Pages

Sunday, July 17, 2011

காப்பாற்றப்படவேண்டியது---- மக்களா?.....மின்வாரியமா?..

குதிரை குப்புற தள்ளியது மட்டுமல்ல..குழியும் பரித்ததாம்…
பேய்க்கு பயந்து கோயிலுக்குப் போனால் அங்க..5..6..பேய்கள் அரக்க பரக்க ஆடியதாம்..

”அய்யா”....ஆண்டு அழிச்சார்ங்கிறதால ..ஆட்சிய ”அம்மா” கிட்ட ஒப்படைச்சா……எதுல வரிய ஏத்தலாம்....எந்த கட்டணத்த..ஒசத்தலாம்னு சிந்திச்சா……செயல்பட்டா……அப்புறம் ஆட்சி எதுக்கு..,,,அரசாங்கம் எதுக்கு…

நாம ஓட்டுப்போட்டது…..மாறுதலுக்காக……ஆட்சி மாறுதலுக்காக மட்டுமல்ல….அவலங்கள் மாறுதலுக்காக…..அநியாங்கள்..அக்கிரமங்கள்..அராஜகங்கள்…...மாறுதலுக்காகவே..

திமுக ஆட்சிக்கும் “ஜெ” ஆட்சிக்கும் “இப்படியே போனால்” என்ன மாறுதல் இருக்கும்….எதில் மாறுபாடு இருக்கும்..ஒண்ணும் இருக்காது..

இப்பிடி பொலம்பிக்கிட்டே போனால்..என்னன்னு..தெரியும்..சீக்கிரம் விஷயத்தை சொல்லுன்னு நீங்க கேக்குரது காதுல விழுது….சொல்றேன்..

திடீர் இட்டிலி…..திடீர் பாயாசம்…..மாதிரி சென்ற வாரம் “ஜெ’”..ஒரு திடீர் “வரி” போட்டாங்க..
ஒரேநாள் “ராவுல”..வாட் விற்பனை வரிகள்…4 சதம் 5 ஆனது…12 சதம் 14.5 ஆனது

எடுத்தேன்..கவிழ்த்தேன்னு..இப்பிடி “சடக்குன்னு”  வரியை ஏத்துனா என்ன செய்வது?...அதுவும் சட்டசபை கூடுற தேதியை அறிவிச்சுட்டு…..இதை மக்கள் மட்டுமல்ல..கலைஞரும் கேட்கிறார்..11 ந்தேதி..அறிவிப்பு..12ந்தேதியே அமுல்…

இப்ப அடுத்த “ஷாக்” ரெடியாகிகிட்டு இருக்கு..
”ஷாக்”.அடிக்கும்னு கையை வச்சாலும் கரண்டு வராத மின்சார வாரியத்துனுடைய நஷ்ட்டத்தை சரிகட்டணுமாம்…மின்வாரியம் 40300 கோடி ரூபாய் கடன்ல இருக்காம்..ஆண்டுக்கு 10000 கோடி ரூபாய் நஷ்ட்டத்தில் இயங்குதாம். (இயங்குனா தேவைலையே..இயங்கவே இல்லையே ).மின்சார வாரியத்தை காப்பாத்தணும்னா..மின்கட்டணத்தை கட்டாயம் ஒசத்தியே ஆகணுமாம்..

அப்ப மக்கள யாரு காப்பாத்துறது…..ஏற்கனவே விலைவாசி உயர்வால் மூழ்கிக்கிடக்கும் மக்களை யார் காப்பாத்துவாங்க…..”விலைவாசியை குறைப்பேன்…மின்வெட்டை ரத்து செய்து மின்சாரத்தை கொடுப்பேன்னு.” .நீங்க சொன்னதுனால தான மக்கள் உங்களை தேர்ந்தெடுத்தாங்க…

மின்வாரியம் கடன்ல தத்தளிக்க யார் காரணம்?..ஆட்சியாளர்தானே?..மக்கள் யாரும் மின்கட்டணம் கட்ரதே இல்லையா?..அதனால தான் கடனா?..முந்தைய ஆட்சியாளர் செய்த தவறுக்கு மக்களை பலியாக்குவதா?..

நல்ல ஆட்சி குடுப்பீங்கன்னு நம்பிதானே மக்கள் ஒங்கள்ட்ட ஆட்சியை ஒப்படிச்சிருக்காங்க..இப்படி வரிமேல் வரி..கட்டண உயர்வுமேல் கட்டண உயர்வுன்னு. போட்டால்….விலைவாசி.. எப்பிடி குறையும்..மக்கள் எப்பிடி சந்தோஷமாய் இருக்கமுடியும்?...

கரண்டே கொடுக்காமல்..கட்டண உயர்வுங்கிறது எந்த ஊர் நியாயம்?..கட்டண உயர்வுக்கு பக்கத்து மாநிலங்களை துணைக்கு கூப்பிடுவது அநியாயமாக தெரியவில்லையா?...ஒங்க உடன்பிறப்பு நரேந்திர மோடியால மட்டும் எப்பிடி தரமான ..தடையில்லாத..மின்சாரத்தை குறைந்த விலையில் தரமுடிகிறது?

தப்பு செய்வதற்கு..தவறானவர்களையும்..தவறான விஷயங்களையும்…. உதாரணமாக சொல்வதில் திராவிட கட்சிகள்..ஒன்றுக்கொன்று..சளைத்ததில்லை..எனபதை நிரூபிக்க முயலாதீர்கள்...

முதலில் மின்சாரம் கொடுங்கள்..கட்டண உயர்வை அப்புரம் பார்க்கலாம்…திமுக ஆட்சியின் அவலங்களை சரிசெய்வேன் என்று உத்தரவாதம் கொடுத்தது நீங்கள்தானே..மின்கட்டணத்தை உயர்த்துவதால்..திமுகவின் அவலங்களை தொடர்வதாகத்தானே அர்த்தம்..

மின்வாரியத்தின் கடன்களை தீர்க்க..நஷ்ட்டத்தை தடுக்க வேறு வழி என்ன என்று கண்டுபிடியுங்கள்…உங்கள் கட்சி மந்திரிக்களுக்கு தெரியாது..அவர்கள் வெறும் பூஜ்யங்கள்தானே..உங்கள் “வக்காலத்து”.. “சோ”.விடம் கேட்டுப்பாருங்கள்… அவரும் “ மோடியிடம்” தான் கேட்கச்சொல்லுவார்..

எக்காரணம் கொண்டும் ஏற்கனவே நொந்துகிடக்கும் மக்கள் வயிற்றில் மட்டும் அடித்து விடாதீர்கள்..

2 comments:

Yaathoramani.blogspot.com said...

தெளிவூட்டும் நல்ல பதிவு
தொடர்ந்து வருகிறேன்
தொடர வாழ்த்துக்கள்

SURYAJEEVA said...

செய்தி: நான்கு ஆண்டுகளுக்குள் வறுமை ஒழிக்க படும்... -செல்வி.ஜெயலலிதா..

ஆணிவேர்: ஏழைகளை ஒழிச்சு கட்டிட்டா எங்கிருந்து வறுமை இருக்கும்...