Pages

Saturday, July 28, 2012

அஸ்ஸம் கலவரமும்---- குஜராத் கலவரமும்

அஸ்ஸாமில் கடந்த 20 ம் தேதி 4 போடோ போராளிகளை
நடு ரோட்டில் அஸ்ஸாம் முஸ்லீம் சிறுபான்மை மாணவர்கள் வெட்டி சாய்த்ததால்..அஸ்ஸாம் இன்று பற்றி எரிகிறது.

3.5 லட்சம் பேர் மாநிலத்திற்குள்ளேயே அகதிகள். 275 அகதி முகாம் கள். 42 பேர் பலி. இப்படி ஒரு நிலை தேவையா? எவ்வளவு வருத்தகரமாக இருக்கிறது.

இந்த சம்பவம் யாரால் துவக்கப்பட்டது?..சிறுபான்மை முஸ்லிம் மாணவர் கூட்டமைப்பால்….ஏன் துவக்கப்பட்டது?..காங்கிரசின் ஓட்டுவங்கி அரசியலால்….வங்காள தேசத்திலிருந்து “சட்டத்துக்கு புறம்பாக “ குடியமர்த்தப்பட்ட, 30 லட்சம் முஸ்லீம் வாக்களர்களுக்கும், உள்ளூர் போடோ பழங்குடி இனத்தவருக்கும் ஏற்பட்ட மோதலால்  துவங்கியது.

இந்த அஸ்ஸாம் கலவரம், பல்வேறு வகைகளில், காங்கிரஸ்,..மனித உரிமை ஆர்வலர்கள், வெளிநாட்டின் கையூட்டு பெற்று இந்திய ரத்தம் குடிக்கும் பல்வேறு ஊடகங்கள், இடது சாரிகள், பெண்ணியவாதிகள், போலிமதசார்பற்ரவர்கள், என, பல்வேறு இயக்கங்களின் “சாயத்தை “ வெளுக்கவைத்து விட்டது..

குஜராத்தின் கோத்ரா ரயில் நிலயத்தில்,56 அப்பாவி கரசேவகர்கள், கம்பார்ட்மெண்ட் வெளியே தாழிடப்பட்டு, மண்ணெண்ணை உள்ளெ வீசப்பட்டு, உயிரோடு எரிக்கப்பட்டார்கள் அதற்கான எதிர்விளைவை குஜராத் சந்தித்தது.

காலை 7 மணிக்கு கோத்ரா ரயில் எரிப்பு..இரவு 7 மணிக்கு மோடி ராணுவத்திற்கு அழைப்பு..ராணுவம் 48 மணி நேரம் கழித்து வந்தது..அதனால் மோடி முஸ்லீம் விரோதி..மதவாதி..

20.7.12..அஸ்சாமில் போடோ தலைவர்கள் கொல்லப்படுகிறார்கள்..கலவரம் வெடிக்கிறது..கோக்ராஜ்ஹர் மாவட்ட கலக்டர் ராணுவத்தை அழைக்க …அஸ்ஸாம் காங்கிரஸ் அரசுக்கு அழைப்பு விடுக்கிறார்.4 நாள் கழித்து ராணுவம் வருகிரது.மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் தான் ஆளுகிறது..பெரும்பாலான பாதிப்பு முஸ்லீம்களுக்குத்தான் என “ இந்துப்பத்திரிக்கை” எழுதுகிறது..

குஜராத்தில் 2 நாள் கழித்து ராணுவம் வந்ததற்காக மோடிமீது வீசப்பட்ட தாக்குதல்கள் எவ்வளவு?;; 4 நாள் கழித்து அஸ்ஸாமில் ராணுவம் வந்ததற்கு இதே குரல்கள் கண்டிக்கவில்லை ..கனைப்புக்கள்கூட இல்லை..

ஏன் மதசார்பற்ற காங்கிரஸ் முஸ்லீம்களை தண்டித்தது? அப்படியானால் அஸ்ஸாம் காங்கிரஸ் முதல்வர்  அருண் கோகை ஆர்.எஸ்.எஸ்.காரரா? இந்து வெறியனா? முஸ்லீம் விரோதியா?

ஏன் இவரை தோலுரிக்க மீடியாக்கள் வரவில்லை? பர்க்கா தத்தும் அருந்ததி ராயும் எங்கே போனார்கள்?
இன்னொரு சுவாரசியமும் நடந்தேரியிருக்கிரது..அஸ்சாம் முதல்வர் அருண்கோகை “ ”பத்திரிக்கைகள்..டி.விக்கள்.,,அடக்கிவாசியுங்கள்,.அனாவசியமாக பொய் செய்திகள் வெளியிட்டு கலவரம் பெருக காரணமகிவிடாதீர்கள்,” என உருக்க மாக வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
அப்படியானால் குஜராத் கலவரத்தின் போது “லைவ் “ டெலிகாஸ்ட்” செய்தனரே பர்கா தத்தும்,,ராஜ்தீப் சர்தேசாயும். பிரணாய் ராயும்,..அப்போது சிரித்து,,குதூகலித்து மகிழ்ந்தனரே காங்கிரஸ்காரர்கள்..அது சரிதானா?

மோடி ..முடிய வேண்டும்..அதற்காக குஜராத் பற்றி எரிந்தாலும் பரவாயில்லை என்பதுதானோ இவர்களின் தாரக மந்திரம்..

இப்போது அஸ்ஸாமில் மீடியாக்கள் செய்வது அநியாயம் என்றால் அன்று குஜராத்தில் செய்தது நியாயமா? காங்கிரஸ் அரசு என்பதால் முஸ்லீம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு பர்க்கா தத்தும், ஷபானா ஆஸ்மியும் பரிதாப படமாட்டார்களோ?

வங்கதேசத்திலிருந்து திருட்டுத்தனமாக ஊடுருவி குடிபெயர்ந்த முஸ்லீம்களை, உள்ளூர் முஸ்லீம்கள் அடைக்கலம் தந்து ஆதரிப்பதே கலவரத்துக்கு காரணம்.வாக்களர்களாக பதிவு செய்யப்பட்டதால், காங்கிரஸ் கண்மூடி இருந்து இவர்களை ஆதரிப்பதும் ஒரு காரணம்.

இப்போது ராணுவம் விரைகிறது..பிரதமர் பார்வை இட வருகிறார்…சோனியா பரிதாபப் படுகிறார்.. ஆனாலும் அகில இந்தியா மீடியாக்கள் வாய் பொத்தி மவுனம் சாதிக்கின்றனர்…சித்தார்த் வரதராஜன்களும் ஸ்டீலாசெட்டில்வாட் களும், மேதாபட்கர்களும்..இருக்குமிடம் தெரியவில்லை..ஏனெனில் கலவரம் நடந்தது காங்கிரஸ் ஆளும் பூமியில்..

மோதல்களும் கலவரங்களும் மோடி பூமியில் என்றால் அது பெரும் சதி …காங்கிரஸ் மாநிலத்தில் என்றால் வெறும் செய்தி..
அஸ்ஸாம் கலவரம் தூரதிருஷ்டம்தான்..ஆனாலும் அது போலிமதசார்பற்றவர்களின்…காங்கிரசின் முகத்தை “பிளேடால்” கிழித்து அடையாளம் போட்டு விட்டது..

இனி நாட்டுக்கு நன்மைதான்.

1 comment:

sakthi said...

மோதல்களும் கலவரங்களும் மோடி பூமியில் என்றால் அது பெரும் சதி …காங்கிரஸ் மாநிலத்தில் என்றால் வெறும் செய்தி..
அஸ்ஸாம் கலவரம் தூரதிருஷ்டம்தான்..ஆனாலும் அது போலிமதசார்பற்றவர்களின்…காங்கிரசின் முகத்தை “பிளேடால்” கிழித்து அடையாளம் போட்டு விட்டது..


உண்மையான பதிவு அண்ணா