கொடுத்து  “பக்கட் சீட்டில்” உட்கார வைத்து விட்டால்…காங்கிரஸ் எழுந்து....நின்று…..நடந்து விடுமாம்…

முதலில் உயிர் பிழைக்க வையுங்கள் ஐய்யா….அப்புரம்  அது  நிற்பது….நடப்பதை பார்க்கலாம்…என காங்கிரசை பார்த்து மம்தா பானர்ஜியும்..சரத் பவாரும் சொல்வது காதில் கேட்கிறது..

தோல்வி அடிவாங்கி “காய்த்துப்போன “ காங்கிரசின் முதுகில் மீண்டும் ஒரு லக்கேஜை (ராகுலை) ஏற்றி விட்டால்..காங்கிரஸ் வேக மாக ஓடுமா?

உத்திரப்பிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் ராகுலுக்கு எவ்வளவு விளம்பரம்..?..என்ன ஆட்டம்..என்ன பாட்டம்..—குடிசையில் பிரியாணி சாப்பிட்டது முதல்…தாடி வளர்த்து முஸ்லீம் வாக்காளரை ஏமாற்ற நினைத்தது வரை…ஒரே ..படமோ படம்……முடிவு..ராகுலையும் காங்கிரசையும் மூட்டைகட்டி..டெல்லி சப்தர்ஜங் சாலை வீட்டுக்கு அனுப்பியதுதான் நடந்தேரியது..

 ராகுல்..தோற்றதுதான் தோற்றார்..சரி..கருணாநிதியை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டாமா?..புள்ளி விவரங்களை அள்ளி விட்டு…தான் தோற்கவில்லை என அறிக்கை விடுவார்..ஓடி ஒளிய மாட்டார்..உடனே மாநாடு அறிவிப்பு வெளியிட்டு வசூல் வேட்டையில் இறங்கி விடுவார்..
இப்படிப்பட்ட ஒரு வழிகாட்டித்தலைவரை..கூட்டணியில் வைத்துக்கொண்டும்..ராகுல் மூன்று மாதமாக வெளியே வரவே இல்லையே..அதுக்குத்தான் சென்னை வரும் போதெல்லாம் ப.சிதம்பரம் போல அடிக்கடி  “கோபால புரத்துக்கு” போய் வருவதை பழக்கமாக ராகுல் வைத்திருக்க வேண்டும்..அது இல்லாததால் தான் இப்படி ஓடி ஒளிந்த அவமானம்?..

பாராளுமன்றத்துக்குள்ளும்..ஏன்.. வெளியிலும் கூட வாய்திறக்காத சோனியாகாந்தி…காங்கிரஸ் தலைவியாக பொறுப்பேற்றது முதல் இதுவரை எத்தனை முறை “பிரஸ்ஸை “ சந்த்தித்திருக்கிறார்? கருத்து சொல்லியிருக்கிறார்..?அவருக்கே யூபிஏ தலைவர் பதவி…தோல்வில் ஓடி ஒளியும் மகன் ராகுலுக்கு பிரதமர் பதவி…காங்கிரசில் வேறு ஆளே இல்லையா?..காங்கிரஸ் திருந்த இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்?

எங்களுக்கெல்லாம் ராகுலை மூன்று வகையில் பிடிக்கும்..
ஒன்று…எங்கு தேர்தல் நடந்தாலும் ( அது இடைத்தேர்தல் உட்பட )ராகுல் அங்கு பிரச்சாரத்துக்கு வரவேண்டும்..அப்போதுதான் காங்கிரஸ் அங்கே மாபெரும் தோல்வி அடையும்..அது ராகுல் ராசி..
இரண்டு…உடனடியாக ராகுலை காங்கிரஸ் தலைவராகவோ.. அல்ல்து தேர்தல் பொறுப்பாளராகவொ நியமிக்க வேண்டும்..
ராகுலை காங்கிரஸ் தலைவராக்கினால் எங்களது நீண்ட நாள் ஆசையான காங்கிரஸின் இறுதி உடனே வந்துவிடும் காங்கிரஸ் முடிந்துவிடும்..
குறைந்தபட்சம் தேர்தல் பொறுப்பாளராவது ஆனால்..தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும்..எனவே இந்த இரண்டில் எங்களுக்கு எதுவும் ஓகே..

மூன்று….மன்மோகனுக்கு மாற்றாக உடனடியாக ராகுலை பிரதமராக நியமித்தாலும் எங்களுக்கு டபுள் ஓகே..காரணம்… காங்கிரசுடன் சேர்ந்து இருந்ததால்... 2014 தேர்தலில் கட்டாயம் மண்னைக்கவ்வுவோம்..அதனால் இருக்கும் வரை உடும்புப்பிடியாக பதவியில் இருந்து விடுவோம்….என்பதால் ஆட்சிக்கு ஆதரவு தந்து கொண்டிருக்கும் முலயாம்..லாலு..சரத்பவார் மாயா..ஆகியோர்..இதனால் 2014 வரை ஆட்சி தொடரலாம் என்னும் இன்றைய நிலையில்..ராகுலின் ராசியால் அவர் பிரதமராக நியமனமானால்..உடனடியாக ஆட்சி கவிழ்ந்து தேர்தலும் உடனடியாக வரும் ..
பாஜக வெல்லும்..எனவே ராகுல் பிரதமராக வருவது எங்களுக்கு பாக்கியம்..

காங்கிரசை பதவியில் இருந்து ஓட்ட....ராகுலுக்கு பதவி கொடுங்கள்....தேசத்தை காப்பாற்றுங்கள்

3 comments:

முத்தரசு said...

சார், இன்னைக்கு நல்ல மூடுல இருக்கீங்க போல....ஆஅமா ஆமா சீக்கிரம் தலைவராக்குங்கப்பு..

ஆப்பு.....இருக்குடி.

sakthi said...

அப்போ ராசிகார ராகுல் அண்ணாச்சிய சிக்கிரம் காங்கரஸ் தலைவர் ஆகிடுவோம் !

sathishsangkavi.blogspot.com said...

ரொம்ப ராசியானவர் எதிர்கட்சிகளுக்கு..