Pages

Saturday, January 22, 2011

மன்மோகனின் முன்னுரிமை ""இந்திய மக்களா?--சுவிஸ் மன்னரா?

தொடர்ந்து தன் கெளவுரவத்தையும்---மரியாதையையும் அதலபாதாலத்துக்கு கொண்டுசெல்வதையே தினசரி கடமையாக செய்துவரும் மன்மோகன் சிங்---மீண்டும் ஒருபடி சறுக்கியுள்ளார்..

சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் கருப்புப் பணம்--யார் யாருடையது--என்ற தகவலை பெற்ற மன்மோகன் அரசு---அந்த “”புனிதர்களின் “”--பெயரை வெளியிட மறுக்கிறது..

இந்த விஷயத்தில் அரசின் நிலைப்பாட்டை “எப்போதும் போல “” உச்சநீதி மன்றம் “ கண்டித்துள்ளது--கருப்புப்பண முதலைகளின் பெயர்களை வெளியிட மறுக்கும் மன்மோகன் சிங்---அதற்கு சொல்லும் காரணம் தான் “ வெகு சூப்பர்”

“பொருளாதார மேம்பாடு--மற்றும் ஒத்துழைப்புக்கான சர்வதேச அமைப்புடன் “”--செய்துகொண்ட ஒப்பந்தப்படி---கருப்புபண முதலைகளின் பெயர்களை வெளியிடக்கூடாதாம்..அவர்கள் காப்பாற்ற பட வேண்டுமாம்..ஏனெனில் சோனியாவும் அதில் அடக்கமென்பதாலோ”--

அப்படியாயின் 2009 தேர்தலில் “சுவிஸ் வங்கிகளில் உள்ள கருப்புப் பணத்தை வெளிக்கொணர்வோம் “--வெளியிடுவோம்----என்று இந்திய மக்களுக்கு வாக்குறுதி அளித்தீர்களே---அது எங்கே போனது--எப்போதும்போல காற்றில் பறந்துவிட்டதா?

இந்தியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளுக்கு இல்லை மதிப்பு
சுவிஸ் வாக்குறுதிக்காக ஏன் இந்த அவமதிப்பு


No comments: