Pages

Friday, July 14, 2017

‘பிக்பாஸ்’ என்னும் ‘பன்றிக் காய்ச்சல்’


கமலஹாசன் என்னும் சினிமா நடிகர் ‘சர்ச்சைக்கு’ பெயர் போனவர்! தான் உலகுக்குத் தெரிய வேண்டும் என்கிற ‘அங்கீகாரப் பசி’ Rewgniion Hunger காரணமாக, ஏதாவது ஒரு கோரிக்கையை முன்நிறுத்தி நிர்வாணமாக ஓடுவது வெளி நாடுகளில் சகஜம்!
இந்த சித்தாந்தத்தை கொஞ்சம் நாட்களுக்கு முன் இறக்குமதி செய்து டெல்லியில் ‘வெள்ளோட்டம்’ விட்டார். 20 ஏக்கர் ஏழை விவசாயி ‘ஆடிக்கார் அய்யாக்கண்ணு’.
சினிமா வியாபாரம் படுத்துக் கொண்ட பிறகு, சின்னத் திரையில் ‘சின்னத்தனமான’ வியாபாரம் செய்து, தன் வக்கிர எண்ணங்களை வடித்துக்கொண்டிருக்கிறார் நடிகர் கமலஹாசன்.
விஜய் டிவி, அதன் தயாரிப்பு நிர்வாகம் கிறிஸ்தவர் கைக்கு போன பிறகு, இன்று மத விரோத, கலாச்சார விரோத, பழக்க வழக்க விரோத, நிகழ்ச்சிகளை தயாரித்து ‘சர்ச்சைக்கிடமான’ நிலையை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது!
வெளி நாடுகளில் பிரபலமாகி, தற்போது இந்தி டிவிக்களில் ‘சக்கை போடு’ போட்டுவரும், 100 நாள் ‘கம்யூன்’ வாழ்க்கை டிவி தொடர்  ‘பிக் பாஸ்’.
சமூகம் ஏற்றுக் கொள்ளாத, புறக்கணித்த, செய்கைகளை பத்துப் பன்னிரண்டு பேர், சேர்ந்து வாழ்வதாக, ஓரிடத்தில் வைத்து, அவர்களது படுக்கை அறையில், கேமராவை நுழைத்து, ‘வக்கிர’ எண்ணத்தை ஊக்குவிக்கும் காட்சிகளை, ‘சென்சார்’ இல்லாமல் காட்டும் நிகழ்ச்சிதான் ‘பிக்பாஸ்’.
இந்த தொடர் 100 நாட்கள் நடப்பதாக விளம்பர படுத்தி வசனம் எழுதி, ஒத்திகை பார்த்து (10 நாளிலேயே) ஷூட்டிங் முடித்து, இயல்பாக நடப்பதுபோல ‘பாவ்லா’ காண்பிக்கிறார்கள்.
 பிக்பாஸ்  அது ஒளிபரப்பாகும் அத்தனை காட்சிகளிலும் புதுப்புது சர்ச்சைகளை உருவாக்க வேண்டும். அதைப் பற்றியே மக்கள் பேச வேண்டும். அதன் டிஆர்பி ரேட்டிங் மேலே மேலே எகிர வேண்டும். விஜய் டிவியின் ‘கஜானா’ நிரம்பி வழிய வேண்டும். மக்களின் ‘ஏமாளித்தனம்’ தொடர்ந்து உயர்ந்து வரவேண்டும். இதுதான் இந்நிகழ்ச்சி தயாரிப்பாளர்களின் உள்நோக்கம்!
எது எப்படியும் தொலையட்டும்! உள்ளே அடிக்கும் ‘கூத்து’ பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். அது ‘ஒத்திகை பார்த்து மீண்டும் கேமராமுன் அரங்கேறும் கூத்து’.. வெறும் வாயில் அள்ளி அள்ளி அவலைப் போட்டு, ஊர்வாய் மூடாமல் பார்த்துக் கொள்ளும் குழாயடிச் சண்டை, டீக்கடை பெஞ்ச் கூத்து! அதற்கு நேரம் உள்ளவர்களும், ஆர்வம் உள்ளவர்களும் அதை பார்த்துக் கொள்ளட்டும்!
நமது கவலையெல்லாம், கமலஹாசனின் இரண்டு ‘திருவாய் மலர்ந்து’ அருளல் பற்றியதுதான்! ஒன்று தமிழ்நாட்டில் உணவுக்கு ஏன் மதத்தின் பெயரை வைத்தீர்கள்? சைவ உணவு அசைவ உணவு என்று எப்போது ஏன் எதற்காக பெயரிடப்பட்டது! என்பதுதான்!
இமயமலைக்கு தெற்கே இருப்பது தான் பாரதம் என்பது நமது முன்னோர்கள், நூல்கள், இதிகாசங்களின் அருள்வாக்கு! எம்பெருமான் ஈசனை வணங்குபவர்கள் சைவர்கள். அவர்கள் உண்ணும் உணவு சைவம் என்று சொல்லமுடியாது. காரணம் ஈசனை வணங்குபவர்களில் மாமிசம் உண்பவர்களும் உள்ளனர்!
உணவுப் பழக்கம் ஒரு மனிதனின் மனம், குணத்தை நிர்ணயிக்கும், மாமிச உணவே வீரத்தையும் அதிக சக்தியையும் தரும் என்பவன எல்லாம் நம்பிக்கைகளே! ஆக்ரோஷமான, வலிமையான இரண்டு மிகப் பெரும் காட்டுவிலங்குகள், காண்டாமிருகமும், யானையும் சாகபட்சிணி, கமலஹாசனுக்கு புரியும் பாஷையில் சொன்னால் சைவம்!
உடற்கூறு விஞ்ஞானம் கூட, மனித உடலின் ஜீரண உறுப்புக்கள், மரக்கறி உணவை செரிப்பதற்குண்டான, அமினோஅமிலங்களை மட்டுமே சுரக்கிறது என விளிக்கிறது!
உலகின் மிகப் பெரிய இயக்கம் ‘வேகன்’ 'Vegan' என்னும் மரக்கறி உணவு சாப்பிடுவோர் இயக்கம். இது பிரிட்டனில் 1800களில் தோற்றுவிக்கப்பட்டு உலகெங்கும் கோடிக்கணக்கான சைவ உணவாளர்கள் இருக்கிறார்கள். முஸ்லிம்கள் இதற்கு விலக்கல்ல!
தமிழ்நாட்டில் ‘கழகங்களின்’ கை ஓங்குவதற்கு முன்பு வரை சைவ உணவு ஓட்டல்கள் என்ற பெயர் வழக்கில் இல்லை! மரக்கறி உணவு வேண்டுவோருக்கென இருந்தது ‘பிறாமணாள் காபி கிளப்’புக்கள் தான்! அசைவத்துக்கு மதுரை முணியாண்டி விலாஸ். பின்னாளில் திராவிடர் கழகங்களின் பூணூல் அறுப்பு வெறியாட்டத்தினால் இங்கு பெயர்ப்பலகை மாற்றப்பட்டு, தமிழ் தேசிய வாதிகள் மற்றும் தனித்தமிழ் கழகக் காவலர்கள் ஆசியுடனே ‘சைவ உணவு ரெஸ்ட்ராண்ட்’கள் அறிமுகம் ஆக ஆரம்பித்தது! என்னுடைய இந்த கருத்து விவாதத்துக்கும் ஆராய்ச்சிக்கும் உரியது!
சரி! கமலஹாசனின் குற்றச்சாட்டுக்கு வருவோம்; எப்போதும் ‘மமதையில்’ இருப்பதால், மதம் அவர் மனதை உறுத்துவதால், உணவுப் பழக்கத்தில், வழக்கில் உள்ள ஒரு பெயரை மதத்துக்கானதாக எடுத்துக்கொண்டு, தமிழகம் நினைத்துப் பார்க்காத, ஏன் திராவிட இயக்கத்தினரே யோசிக்காத குற்றச்சாட்டை நம் மீது எய்திருக்கிறார்.
இரண்டாவதாக இப்போது அரசியல் பேசுகிறார். தமிழ்நாடு அரசில் ஊழல் மலிந்துவிட்டதாக புலம்புகிறார்! ‘ஜெ’ உயிரோடு இருந்தவரை ‘அரசியல் பற்றி வாய்திறக்காத’ இந்த வாய் சொல்லாளர், விஸ்வரூபம் திரைப்படத்திற்கு இவர் நம்பிய இவரது இஸ்லாமிய நண்பர்கள் தடைபோட்டு வெறுப்பேற்றியபோது மண்டியிட்டு, துவாசெய்து அவர்கள் சொன்ன இடங்களிலெல்லாம் ‘வெட்டி’ படத்தை வெளியிட்டு தன்னை காத்துக் கொண்டவர், ஊழல் பற்றி பேசி அரசியல் களத்தில் நுழைய எத்தனிக்கிறார்!
கமலஹாசனின் அரசியல் ஆசை, பிரவேசம் பற்றி நமக்கு எந்த கருத்துமில்லை! ஆனால் இந்த புது அவதாரம், வேஷம், அரிதாரம் நடிகனுக்கு புதிதில்லையென்றாலும், அரசியல் களத்தின் இன்றைய காலகட்டத்துக்கு புதிது! ரஜினிக்கு போட்டியாக, களத்தில் கமலஹாசன் குதித்தால், அவரது ரசிகன் குதுகலிக்கலாம்! இதில் நமக்கென்ன  இருக்கிறது!
பன்றிக்காய்ச்சல், சாதாரண உடல்வலி, உடல் உஷ்ணத்தோடு தான் ஆரம்பிக்கும்! சாதாரண மருந்து மாத்திரைகளுக்கு கட்டுப்படாது. உயிரைப் போக்கும் எந்த அறிகுறிகளையும் தராது! சரியான மருத்துவரிடம், சரியான நேரத்திற்கு செல்லாவிட்டால், கதை கந்தல்தான்!
விஷவித்துக்களை, தினசரி சாப்பிடும் தானியங்களோடு கலந்துவிடுவது, தேசவிரோத, கலாச்சார விரோத கும்பலுடைய வாடிக்கை! இந்த கும்பல்களின் ஆதிக்கம் பாரதத்தின் பலத் துறைகளிலும் பரவி இருக்கிறது! நரேந்திர மோடி அரசு இந்த ‘வைரஸ்களை’ அழிக்கும் பூச்சிக் கொல்லிகளை தயாரித்து அழித்து வருகிறது! ஆனால் வைரஸ்களும் தனது பெருக்கத்தை குறைக்க மறுக்கிறது!
இந்த தேசவிரோத கும்பலின் தற்போதைய தமிழ் ஊடகப் பணிமனை விஜய் டிவி. புதிதாக வந்த வாகனத்தின் சீப் மெகானிக், ‘வைரஸ் வியாபாரியாக’ கமலஹாசன் பொறுப்பேற்றிருக்கிறார்! இந்த வைரஸ்களை பார்த்து பழக்கப்பட்டுப்போன மாற்று மருந்து ஏற்கனவே ‘இந்துத்வா பணிமனையில்’ இருப்பில்(ஸ்டாக்கில்) உள்ளது!
எடுப்போம்! எய்துவோம்! அழிப்போம்! அகற்றுவோம்! 

காப்பாற்றுவோம் தமிழ்நாட்டை!

2 comments:

வேகநரி said...

பிக்பாஸ், உணவு பழக்கம், கமலஹாசன் பற்றி நல்லதொரு அலசல்.
//ஏதாவது ஒரு கோரிக்கையை முன்நிறுத்தி நிர்வாணமாக ஓடுவது வெளி நாடுகளில் சகஜம்!
இந்த சித்தாந்தத்தை கொஞ்சம் நாட்களுக்கு முன் இறக்குமதி செய்து டெல்லியில் ‘வெள்ளோட்டம்’ விட்டார். 20 ஏக்கர் ஏழை விவசாயி ‘ஆடிக்கார் அய்யாக்கண்ணு’//
அவருடைய செயல் அவமானமானது மிகவும் கண்டிக்கதக்கது. ஆனால் பலர் இதை ஊக்குவித்தது தான் வேதனை.

Murugavel said...

Hindu Jalra..RSS ID enna?