Pages

Wednesday, September 8, 2010

மேரா குருஜி கலைஞர் சாப்




                                      ஒரு கற்பனை உரையாடல்.

தன் மந்திரிசபை சகாக்கள் அடித்துக்கொள்வதை—”அவர்களது சுதந்திரம்” என திருவாய் மலர்ந்தருளிய மன்மோகன் சிங்கை பற்றிய ஒரு உரையாடல் காவியம்.

கருணா------என்னால ஏழுந்திருக்க முடியல—அதனால ஒக்காந்துகிட்டே சொல்றேன்  --வாங்க மன்மோகன் சிங்ஜி அவர்களே---நேத்து பேட்டி பிச்சுடீங்க--இந்திரா காந்தி--நேருவெல்லாம் கூட செம தாக்கு -- -ஒங்க குரு யாருன்னு தெரிஞ்குக்கலாமா

சிங்-----சும்மா வெருப்பேத்தாதீங்க---கலைஞ்ரே----கட்சிக்குள்ள ஒரே புகைச்சல்----ஒருத்தனுக்கொருத்தன்…அடிச்சுகிரானுங்க ---ஒரு பயலும் நான் சொல்ரத கேக்குராநில்ல----ரொம்ப உப்புச்சமா இருக்கு.

கருணா-----அதான்  -பொட்டு பொட்டுன்னு  போட்டு ஒடக்கிராங்களே—

சிங்------பொத்தி பொத்தி வச்சிருந்தேன்  ---எல்லாத்தயும் ப்ரஸ்ல ரெலீஸ் பண்ணிக்கிட்டு----- இருக்காங்க ---ம்ம்ம்ம்ம்—ஏந்தலயெழுத்து---( கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு முனகுகிறார் )

கருணா---நீங்க ஸ்டிரிக்டா இருந்திருக்க வேண்டியதுதானே---

சிங்----ஸ்டிரிக்டா—அப்பிடீன்னா---

அழகிரி-----(-சிங்கை பார்த்து-)----தமிழினத்தலைவரை பார்த்து கத்துகுங்க----ஒங்கள…வெருப்பேத்துனா……ஒண்ணு மிரட்டணும்---இல்ல…எரிக்கணும்----அதுதான் எங்க பாலிஸி

சிங்------தம்பி நல்லா பேசுதே---இதமாதிரி பார்லிமெண்ட்லயும் பேசலாமே

அழகிரி----பெரிசு—நா…பேச மாட்டேன்  -மைக்க புடிங்கி எரிவேன்……   -அப்டி…….யே—-----எரிவேன்  

ராகுல்-----(சிங்கை பார்த்து)-----அங்கிள்—நீங்க ஏன் பாட்டி தாத்தாவ--( இந்திரா-நேரு )-- புடிச்சு….வம்புக்கு இழுக்கீறீங்க---

மணிஷங்கர் அய்யர்----------அப்பிடி சொல்லுங்க ராகுல்ஜி---500 டைம்ஸ்—ஏன்…1000 டைம்ஸ் பேட்டி கொடுத்தாலும் இவரு அவ்ங்க மாதிரி ஆகமுடியாது…..( காலர தூக்கிவிட்டுக்கொள்கிறார் )

கருணா-------சரி சிங்ஜி….விட்ட எடத்துக்கு வருவோம்----ஒங்க குருஜி யாருன்னு சொல்லாவே இல்லையே…

சிங்---எஸ் மிஸ்டர்—கருணா—””கல்லாவ பூட்றயோ இல்லியோ—வாய பூட்டியே வச்சுறுன்னு”” –வோல்டு பாங்க்ல வேலபாத்தப்ப எனக்கு சொல்லிகுடுத்துருக்காங்க…

சோனியா-----அதயதான் இப்பவும் நான் திருப்பி சொல்றேன் -ஸாப்

சோனியாவின் இந்தி ஆசிரியர் ---  (குறிக்கிட்டு)--------ஸாப் இல்ல-- மேடம்---ஸார்—------இல்லாட்டி---  ஜி

சோனியா-----சும்மா இருங்க குருஜி---இத்தாலில எழுதிவச்சு—இந்தில படிக்கரதே கஷ்டமா இருக்கு—இதுல நீங்க வேர—

கருணா----சிங்ஜி—இன்னும் நீங்க சப்ஜட்டுக்கே வரல்லியே---ஒங்க குருஜி யாரு---

கனிமொழி-----தலைவரே---( அப்பாவ…அவங்க குடும்பமே—அப்பிடித்தான் கூப்பிடுமாம் )---தா.கிருட்டினனை—அண்ணன் போட்டுதள்ளிச்சுல்ல—அதச்சொல்லி….சிங்ஜிக்கு தகிரியம் குடுங்க---

சிங்--- (ஆச்சரியமாக….) அதென்ன கருணா---ஸாரி—ஸாரி—தலைவரே—

அய்யர்------------ம்ம்ம்ஹூம்ம்—ஒங்ளுக்கு அவர் தலைவரா---உருப்பட்ட மாதிரித்தான் -( முணுமுணுக்கிறார் )

கருணா--------அதொண்ணுமில்ல சிங்ஜி—நம்ம கேபினட்ல—ஒரு மந்திரி ரொம்ப ரவுசு விட்டுகிட்டுருந்தப்ல---தம்பி அழகிரிக்கு வந்துச்சே கோபம்---( மகன்களையும் கருணா “தம்பி “ என்றேதான் விளிப்பார் ) சும்ம ஒரு தட்டு தட்டுச்சு—பொட்டுன்னு போயிட்டார்---

சிங்-------(அப்பாவியாக )-----அத—ஏன் ஏங்கிட்ட சொல்றீங்க—

கருணா-------சும்மா---ஒரு ஜீக்கே (general knowledge-)க்குத்தான் ---ஒங்க மந்திரிங்க ஒங்க பேச்சு கேக்கலைனா—எதுக்கும் இருக்கட்டுமேன்னுதான்

சிங்----------(மீண்டும் அப்பாவியாக )----எதுக்கும் இருக்கட்டும்னா---

கருணா---------அவங்கள--ஒங்க கட்சி நிகழ்ச்சிக்கு  மதுர பக்கம் அனுப்புங்க---தம்பி அழகிரி தட்டிடும்—பழிய இளங்கோவன் மேல போட்டுறலாம்—

சிங்ஜி------------தலைவரே—( மீண்டும் தலைவரா ? )----நீங்க ரொம்ப நேரமா கேட்டீங்களே---இப்ப சொல்றேன்---சந்தேகமில்லாம நீங்கதான் என் குருஜி—

ராகுலும் சோனியாவும் ஆச்சரியதில் வாயைபிளக்கின்றனர்-
-அய்யர் முகத்தை திருப்பிக்கொள்கிறார்---
ஆ.ராசா மகிழ்ச்சியில் “சிங்குக்கெல்லாம் சிங்கு---சிங்கத்தலைவர்—டாக்டர்.கலைஞர் வாழ்க “என கோஷம் போடுகிறார்.

No comments: