Pages

Sunday, January 16, 2011

ராகுலுக்கும்...ஐய்யப்பனுக்கும் என்ன உறவு

செத்தா--- தேர்தல் நேரத்ல---- சாவணும்-----
என்னடா இது-””-வாழ்ந்தா உன்னோட தான் வாழணும்””---””வீழ்ந்தா தமிழுக்காகதான் வீழணும்””---இப்படித்தான வசனம் கேட்டு நமக்கு பழக்கம்--இது என்ன புதுசா இருக்கு...

ஆமாம் --புதுசுதான் ---

இலங்கை கடல் படையினரால் முந்தாநாள் சுட்டுக்கொல்லப்பட்ட ராமேஸ்வரம் மீனவருக்கு --அவர்குடும்பத்திற்கு ஐந்து லட்ச ரூபாய்--அவர் தங்கைக்கு அரசு வேலை------

இதற்கு முன்னால் இலங்கை கடல் படையினரால் தமிழக மீனவர்கள் பலபேர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்கள்--அவர்களுக்கெல்லாம் வெறும் ஒரு லட்சம்தான் --

ஆனால் இப்பொது ஐந்து லட்சம்---காராணம்--இன்னும் நாலு மாதத்தில் சட்ட்மன்ற தேர்தல்-----

கேரளாவில் ஐய்யப்பன் கோயில்--புல்மேடு---கூட்ட நெரிசலில் சிக்கி--108 ஐய்யப்பமார் பலி----அச்சுதானந்தன் விஜயம்--அவர் மாநில முதல்வர் -- அதனால் வந்தார்--புரிகிறது------

தமிழக அரசு ””விரைவாக செயல்பட்டு “”----ஆம்புலன்ஸ் அனுப்புகிறது----அதிசயமாக விரைவாக செயல்படுவதில் இருந்தே தெரிகிறது--தேர்தல் நெருங்குகிறது என்று--

எந்த பதவியிலுமில்லாத ராகுல் காந்திக்கு என்ன திடீர் ஆர்வம்--கரிசனம்--அவருக்கும் கேரளாவுக்கும் என்ன தொடர்பு---அவருக்கும் ஐயப்பனுக்கும் என்ன உறவு--அவருக்கு ---ஐயப்பன் யார்---- என்பதே தெரியாதே--பின் ஏன் கரிசனம்--

எல்லாம் கேரள சட்டமன்ற தேர்தல் படுத்தும் பாடுதான் ---ஆம் கேரள சட்டமன்ற தேர்தலும் ஏப்ரல்  மாதம்தான் வரப்போகிறது-----இல்லாவிட்டால் 108 பேர் என்ன--1008 பேர் செத்தாலும்--- ராகுலோ ---சோனியாவோ--- வரப்போவதில்லை----கருணாநிதியும் ஐஞ்சு லட்சம் தரப்போவதில்லை----

சாவு கூட  “எலக்‌ஷன் நேரத்தில் “ வந்தால்தான்  பணம் வருகிறது--பார்க்கவும் வருகின்றனர்__
 

No comments: