Pages

Sunday, September 4, 2011

” ஜெ” ஆட்சியில் போலிஸ் ”ஃப்ரீயாம்”

வினாயகர் சதுர்த்தி விழா...கடந்த 5 ஆண்டுகளாக கொடி அசைத்து..விசர்ஜன ஊர்வலத்தை துவக்கிவைக்க எனக்கு சிங்கை  வினாயகர்
அருள் பாலித்து வருகிறார்..

போலீஸ் காரர்களின் “சைக்காலஜி”...வித்தியாசமானது.

..உலகெங்கிலுமுள்ள எல்லா நாடுகளிலும் உள்ள போலீஸ் எல்லாம் கிட்டதிட்ட” ஒரே ஜாதிதான் ”

பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்ட பின் அந்த ஆஃபிசரிடம் “ அம்மா ஆட்சியில் என்ன வித்தியாசம்?..எனக் கேட்டேன்.


வெளிப்படையாக பேசினார்...இப்பெல்லாம் போலீஸ் ஸ்டேஷனில் ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் குறுக்கீடு இல்லை என்றார்..மந்திரி..எம்.எல்.ஏக்
கள்..சிபாரிசு செய்ய பயப்படுகிறார்கள் என்றார்..அப்படி ஏதாவது சொன்னால் கூட ரொம்ப பவ்யமாக..”நான் பேசியதாக யாரிடமும் சொல்லி விடாதீர்கள் “என  நட்பாக கேட்டுக்கொள்கிறார்கள்...என்றார்.

திமுக ஆட்சியில் ஒருவேலையும் முழுமையாக செய்ய விடமாட்டார்கள்...வட்டம்..மாவட்
டம்...எம்.எல்.ஏ...மந்திரி ..குறுக்கீடுகள் இருந்து கொண்டே இருக்கும்..என்றார்

போலீஸ் மானிய கோரிக்கை விவாதத்திலும்...தமிழ்நாடு போலீஸை “ஸ்காட்லாண்ட் யார்ட்” போலீஸுக்கு ஒப்பிட்டு புகழ்ந்து தள்ளியாகிவிட்டது..

போலீஸ் காரகளின் உயிருக்கு உத்தரவதம் இல்லை என அனுதாபம் வேறு பட்டாகிவிட்டது..
இப்போதுதான் போலீஸ்காரகள் “ஃப்ரீயாக” இருக்கிறார்களே..இன்னும் ஏன் “கிரைம் ரேட்” குறையவில்லை..
பட்டபகல் கொள்ளை..கொலைகள்..குறைந்த பாடில்லையே..ஏன்?..திருடனைப்பிடி..கொலைகளை தடு..என அம்மா சொன்னால்தான் செய்வார்களா?...

திமுக காரர்களை பிடிக்க மேல் அதிகாரிகள் “கிரீன் சிக்னல்” கொடுக்கிறார்களாம்.....அப்படி எனில் குற்றத்தடுப்புக்கு...குறைப்புக்கு....யாரிடமிருந்து “கிரீன் சிக்னல் “ வரவேண்டும்..நண்பா?..

No comments: