Pages

Thursday, January 13, 2011

ஒரு கையில் கோப்பை ---ஒரு கையில் கோப்பு -- அடுத்த முதலவர் விஜயகாந்தே வருக

சேலத்தில் ஒன்பதாம் தேதி நடந்த "மாபெரும்   " மாநாட்டில்  "கோப்பை முதல்வர்  " விஜயகாந்த்  பேசும்   போது    கேப்டன்   டி .வியில்  லைவ்  ஆக  பார்த்தவர்களுக்கு  விஜயகாந்த்  என்ன  கண்டிஷனில்   இருந்தார்  என்பது  சொல்லாமலே --புரிந்திருக்கும்  --"தமிழ்  நாட்டின்  அடுத்த முதல்வருக்கான  தகுதி--எப்படி இருக்கிறது பார்த்தீர்களா---

செயலில்தான்  நம்  முதல்வர்கள்  "ஜீரோ " என்றால்  நடத்தையில்  கொஞ்சம்  இவ்வளவு  மோசமில்லை  .. --இவர்  செயல் ===பதவிக்கு வந்த பின்புதான் தெரியப்போகிறது--இப்போதே விருத்தாசலம் எம்.எல்.ஏ ஆக இவர் கிழித்தது ஒன்றுமில்லை--முதல்வராகி என்ன கிழிப்பார் என்பது இறைவனுக்கே வெளிச்சம்.

தனக்கு கிடைத்த ஒரு மணி நேரத்தை ஒரு நிமிடம் கூட இவரால் சரியாக பயன்படுத்த முடியவில்லை--நாலைந்து வார்த்தை கூட கோர்வையாக வரவில்லை--சபை நாகரீகம் கொஞ்சமாவது இருந்திருந்தால்  மேடைக்கு வருமுன் "தீர்த்தவாரி " செய்யாமல்  வந்திருக்கவேண்டும் ..

மது அருந்துவது என்பது ஒருவரது தனிப்பட்ட விஷயம்--எப்போது ?--அது அறைக்குள் இருக்கும்வரை--அறையை விட்டு வெளியே வந்தால்--அதுவும் பொது இடத்துக்கு வந்தால் --நாகரீகம் வேண்டும்--இது இவரிடம்  இருந்ததாக தெரியவில்லை . --இது ஒருபுறம் இருக்கட்டும்--

மது அருந்துவது என்பது மனோ ரீதியாக ஒரு வியாதி--அதைவிடுவது என்பது மிகவும் கஷ்டம். கடுமையான மருத்துவம் மேற்கொண்டால் இது சாத்தியம்--இல்லாவிடில் "கட்டலே போகும் வரை"-- இது தொடரும் --இவர்களது  மனது  "ஸ்டெடி  யாக  "  இருக்காது --உடலும்  அப்படியேதான்  என்பதும்  உண்மை --ஆனால்  இவர் "ஸ்டெடியாக  " நின்றார் .இவரின்கீழ்  தமிழ் நாடு  "ஸ்டெடி  ஆக இருக்குமா ?

"வேகமாக  பேசினால்  --நாக்கு  குழறும் " --என்ற  ஒப்புதல்  வாக்குமூலம்  வேறு .. மேடையில்  இருந்த  அவர்  மனைவி  இவர் உளறுவதை  கேட்டு  "நெளிவதை  "பார்க்க முடிந்தது .

இவர் முதல்வரானால் --தமிழ்நாடு  ஐ .ஏ .எஸ் . ஆபீசர்கள் --ஒவ்வொருமுறை  கோப்புகளில்  கையெழுத்து  வாங்கும்  போது ஒரு கோப்பையுடன்தான்  செல்லவேண்டும் . சட்டமன்றத்துக்குள் ஒரு "பார்" ஒப்பன் செய்யவேண்டியிருக்கும்---முதல்வரின் டேபிளுக்கு மேல் "பைல்களுக்கு "பதில் "பாட்டில்கள்" வைக்கவேண்டியிருக்கும் .  சட்டமன்றத்தில் முதல்வரின் சீட்டிற்கு பக்கத்தில் ஒரு பிரிட்ஜ்  நிறைய மதுபான பாட்டில்கள்அடுக்க  வேண்டியிருக்கும். 

பொறுப்பில்லாமல்  "தண்ணியில்  மிதக்கும்  "-இப்படிப்பட்ட  தலைவனுக்கு ---பிரமாண்டமான  கூட்டம் ---லட்சக்கணக்கான  தொண்டர்கள்  ..

வெட்கம்  கெட்ட  அரசியில் 

1 comment:

Vimal said...

நெஜமாவா சொல்றீங்க பாஸ்.... நம்பவே முடியல....