Pages

Friday, August 24, 2012

சிட்டுக்குருவி கொண்டைக்காரி…ஸ்ரீரங்கத்து அதிர்ஷ்டக்காரி

நேற்று புதன்கிழமை 22.8.12…காலை 6 மணி தொடங்கி வியாழன் காலை முடிந்த 24 மணிநேரத்தில் 131/2 மணிநேரம் “பவர்கட்”இது கோவையில்..நகரத்தில்..அதுவே ½ மணிநேர முன்ன-பின்ன வித்தியாசத்தில் இன்றும் தொடர்கிறது..
ஒரு சத்தம் இல்லை..ஒரு மூச் இல்லை..ஒரு லெட்டர் டூ எடிட்டர் இல்லை.

எதிர்கட்சித்தலைவர் விஜயகாந்த்தை விட்டு விடுவோம்.பாவம் அரசியலுக்கு புதிது..எழுதிக்கொடுத்தாலும்…பேசத்தெரியாது..
எடுத்ததெற்கெல்லாம் அறிக்கை விடும் “கேள்வி—பதில் அறிக்கை திலகம்”-தலைவர் கலைஞர் கூட அறிக்கை விடவில்லை..வாய் திறக்கவில்லை..”அம்மாவின் அதிர்ஷ்டத்தை பார்த்தீர்களா?

அம்மா ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் நிறைய பணபுழக்கம் இருக்குமாம்..(யாருக்கு என்பது கேள்வி)..கலைஞர் வந்துவிட்டால் அது குறைந்து விடுமாம்..இப்படி ஒரு பேச்சு இன்னும் “ஜெ” க்கு சாதகமாக உலவிக்கொண்டுதான் இருக்கிறது.

“மின்வெட்டை “ வைத்துத்தான் கருணாநிதி ஆட்சியையே “வெட்டி விட்டோம்” ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்தில் மின் வெட்டை சரிசெய்வேன் என்றார் “ஜெ”.. 1..1/2 வருடம் முடியப்போகிறது.. என்ன நடந்திருக்கிறது..பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்..

“டாஸ்மாக்” கெடுத்தது போக மீதியுள்ள தொழிலை “மின்வெட்டு” கெடுத்து வருகிறது..ஏதோ ஒரு 30—40—நாள் “வாயுபகவான்” கருணையால்..காற்றாலை மின்சாரம் கைகொடுத்தது..இன்று அதுவும் படுத்துக்கொண்டது..

மீண்டும் “கொஞ்சம்கூட முன்னேற்றம் இல்லாத இந்த மின்வெட்டுக்கு” என்னென்ன காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
1.கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் திடீர்க்கோளாறு.—மின் உற்பத்தி தடை
2.மேட்டுர் அனல் மின்நிலையத்தில் பழுது..மின் உற்பத்தி பாதிப்பு..
3.நெய்வேலி மின்னுற்பத்தி சுரங்கம் எண் 1 இல் கோளாறு..சரிசெய்ய ஒருமாதம் ஆகும்..
4.எண்ணூர் அனல் மின்நிலயம் பராமரிப்புக்காக ஒருமாதம் விடுமுறை—நோ கரண்ட்
5.மத்திய தொகுப்பில் இருந்து கேட்ட மிசாரம் கிடைக்கவில்லை..காங்கிரஸ் அரசு கைவிரிப்பு..
6.அதோ வருது –இதோ வருது என்ற கூடங்குளம் மின்சாரம் உற்பத்தி தொடங்க இன்னும் ஒருமாதம் ஆகும்..

அதுசரி..இவையெல்லாம் கருணாநிதி ஆட்சியின் போதும் நடந்த விஷயங்கள் தானே? அப்போது பக்கம் பக்கமாய் கருணாநிதியை திட்டி தீர்த்த பத்திரிக்கைகளும்..ஆயிரக்கணக்கில் ஆட்களை சேர்த்து ஊர்வலம் நடத்திய தொழில் அமைப்புக்களும்..கண்டனம் தெரிவித்த கம்யூனிஸ்டுகளும்..இன்று எங்கே இருக்கிறரார்கள்..
இவ்வளவு பேரையும் வாய்மூடசெய்தது..அம்மாவின் அதிர்ஷ்டம் தானே?

ஈமு கோழி ஊழல்..தீவனமின்றி கோழிகள் சாகுது..முதலீட்டாளர்கள் முற்றுகை..கருணாநிதி தும்மினாலேயே..பக்கம் பக்க்மாக எழுதும் பத்திரிக்கைகள்.. அம்மாவை பற்றியும் ஆட்சியை பற்றியும் ஒருவர்கூட வாய் திறக்கவில்லையே..இதுவல்லவோ அம்மாவின் அதிர்ஷ்டம்..

மதுரை கிரானைட் ஊழல் 16,000/- கோடி..எல்லா கட்சிக்கும் பங்கு..பாஜக தவிர..அம்மா பதட்டபடவே இல்லையே..பத்திரிக்கைகள்..அம்மாவையோ ஆட்சியையோ..பற்றி வாய் திறக்கவில்லையே..மாறாக இதை கண்டு பிடித்தது அவர்தானாம்.. இதற்கு பெயர்தான் அம்மாவின் அதிர்ஷ்டமோ
..
தினசரி “மணல் கொள்ளை—மணல் கொள்ளைன்னு..பக்க பக்கமாக செய்தி..மணலை ஆளும் கட்சி காரன் தான் கொள்ளை அடிக்கி..றான்.இது அம்மாவுக்கு தெரியாமல் நடக்குமா?.அம்மாவை சம்பந்தப் படுத்தி ஒரு பேச்சில்லையே..இது அதிர்ஷ்டமா?—ஆச்சரியமா?

உலகத்திலேயே ஒரு “சேவையும் “ செய்யாமல் கட்டணத்தை உயர்த்திய கம்பெனி ஒன்று இருக்குமானால் அது தமிழ்நாடு மின்சார வாரியம்தான்..கட்டண உயர்வை பொதுமக்கள் பொறுமையுடன் ஏற்றுக்கொண்டார்களே…இந்த லட்சணத்தில் டிரான்ஸ்பருக்கு ஏஈ..பிஈ..சிஈ..என 25 லட்சத்திலிருந்து 1 கோடிவரை லஞ்சம் தலை விரித்தடுகிறதே..இது அம்மாவின் ஆசியில்லாமலா? காசு போச்சே என வயிற்றிலடித்துக்கொள்ளும் கலைஞரைத்தவிர மற்ற கட்சியினர் வாய் திறக்கவில்லையே..இதற்கு பெயர் வேரென்ன..அதிர்ஷ்டம்தானே,,

பஸ் டிக்கட் விலை உயர்த்தினார்கள்....இன்னும் அதே ஓட்ட ஒடசல் பஸ்தான்..இன்னும் அதிக ஆக்சிடண்ட் தான்..ஒரு மூச் இல்ல பேச்சு இல்ல அம்மா அதிர்ஷ்ட்டக்காரிதானே..

நிலக்கரி ஒதுக்கீடு ஊழலில் நாடே கொந்தளித்து நிற்கிறது…2ஜி ஊழலில் நாடே நாறிப்போனது…மின்வெட்டுக்கும்…கிரானைட்டுக்கும்…மணல் கடத்தலுக்கும் தமிழ்நாட்டில் சத்தமே இல்லையே…இது அம்மா பவரா..அதிர்ஷ்டமா?

பிஜெபில கூட சென்னை வரும் போது எல்லா தலைவரும் அம்மாவை சந்திக்கிறார்கள்.ஆட்சி பற்றி எந்த பேட்டியும் கொடுப்பதில்லையே..புள்ளிவிபரங்களை அள்ளிவீசி பேசும் புத்திசாலிகளின் புகலிடம் பாஜக கூட அம்மாவை குத்திக்காட்டாதது..அம்மாவின் ராஜதந்திரத்தின் வெற்றி என்பதா?..அல்லது அதிர்ஷ்டக்கார அம்மா என்பதா?

4 comments:

அ செந்தில் குமார் said...

Amma vin peyarukku kalangam vilaivithu vitteergal!
Adutha Vazhakkai sandhikka Thayaaraaga irungal!
Minsaaram varugirdho illayo
Oru vazhakku Nichayam varum!
Vazhthukkal!

அனைவருக்கும் அன்பு  said...

துணிச்சல்மிக்க எழுத்துகளை படிக்கும் போதே தூக்கிவாரி போடுகிறது .........

பேச கூட சுதந்திரம் இல்லை (அரசியலை மட்டும் )

உங்கள் ஆதங்கம் எங்களுக்கும் இருக்கிறது ஆனால் சிதரிகிடக்கும் மனிதர்களை வைத்துகொண்டு ஆதங்கம் மட்டுமே படமுடியும் ஓன்று பட்டால் உண்டு வாழ்வு

sakthi said...

எல்லாம் நன்மைக்கே அண்ணா ( யாருக்கு ? )

jayakumar muthalagu said...

நடுநிலைமை தவறாமல் எழுதப்பட்ட கட்டுரை. பாராட்டுக்கள்.

நன்றி,
ஜெயக்குமார்.