Pages

Sunday, September 11, 2011

ஒரு வெறி நாய்..கடி .10..20..30..35.. என ஏறிய.. படி...

கலி முற்றி விட்டது போலிருக்கிறது..நாட்டு நடப்பை பார்த்துப் பார்த்து...அலுத்து அலுத்து...ஆதங்கத்தில் சொன்னதல்ல இது..

நேற்று..ஒரு நாய்..தெரு நாய்..( பின்னால் வெறி நாயாக மாறியது வேறு விஷயம )..ரெயில் பயணத்தில் களைத்து ஊர் திரும்பிய பயணிகளை... கோவை ரெயில் ஸ்டேஷன் அருகில் .கூட்டத்தில் லாரி புகுந்த மாதிரி..ஓட ஓட விரட்டி ....பொது மக்களை கடித்துக் குதறியுள்ளது..

இதில் ஆச்சரியம் என்னவென்றால்..கிரிக்கட்டில்.....கம்யூட்டர் கேம்ஸில்... “ஆக்‌ஷன் ரீப்லே “..மாதிரி.கடித்துவிட்டு ஓடிய நாய்...5 ந்து நிமிடங்களுக்கொருமுறை    ஒளிந்து..ஒளிந்து..மீண்டும் மீண்டும் வந்து..கொரில்லா தாக்குதல் நடத்தியிருக்கிறது..

இப்படி மக்கள் கூட்டத்தை..திரும்பத்..திரும்பத் தாக்குவது..அரசியல்வாதிகள்..ஆட்சியாளர்கள்...அதிகாரிகள்.மட்டும்தான்...இவர்களிடம் “கடிபட்டது “ போதாது என்று..நாயிடமும் மக்கள் கடிபடுவது..”கலி “ முற்றினால்தானே நடக்கும்..

இதைவிட தமாஷ்..பத்திரிக்கை களில்..இதைப்பற்றி வந்த தலைப்புச் செய்திகள்தான்..

தி.ஹிந்து...வெறிநாய் 10 பேரைக்கடித்துக் காயம்..
டைம்ஸ் ஆஃப் இந்தியா...வெறி நாய் கடிக்கு 20 பேர் காயம்
தினமலர்....30 பேரை வெறி நாய் கடித்து குதறியது..
தினகரன்...35 பேரைக்கடித்தது வெறி நாய்..

“ நாய் மனிதனை கடித்தால் செய்தி இல்லை..மனிதன் நாயை கடித்தால் தான் செய்தியாம்...என்பதால் ...கடிபட்டவர் எண்ணிக்கையை ஏற்றிக்காட்டி..இது தகுதியான செய்திதான் என்கிறார்களோ..
அல்லது ..இவர்கள் அந்த நாயின் “ ரசிகர் மன்றத்தை “ சேர்ந்தவர்களோ.....

1 comment:

Muthusamy@balu said...

நண்பரே
அவரவர் ரேஞ்சுக்கு எண்ணிக்கையை சொல்லிருக்காங்க ..........சரி கடிச்ச நாய் உயிரோட இருக்கா ??

LOVE EVER HURT NEVER
Muthusamy@balu
QA/QC Mechanical Engineer
DOOSAN Heavy Industries and Construction
Jebel Ali 'M' Station
Dubai
00971558580689