Pages

Saturday, January 22, 2011

கர்னாடகா விவகாரத்தில் காங்கிரஸ் செய்வது சரி(யா)யே


கர்னாடகா மாதிரியே ---தலைப்பும் என்ன தடுமாறுது---பெங்களூரும் குளிர்னால—உள்ளுக்குள்ள சூடா..(அரசியல்)..எறக்கி…எப்போதும் விஜய்காந்த் மாதிரி “ஸ்டெடியா இல்லையே…

 பின்ன என்னங்க..பி.ஜே.பி.காரங்க..பார்லிமண்ட நடத்தவே விடமாடேங்கிறாங்க…
2ஜி ஊழல்ல சோனியா..சிக்கி இருக்கிறது வெளிப்படையா தெரியா ஆரம்பிச்சிடுச்சு..
ஜேபிசி..விசாரணை வெச்சா..தண்டனை கிடைக்குதோ இல்லையோ..”குட்டு “..வெளிப்பட்டுடும்..
கல்மாடியை காப்பத்தபோய்..ஆஸ்திரேலியாவிடம் அவப்பெயர்..
ஆதர்ஷ் ஊழல்ல..கட்டடத்தையே இடிக்கிற முடிவுக்கு வந்துட்டாங்க..
ஸ்விஸ் வங்கி கருப்புப் பண விவகாரம் “’தலை வலி கொல்லுது”..
தன் மீது தொடர்ந்து அம்பு பாய்ச்சும் பாஜகவிடமிருந்து கொஞ்சநேரமாவது விடுதலை வேண்டாமா?---
ஒரு புத்திசாலி அரசியல் வாதி இதை விட சிறப்பாக எப்படி முடிவெடுக்க முடியும்?..

கட்டிகிட்டு வான்னா..வெட்டிகிட்டு வரும் சூப்பர் கவர்னர்..பரத்வாஜ்..அசுர வேகத்தில் செயல்பட்டு..காங்கிரஸை காப்பாத்திக்கிட்டு வர்ரார்..(காப்பாத்துகிறாரா..காவுகுடுக்கிறாரா..என்பது போகப்போகத்தான் தெரியும் )

காங்கிரஸ் “இமாலய ஸ்கேம்களிலிருந்து “’கொஞ்சம் மூச்சு விட வேண்டுமென்றால்..அதற்கு இதை விட்டால் வேறு வழியே கிடையாது..கிடைத்த எடியூரப்பவை..நழுவவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்..

பாஜக அவரை காப்பற்ற தன் படைகளை..டெல்லியிலிருந்து…கர்னாடகா..பக்கம் திருப்பும் என்பது..காங்கிரஸ் கணக்கு..
அந்நேரம்தான் சோனியா ஓய்வெடுக்க முடியும்..
பிஜேபி சோனியாவின் மீது தன் பிடியை இன்னும் கொஞ்சம் இருக்கினால்…காங்கிரஸ் கர்னாடகாவை கைவிடும்..

ஜெயிக்கப்போவது..யாரு?..பொருத்திருந்து பார்ப்போம்..

No comments: