Pages

Thursday, January 26, 2012

நார்வே அனுபவம் நமக்கு சரிப்படுமா?


இது ஒரு வித்யாசமான வழக்கு--செய்தி---சம்பவம்

 நார்வே நாட்டில் வாழும் அனுரூப்--சகாரிகா--இந்திய தம்பதிகளுக்கு 3 வயதில் ஒருமகன்.-ஒரு வயதில் ஒரு மகள்.

தாய் தந்தையரின் குழந்தைகள் பராமரிப்பு சரியில்லை ---என சொல்லி குழந்தைகள் இருவரையும் நார்வே அரசு-- இருவேறு குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்துள்ளது.

குழந்தைகள் எங்களோடுதான் இருக்கவேண்டும்-- என்ற பேற்றோரின் மேல்முறையீட்டையும் அந்நாட்டின் குழந்தைகள் நல அமைப்பு தள்ளுபடி செய்துள்ளது..

அப்படி என்னதான் அப்பெற்றோர்கள் கொடுமைகள் செய்தார்கள்...

1. குழந்தையின் உள்ளாடையை (டயஃபர்) சரியாக மாற்ற  அம்மாவிற்கு தெரியவில்லை..
2. குழ்ந்தைகளின் விளயாட்டு சாமான்கள் அவர்களின் வயதுக்கேற்ற -- தரமான வகையில் இல்லை
3.அதே மாதிரிதான் உடைகளும் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் இருக்கிறதாம்.
4. 3 வயதாகும் மகனுக்கு “தனி படுக்கை அறை இல்லையாம்
5. வீடும் 2 + 2 பேர் வசிக்க போதுமானதாக இல்லையாம்.

ஆகவே  நார்வே நாட்டு குழந்தைகள் நல சட்டப்படி..18 வயதாகும் வரை-- குழந்தைகள்--- காப்பகத்தில் அரசின் செலவில் பராமரிக்கப்படுவர்..

அப்போ காப்பகம் எப்படி இருக்கும்...டிஸ்னி உலகம் போல--சொர்க்கம் போல இருக்குமாம்..

என்ன வேடிக்கை என்றால்..பெற்றோர்கள் ---குழந்தைகளை ஆண்டுக்கு மூன்று மணி நேரம்தான்-- அதுவும் ஒருமணி நேரம் வீதம் மூன்று முறைதான் பார்க்கமுடியுமாம்..

அந்தக்குழந்தைகள் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள்...

தாய்ப்பால் கொடுக்கத் தெரியவில்லை அந்த அம்மாவிற்கு...அதை இப்படித்தான் கொடுக்கவேண்டும்...இந்தம்மா வேறு மதிரி கொடுக்கிறார்கள்..எனபதும் அந்நாட்டு “போர்டின்” மேலும் ஒரு குற்றச்சாட்டு..இதையெல்லாம் கற்றுக்கொடுக்க வேண்டிய வகையில் அந்நாட்டு அன்னையர் இருக்கிறார்களா?--

இப்படி பார்த்துப் பார்த்து--பொத்தி..பொத்தி...வெளிநாடுகளில் குழந்தைகளின்மீது ..அக்கறை செலுத்தப்படுவது எவ்வளவு சந்தோஷமாகவும்..பொறாமையாகவும்--சிலநேரம் நம்நாட்டில் அப்படி இல்லையே என்ற வருத்தமும்..ஏற்படுகிறதே.

இங்கே சாலை தோண்டும் சேலத்து பணியாளர்கள்..குடும்பத்தோடு..”மூக்கு ஒழுகும் கைக்குழந்தையை முதுகில் சுமந்து கொண்டு..அல்லது சாலை ஓர மரத்தடியில் --பனியில்--வெய்யிலில்--கிடத்திவிட்டு..ஊட்டி வருக்கியை கையில் திணித்துவிட்டு..மூடிய சேலைக்குள் மூச்சுமுட்ட பாலை கொடுத்துவிட்டு...வளர்க்கிறாளே--வளர்கிறார்களே...இந்தக் குழந்தைக்கெல்லாம் “அந்தக்குழந்தையின் “ சௌகரியம்--சுகம் “எப்போது கிட்டும்?--என மனம் ஏங்குகிறதே.

ஆனால் எவ்வள்வு வசதிகள் கொட்டி கொட்டி கொடுத்தாலும்..அந்த “தாயின் ஸ்பரிஸம்” --அரவணைப்பு--சகல அசௌகரியங்களையும் மறக்கவைக்கும் “சஞ்சீவீ மருந்து ..அதற்குமுன்னே இவ்வசதிகள் எம்மாத்திரம் இதுதானே..நம் அனுபவ மந்திரம் .

1 comment:

sundar rajan said...

Dear Sekar,

I am surprised, come on, what they are doing is absolutely wrong, you cannot create benchmarks as to how to grow your kids, that is not fine. we are capable of assimilating values, there should be no uniformity. infact, after all that taking care there are not any great personalities who are coming from those countries and on the other hand, even after sleeping in the same hall, 6 or 7 persons, we are producing genius.
The argument is, this plethora of variety is what is making and creating genius, infact it is our duty to teach them, that what they are doing is wrong.

sks