Pages

Saturday, July 21, 2012

காலி காம்ரேடுகளும்..மனேசர் மாருதி கார் தொழிற்சாலையும்

ஒரு தொழிலை நசுக்க வேண்டுமா ?—எந்த போட்டியாளரும் தேவை இல்லை..ஒரு தொழிற்சாலையை பொசுக்க வேண்டுமா?-எந்த கொலைகாரரும் தேவை இல்லை..

கம்யூனிஸ்ட் தொழிற்சங்கம் ஒன்றிருந்தால் போதும்..தொழிலாளி வயிறும்..காயும்..முதலாளி.பயிறும் காயும்..காம்ரேடு குதிரை அதில் மேயும்.

இந்தவாரம் ஹரியானா மாநிலம் மானேசர் மாருதி கார் தொழிற்சாலையிலும் இதுதான் நடந்தது..
ஃபாக்டரியின் ஒரு பெரும் பகுதி தீ வைத்து கொளுத்தப்பட்டது.அதோடு “மனித வள மேம்பட்டுத்துறை மேலாளர்”  மனிதத்தன்மையே இல்லாமல் காம்ரேடுகளால்..கால்கள் வெட்டப்பட்டு எலும்புகள் முறிக்கப்பட்டு..தீ வைத்து கருக்கப்பட்டார்.
ஆத்திரம் தீராத காம்ரேடுகள் பொங்கி எழுந்து இரண்டாம் தளத்தில் பேச்சு வார்த்தை நடக்கும் போதே 26 அதிகாரிகளை வெட்டி சாய்த்தனர்..முட்டிக்கி முட்டி தட்டி எலும்புகளை உடைத்தனர்..

இதற்காக ஏற்கனவே திட்டம் தீட்டி..ஒத்திகை நடத்தியது போல காரியங்கள் அரங்கேறின.

இந்த கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளே இருந்த கொலைகார காம்ரேடுகள் போதாதென்று வெளியிலிருந்தும் “ட்ரையண்டு ஆர்ம்ஸ் கில்லர்ஸ்” கூட்டிவரப்பட்டனர்..

புதிய தலைமுறை தொலை காட்சிக்கு பேட்டியளித்த மார்க்ஸிஸ்ட் எம்.எல்.ஏ வரதராசன்…நிர்வாகத்தை பணிய வைக்க --இதெல்லாம் சகஜம்..என கருத்து தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மே.வங்கம் சிங்கூர் டாடா நானோ கார் தொழிற்சாலை மோடியின் குஜராத்துக்கு சென்றுவிட்டது.ஹரியானா மானேசர் கார் தொழிற்சாலையும் குஜராத்து வரலாம் என அழைப்பு விடுக்க மோடி ஏற்கனவே ஜப்பான் சென்று விட்டார்.

தொழிற்சாலைகள் இடம் மாறினாலும் காம்ரேடுகள் மனமாறுவார்களா?

"வைக்கவேண்டிய இடத்தில் வைத்தால் வஸ்தாத்தும் வாலை சுருட்டிக்கொண்டு இருப்பான்".
என்பது போல..மோடிமுன் இவர்கள் சுருட்டி—மூடிக்கொண்டு இருப்பதை தவிர வேறு வழி என்ன இருக்கிறது..

2 comments:

sakthi said...

"வைக்கவேண்டிய இடத்தில் வைத்தால் வஸ்தாத்தும் வாலை சுருட்டிக்கொண்டு இருப்பான்".
என்பது போல..மோடிமுன் இவர்கள் சுருட்டி—மூடிக்கொண்டு இருப்பதை தவிர வேறு வழி என்ன இருக்கிறது..

இரத்தின சுருக்கம் அண்ணா ,அருமை .கையாலாகாத அரசு வைத்து என்ன செய்ய ?

முத்தரசு said...

காம்ரேடுகள் முன் மாதிரி இல்லை - உதாரணமாக, கேரளாவில் நடு ரோட்டில் வெட்டி கொலை , கிரிச்ணகிரி சம்பவம் - இதோ மேல தாங்கள் கூறியது - நாடு இப்போ எங்கே போகுது ஒன்னும் புரியல...இதுக்கெல்லாம் என்ன தான் முடிவு...