Pages

Sunday, July 31, 2011

” ஜெ ”-- மேனகையிடம் மயங்காதே...


“COMMUNAL VIOLENCE BILL "..வகுப்புவாதம்...மற்றும் வன்முறை தடுப்பு மசோதா....

இதை சட்ட வடிவமாக்க கடுமையான எதிற்பு தெரிவித்து “ஜெ”..இன்று அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

ஆஹா..என்ன அற்புதமான அறிக்கை...என இதை பார்த்தவுடனே...படித்தவுடனே.காவித் தலைவர்கள் முகத்தில் 1000 வாட்ஸ் பல்ப்..எரியும்

லட்சக்கணக்கானவர்களை திரட்டி போராட்டம் நடத்தி பெற்றிருக்க வேண்டிய வெற்றியை “ஜெ”..தனது ஒரே அறிக்கையில் பெற்றுத்தந்து விட்டார்..என சந்தோஷப்படும் தலைவர்களும் இருக்கலாம்..

நாம் போய் பார்க்காமலே ( அனுமதி கேட்டிருந்தால் கிடைக்க 6 மாதம் ஆகியிருக்கும் என்பது வேறு விஷயம். )...மசோதவிற்கு எதிற்பு தெரிவித்து..அம்மா இந்துக்களின் ஏகோபித்த தலைவி “...ஆகிவிட்டாரே..என “புளங்காகிதம் “ அடையும் “ “பெருசுகளும் “..ஏராளம்..

“ஜெ” தான் இந்து என்பதாலோ...இந்துமத ஆதரவாளர் என்பதாலோ...இந்து மதத்தை பின் பற்றுவதாலோ...இம்மசோதாவிற்கு எதிற்பு தெரிவிக்கவில்லை.காவித்தலைவர்ள் காலம் காலமாக...உழைத்து ஓடாய் போய் சேர்த்துவைத்திருக்கிற..”இந்து வாக்கு வங்கி “..மீது வைத்த குறிதான் இந்த எதிற்பு அறிக்கை..

அதனாலென்ன...கருணாநிதி என்னும் இந்து விரோதி...சோனியா என்னும் இந்து வைரி...இவர்களுக்கு மத்தியில்...அம்மாவின் அறிக்கையை நாம் வரவேற்பதுதானே முறை..அவரை ஆதரிப்பது தானே சரி..இப்படி சில குரல்கள்..

“ஜெ” க்கு ஆதரவு தெரிவிக்கவா இந்து இயக்கங்கள்..தோற்றுவிக்கப்பட்டன..”ஜெ” அறிக்கை வெளியிட்டதால் மசோதா தாக்கல் ஆகாமல் போகுமா?...அறிக்கை வெளியிடாமல் இருந்திருந்தால் காவிப்படை போராடாமல் போத்திப் படுத்திருக்குமா?....

அம்மாவின் நெஞ்சுரத்திற்கு..ஆடு..கோழி..பலி வாபஸும்..

கட்டாய மதமாற்ற தடை சட்ட வாபஸுமே சான்று


அயோத்திக்கு ஏன் அம்மா ஆதரவு தெரிவித்தார்?...நாம் ஏற்படுத்திய அலை...இந்து அலை...வாக்கு வங்கி அலை...அதில் பங்கு பெற்றால் அதன் ஆதரவு அவருக்கு கிடைக்கும் விலை....அதனால் நாளை கிடைக்கும் நல்ல நிலை..அதரவு தெரிவித்தார்..அறுவடை செய்தார்..ஆட்சியில் அமர்ந்தார்..

வல்லவன் வாஜ்பாயின் ஆட்சியை...நள்ளிரவில் தோற்கடித்தாரே...அது என்ன இந்த்துவாவிற்கு ஆதரவா?...வகுப்பு வாததிற்கு எதிற்பா?...தேச பக்தியின் உச்ச நிலையா/...

2006 இல் காங்கிரஸோடு கூட்டணி சேர பகீரத பிரயத்தனம் செய்தாரே...காங்கிரஸ் மாறிவிட்டதா?...சோனியா புனிதமாகிவிட்டாரா?....இது இந்துவை வளர்க்கும் முயற்சில் “ஜெ’ யின் ஒரு படிமுன்னேற்றமா?....

2010 இல் காங்கிரஸுடன் கூட்டணிக்கு தவமிருந்தாரே...தூது விட்டாரே...

கங்கிரஸுடன் “ஜெ” யின் கூட்டுக்கும்..இம்மசோதாவிற்கும் என்ன சம்பந்தம் என கேட்கலாம்....

அயோத்திக்கும்..ராமஜன்ம பூமிக்கும்...இந்த்துவாவிற்கும்...ஏன் இந்தியாவிற்கும் எதிரானது காங்கிரஸ்...அதோடு கூட்டணிக்கு ஆலாய் பறந்த “ சந்தர்ப்பவாத...ஒரு சாதாரண அரசியல் வாதி ஜெ”....

இவர்களுக்கு எதிராக நாம் நடத்தி வருவது “தர்ம யுத்தம் “...அது நீண்ட கால யுத்தம்...தொடர் யுத்தம்...நாம் தியாகம் செய்து...உருவாக்கி..கட்டிக்காக்கும்...வாக்கு வங்கியை...ஒரே நாளில் ‘இம்மேனகையிடம்” யிடம் அடகு வைக்கலாமா?....இம்மோகினியிடம் தானம் செய்யலாமா?....

நான் வணங்கும் சிறூவாச்சூர் மதுர காளி வடிவிலிருக்கும் அன்னை பாரதமாதாவே...இந்து ஓட்டு வங்கியை காப்பாற்றும் மன உறுதியை..இவர்களுக்கு“தா”...என வேண்டுகிறேன்..
.

No comments: