Pages

Wednesday, October 9, 2013

சுசில் குமார் ஷிண்டே பேப்பர் படிக்கிறாரா...


“அப்பாவி முஸ்லீம் இளைஞர்களை விடுதலை செய்க”--என மத்திய உள்துறை மந்திரி சுசில் குமார் ஷிண்டே...மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியது...மாநில உரிமைகளில் குறுக்கீடு செய்வதாகும்..

அப்பாவியா..அடப்பாவியா..என்பது தீர்ப்பு வெளிவரும்போதுதான் தெரியும்..ஷிண்டேயின் இந்த பேச்சு..நீதிபதிகள் மீது “தீர்ப்பை..திணிப்பது” போலாகும்..

சரி..இந்த சுசில்குமார் ஷிண்டே யார்..அவரது நதிமூலம் என்ன?--கர்னாடகதில் வேலை பார்த்த அஸ்ஸாமியர் சிலர் சென்ற ஆண்டு தாக்கப்பட்டதும்,அதனால் ஏற்பட்ட புரளியில் அவர்கள் அஸ்ஸாமுக்கு திரும்ப ரயிலகளில் முண்டியடித்து ஏறி பதட்டப்பட்டது, அந்த பதட்டத்தை தணிக்கவேண்டிய உள்துறை மந்திரி, நிறைய ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று சொல்லி பதட்டதை அதிகப்படுத்தியதும் நாடறிந்ததே..

நம்நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் 60 சதவீதத்திற்குமேல் ”விசாரணைக்கைதிகள்”...இதில் இந்து முஸ்லீம்--கிறிஸ்தவர் என எல்ல மதத்திலும் அப்பாவிக்கைதிகல் இருக்கிறார்கள்..இதில் முஸ்லீம்களுக்கு மட்டும் சலுகை என்றால்...மற்றமத கைதிகள் மத்தியில் அதிருப்தி ஏற்படாதா?--இதனால் ஜெயிலுக்குள்ளே மதக்கலவரம் வெடிக்காதா?

காங்கிரசுக்கு இதைப்பற்றியெல்லாம் என்ன கவலை?..ஆந்திரா பற்றி எரிந்து கொண்டிருப்பதை 5 வருடமாக பார்த்துக்கொண்டு சும்மாதானே இருக்கிறார்கள்..

போலீஸ் மதம் பார்க்கிறது..முஸ்லீம்களை குறிவைக்கிரது என்கிறார்கள்......ஆந்திராவில் பிடிபட்ட பயங்கரவாதிகள்..போலீஸ் பக்ரூதீன்.-பன்னா இஸ்மாயில் வீட்டிலிருந்து கோடிக்கணக்கில் பணமும், டன்..-டன்ன்னாக வெடிகுண்டுகளும் கைப்பற்றப்பட்டுருக்கிறதே...ஆதா
ரம் இருப்பதால்தானே.போலீஸ் பிடிக்கிறது என்பதை உணரமறுப்பது மதவாதம்தானே...
ஆந்திரா..ஹைதிராபாத்..ஜும்மா மஸ்ஜித் வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையான 75 முஸ்லீம் இளைஞர்கள் ஆந்திர அரசு தண்டத்தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆந்திர ஹைகோர்ட் தள்ளுபடி செய்திருக்கிறது..

நமது உள்துறை மந்திரி ஷிண்டே பேப்பர் படிப்பதில்லை போலிருக்கிறது..அதனால்தான் மாநிலங்களுக்கு எழுதிய தனது கடிதத்தில்..முஸ்லீம் இளைஞர்களுக்கு தண்டத்தொகையும், நிவாரணமும் வழங்கவேண்டும் என கட்டளையிட்டுருக்கிறார்.ஆந்திர ஹைகோர்ட் உத்தரவை அவரது உதவியாளர்கள் அவருக்கு படித்து சொல்லவில்லை போலும்...

பல்வேறு வழக்குகளில் முஸ்லீம் இளைஞர்கள் தவறாக கைது செய்யப்படுகிறார்கள்..என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து கொண்டே இருக்கிறது ..இதற்கு யார் காரணம்?

குற்றவாளிகளை கையும் களவுமாக பிடிக்க நம்நாட்டில் மேலை நாடுகள் போல் வசதிகள் இல்லை.அஅர்களின் உறவினர்கள், நண்பர்களை அள்ளிப்போட்டு “கவனித்து”-குற்றவாளிகள் தானாக சரணடைய செய்வதுதான் போலீஸ் டெக்னிக்..
ஆனால் முஸ்லீம்களை பொருத்தமட்டில் இந்த டெக்னிக் செல்லுபடியாவதில்லை..

அவர்கள் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்து சிறப்பு மரியாதை செய்து, ஹீரோவாக்கி --காட்டிக்கொடுக்க மறுப்பதால்..அதற்கு ஆளும் காங்கிரஸ் அரசும் ஆதரவாக இருருப்பதால் போலீஸ் வேறு என்னதான்  செய்ய முடியும்?

ஆக இது முஸ்லீம்கள் மத்தியிலுள்ள குறைபாடு மட்டுமல்ல..குற்றவியல் நீதி பரிபாலனத்திலும், உள்ளது..லட்சக்கணக்கான வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன..லாலு பிரசாத்தின் வழக்கு “விரைவு கோர்ட்டிலேயே” 14 ஆண்டு நடந்தபின்பே தீர்ப்பு வெளியாகியுள்ளது..

ஆக முஸ்லீம்கள் நடைமுறை திருந்த வேண்டும்..குற்றவியல் நடைமுறை நீதிபரிபாலத்தில் திருத்தம் வேண்டும்....காங்கிரஸ் “நாகாக்க” வேண்டும்.குற்றவாளிகள் குற்றவாளிகளாக மட்டுமே பார்க்கப்படவேண்டும்.அப்போதுதான்
உண்மையான மதசார்பற்ற தன்மை தழைக்கும்..

2 comments:

Anonymous said...

Sariya sonninnga Sir...

Maasianna said...

muslim theeviravathikalukku sirappu visecham kaattuvathilnal ippadi nadakkindradhu