Pages

Sunday, January 2, 2011

சாலை---கொலைகார --- போலிஸ்

இந்த தலைப்பு கொடுத்தது வருத்தமாய் தானிருக்கிறது ...என்ன செய்ய போக்குவரத்து போலிசின் செயல்பாடுகள் அப்படித்தான் இருக்கிறது.

கிருஷ்ணகிரி அருகில் தேசிய நெடுஞ்சாலையில் மாமூலுக்கு " கைநீட்டி"-- ஒரு லாரியை திடீரென நிறுத்த --பின்னால் வேகமாக வந்த ஆம்னி மோதி --அதில் பயணம் செய்த 5 அப்பாவிகள் அதே இடத்தில் அவுட்.

இதற்குமுன் ஒரு அரசு உயர் அதிகாரியும் இதேமாதிரி --முனனால் போன வாகனத்தை போலிஸ் நிறுத்த --இவர் சென்ற வாகனம் பின்னால் மோதி அவரும் அவுட்.

கோயம்புத்தூர் நகர சாலைகளில் " கண்ட இடங்களில் "--இதேமாதிரி போலிசின் செய்கைகள் ---"இங்கிதம் இல்லாமல்" --கண்ட இடங்களில் --வண்டிகளை கைகாட்டி நிறுத்துவது--அதனால் "டிராபிக் ஜாம் "" ஆக்குவது --இதனால் ஒருசில இடங்களில் "ஆக்சிடன்ட் " ஆவது --யார் போலிசுக்கு புத்தி சொல்லுவது?

சரக்கு வாகனங்களையும் இம்மாதிரி திடீரென மறைந்திருந்து நிறுத்தி-- "சேல்ஸ் டாக்ஸ் "--அதிகாரிகளும் உய்ர்ப்பலி ஏற்ப்படுத்துகிறார்கள் .-

இத்தனைக்கும் இவர்களுக்கு அனுபவம் உள்ளது--பயிற்ச்சி உள்ளது--ஏன் பிறகு "திருடனை பிடிப்பது போல " "மறைந்திருந்து " நிறுத்தி மக்கள் உயிரை பலி  வாங்குகிறார்கள்.

விபத்தை தடுக்க வேண்டியவர்கள் விபத்தை உண்டாக்குகிறார்கள் ...இவர்களது மேல் அதிகாரிகள் இவர்களுக்கு பயிற்ச்சி கொடுக்கக்கூடாதா ?--

" ஸ்பாட் பைனுக்கும் --செக்கிங்குக்கும் "--நடு ரோடுதானா கிடைத்தது---அவற்றுக்கென தனியிடம் ஒதுக்ககூடாதா  ?--மக்கள் என்ன மீறி தலை தெறிக்க ஓடிவிடவா போகிறார்கள்?

லாரிகளை நிறுத்தி "கைநீட்டும் " போலிசை யார் தட்டிக்கேட்பது?--அதுவும் தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வரும் வாகனங்களை திடீரென நிறுத்துவது --பின்னால் வரும் வாகனங்களுக்கு பெரும் ஆபத்தை உண்டாக்கும் என்ற ""பாலபாடம் "--கூட இவர்களுக்கு தெரியாதா?--போலிஸ் என்றால் பெரிய கொம்பா?-- 

ஷைலேந்திர பாபு--டிஜிபி --ராதாகிருஷ்ணன் போன்ற நல்ல--புத்திசாலியான அதிகாரிகள் கண்ணில் கூட இது படவில்லையா?

ஒருவேளை இச்செய்தி யார்மூலமாகவது அவர்கள் கண்ணில் பட்டால் நல்லது--இனியாவது இம்மாதிரியான உயிர்ப்பலிகள் நடவாமல் இருக்கும்



4 comments:

Rajan Ponnambalam said...

Dear SRS have you failed to take note of one thing? the report says ' THE POLICE HAVE ARRESTED THE LORRY DRIVER' I wonder when the car rammed the lorry from behind why arrest the lorry driver? Since you site the reason , people like should give voice to arrest the police. RP

எஸ்.ஆர்.சேகர் said...

fine--you are right

vai.sankaranarayanan said...

Go directly yourself and talk
It will pay you
"Ask in which way I can help you?"

எஸ்.ஆர்.சேகர் said...

yes i am doing my best