Pages

Thursday, October 25, 2012

மோடி ராஜ்ஜியம்—ராமராஜ்ஜியம்—2


ஞாயிற்றுக்கிழமை காலை சந்திப்பு –அரசு அதிகாரிகள்..தமிழ்ச்சங்க நிவாகிகள்…மற்றும் ஆமாதாபாத் வைதீக சமாஜ முக்கியஸ்தர்கள்.. இருந்தனர்..

என் பேச்சுக்கு எல்லோரும் பதில் சொல்லிக்கொண்டிருந்தனர்..ஒரு குழு மட்டும் வாய் திறவாமல் இருந்தது..
நான்…..தமிழ்நாட்டில் இப்போது “சேனல்கள்” பல வந்துவிட்டன..நான் டி.வி.விவாதங்களில் பங்கு கொள்கிறேன்..பெரும்பாலான டி.வி.க்களில் இப்படித்தான் கேள்வி கெட்கிறார்கள்….

”குஜராத்தில் ரத்த ஆறு ஓடுகிறது..மோடி ஒரு மரண வியாபாரி..இந்துமத வெறியன்..முஸ்லீம்களை கொன்று குவிக்கிறார்..” என்று கேட்கிறார்கள்.என்றேன்……எனக்கு பதில் தெரியவில்லை..இது உண்மையா..நீங்கள்தான் சொல்லவேண்டும் என்றேன்..

அதுவரை பங்குகொள்ளாத குழு கொதித்தெழுந்தது..”இங்கு இந்துக்கள் உயிரோடு நடமாட முடிகிறது என்றால் அது மோதியால்தான்..இந்துப்பெண்கள் இரவில் தனியாக நடுநிசிவரை வேலை பார்த்துவிட்டு தனியாக வீடு திரும்ப முடிகிறது என்றால்..அது மோதியால்தான்..

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதெல்லாம் எப்போதும் 144 தடைதான்..ஊரடங்கு உத்தராவுதான்..வீடுபுகுந்து முஸ்லீம் நம்மை அடிக்கும்போதெல்லாம் எந்த நாதியும் இல்லாதிருந்தோம்..
இன்று குஜராத்துக்கு மோதி வேண்டுமோ இல்லையோ..எங்களுக்கு மோதி வேண்டும்..உங்கள் தமிழ்நாட்டு பத்திரிக்கை டி.வி. காரர்களை இங்கு வரச்சொல்லுங்கள்..நாங்கள் செலவை ஏற்றுக்கொள்கிறோ.ம்..நேரில் பார்க்கட்டும்..அப்போது புரியும் “ என்று ஒரே மூச்சில் பேசி முடித்தனர்.

பிற்பகலில் முருகன் கோவிலில் ஒரு பெரிய பெண்கள் குழுவை சந்தித்தோம்..
“இங்கு ரேஷன் கடைகளில் எந்த இலவசமும் கிடையாது..ரேஷன் கார்டு ஒரு அடையாள அட்டைதான்..பி.பி.எல்.கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே ரேஷன்…அதுவும் நம்மூர் மதிரி இலவசம் கிடையாது..விலை குரைவு..மிகவும் தரமான சரக்கு..இங்கு யாரும் இலவசங்களை விரும்புவதில்லை…
எங்களது வீடுகளில் நாங்கள் இரவில் கதவை பூட்டுவதே இல்லை..ஸ்கூட்டர்—கார்கள் ரோட்டில் பூட்டாமலே கிடக்கும்..நாங்கள் இரவில் மில் வேலை முடித்து 2. மணிக்குதான் அதுவும் தனியாகவே வீடு திரும்புவோம் எந்த பயமும் கிடையாது.”.என்றனர்…

மறுபடியும் கிள்ளிப்பார்த்து கொண்டேன்..நான் கனவு கானவில்லையே என்று..

உசிலம்பட்டியை சேர்ந்த ராமுத்தேவர்..15 பையன்களை தமிழ்நாட்டிலிருந்து அழைத்து வந்து கடலை மிட்டாய்—தேன் மிட்டாய்—லட்டு வியாபாரம் கடந்த 15 வருடமாக செய்கிறார்..

“நாங்கள் பரம்பரை திமுக..எங்க ஊரில் ஓட்டு மாற்றிப்போட்டால்..மாறு கை..மாறு கால்தான்>>.ஆனால் குஜராத்தில் நாங்கள் மோதி ஆள்..
முன்பெல்லாம் வியாபாரத்துக்கு போய்..திரும்ப வீடு வந்து சேர்வது நிச்சயமில்லை..அதுவும் முஸ்லீம் ஏரியாக்களுக்கு போனால் திரும்ப வந்தால்தான் நிச்சயம்..மோதி வந்த பிறகு எங்களுக்கு உயிர் பயம் போய்விட்டது..வியாபாரம் செய்த காசும் ஒழுங்காக திரும்பி வருகிரது..”என்றார்.

இதையெல்லாம் கேட்ட பிறகு…கேசுபாய் பட்டேலோ..சோனியா காந்தியோ..மோடியின் வெற்றிக்கு இடைஞ்சல்…என்று யாராவது சொன்னால் சிரிப்புத்தான் வருகிரது..

குஜராத்தில் காங்கிரசுக்கு 10 சீட் கிடைத்தால் பெரிது..என்பதே இன்றைய நிலை..

1 comment:

அனைவருக்கும் அன்பு  said...

எனக்கு அரசியல் தெரியாது சார் நல்லதே நினை நல்லதே விதை இந்த வரிகள் பிடித்திருக்கு