Pages

Saturday, July 2, 2011

ஜெ..யின்…முதல் 50 நாட்கள்

ஜெ..யின்…முதல் 50 நாட்கள்

முதல் நாளே தேர்தல் வாக்குறுதிகள்..நிறைவேற்ற துவங்கியாகிவிட்டது..அதான் இலவசங்கள் வினியோகம்…ஆடம்பரமில்லாத அரசு நிகழ்ச்சிகளில்..”ஜெ” படம் போட்ட பைகளில்..”நல்ல அரிசி” பெண்களுக்கு வினியோகம்..
 
புதிய தலைமைச் செயலகத்துக்கு ஏதேதோ காரணம் சொல்லி பூட்டு…..சமச்சீர் கல்விக்கு முழுக்கு……ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கும்”ராப்பகலாக”….புஸ்தகங்களை கிழிக்கும் பணி…”ஜெயின்” அதிர்ஷ்ட நிறம் இன்னும் பச்சைதான் போலும்..அந்த கலர் “ஸ்டிக்கர்கள்” தான் கிழித்த புத்தகங்களில் ஒட்டப்படுவதி இருந்து தெரிந்தது..
பாட புத்தகங்கள் தயாராவது தாமதமாவதால்..சாரி..சாரியாக பள்ளிக்குழந்தைகள்..அரங்கம்..அரங்கமாக..சினிமா பார்க்க அனுப்பும் புதிய பண்பாடு..
இலங்கை தமிழர்களுக்காக..ஒரேடியாக..சட்டசபையில் ஒரு தீர்மானம்..இலங்கை அரசுமீது பொருளாதார தடை விதிக்கும் தீர்மானம்..இலங்கை தமிழர்களுக்காக “கடைசியாக கண்ணீர்விட” இப்படி ஒரு நடக்காத முயற்சி..
ஒரு லட்சம் கோடி ரூபாய் வேண்டி பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதியாகிவிட்டது..பணம் உடனே வந்துவிடப் போகிறது..பிரச்சினை எல்லாம் தீரப்போகிறது…இப்படி தினம் தினம் நாம் கனவு காணலாம்..

“களேபரமாக” தமிழ் நாட்டை திமுக விட்டுச் சென்றதை..”ஜெ” …..லேசாக “கூட்ட” ……ஆரம்பித்தவுடனேயே..பத்திரிக்கைகள் போட்டி போட்டு புகழாரம்..

ஒரு யூனிட் மிசாரம் ரூபாய் 12 என்று ( ரூபாய் எட்டு அதில் கமிஷன் )ஆந்திர மாநிலத்திலிருந்து திமுக வாங்கியதை நிறுத்தி..ரூ.4.13.க்கு கமிஷனில்லாது..ஒரிஸ்ஸவிலிருந்து வாங்குவது நல்ல முயற்சி..மின்வாரியத்திற்கு ரூ.1200/= கோடி கொடுத்து..”பழுது பார்க்கும் வேலைகளை” துவங்கி இருப்பது அடுத்த நல்ல முய்ற்சி..

சிக்கனத்தை கடை பிடிப்பதில்..”தனி விமானத்தில்” செல்வதை நிறுத்தினால்..அதுவும் நல்ல முயற்சியாக இருக்கும்..இதை “ஜெ”யிடம் யார் சொல்வது…..”சோ” சொல்லுவாரா?

மின்வாரிய பொறியாளர்கள் இடமாற்றத்தில்..பெரும் விலை பேசப்பட்டு..லட்சங்கள் கை மாறியது..”ஜெ”க்கு தெரியாதா?..அல்லது நத்தம் விஸ்வநாதன் பொட்டி கை மாற்றும் “குருவியா” ?

TIMES NOW ஆங்கில டி.வி.க்கு “ஜெ” கொடுத்த பேட்டி அபாரம்..”கம்யூனல் பில்” லுக்கு ஆதரவோ..எதிர்ப்போ..தெரிவிக்காமல்..சொன்ன பதில்..திமுக காங்கிஸூக்கு அதிர்ச்சி அளிக்கலாம்..

அடுத்த பிரதமர் ஓட்டத்தில் நீங்கள் இருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு “ஜெ” யின் பதில் பாஜக வாக்கு வங்கி மீது வைத்த குறியாகத்தான் இருக்கமுடியும்.

நாட்டை நிர்வகிக்க..வலுவான்..திடமான பிரதமர் அவசியமாம்..இந்தியா உலகின் வல்லரசாக ஆக வேண்டும் எனபதே அவர் ஆசையாம்..இதை செய்யும் பிரதமர் வேண்டும் எனபது மட்டுமே இவரது நோக்கமாம்..

இதைத்தானே வல்லவன் வாஜ்பாய்..செய்தார்..இதை செய்யத்தானே..ஒருமாநிலத்திலே தனது திறமைகள் முழுவதையும் காட்டி..அதை முன்மாதிரி மாநிலம் ஆக்கிகொண்டிருக்கிறார் நரேந்திரமோடி…

.இதற்க்காகத்தானே லட்சக்கணக்கான தன்னலம் கருதா தேச பக்தர்களின் இயக்கம் பாஜக தினம் தினம் பணியாற்றிவருகிறது..போராடி வருகிறது..

இவர்கள் உருவாக்கி வைத்துள்ள ஓட்டு வங்கியை ஒரே பேட்டியில் அள்ளிச் செல்லும் ஆசை “ஜெ”யின் பேட்டியில் தெரிந்தது..இதை பாஜக புரிந்து கொண்டால் சரி..

மனோதத்துவத்தில்..”HABIT DIE HARD” என்கிறார்கள்..1991லும்..2001 லும் “ஜெ” யின் குணம் மாறியதாக தெரியவில்லை..திடீர்..திடீர்..அதிகாரிகள் மாற்றம்..கூண்டோடு போலிஸார் மாற்றம்..

மந்திரிகளின் இலாக்காகள் திடீர் மாற்றம்..எனபதில் ஆரம்பித்து..இன்று மந்திரி இசக்கி சுப்பையாவை முதல் பலி கொடுத்தது துவ்ங்கி “ஜெ” யின் செயல்பாடுகள்..இந்த சந்தேகத்தை தொடர வைக்கிறது..

அடுத்த 5 ஆண்டு முடியும் போது 146 எம்.எல்.ஏக்களில்..120 எம்.எல்.ஏக்கள் ஒருமுறை மந்திரி ஆகியிருப்பார்கள்

இந்த சந்தேகங்கள் பொய்க்குமா?....தமிழ் நாட்டுமக்களை போல் நாமும் இன்னும் நம்பிக்கை வைத்திருக்கிறோம்..பொறுத்திருந்து பார்ப்போம்..நல்லாட்சி தருவாரென்று…

No comments: