Pages

Sunday, July 31, 2011

” எடி “ செய்தது சரியா?..அல்லது “எடி” செய்த “ராவடி..

கடைசியாக எடியூரப்பா ராஜினாமா செய்து விட்டார்...இதை செய்ய அல்லது செய்விக்க...எத்தனை நாள்..எத்தனை தலைவர்கள் போராட்டம்...

ஒரு சட்டபூர்வ அமைப்பினால் குற்றம் சாட்டப்படுபவர்கள்..அரசியலில் பதவி விலகுவது என்பது...சகஜம் என்பது..அந்தக்காலம்..

இப்போது எந்த கட்சியிலும் அப்படி இல்லை...காங்கிரஸும் திமுகவும் மாறி..மாறி..”மரபையும்...மாண்பை
யும்”...காலில் போட்டு மிதித்ததை நாம் பார்த்து பெரு மூச்சு விட்டதை மறந்துவிட முடியாது,,

அந்த வகையில் பண்டித தீனதயாள் உபாத்யாயாவிடம் பாடம் கற்ற பாஜக தலைவர்கள்...”எடியை” வீட்டுக்கு அனுப்பியதுபோல் எந்த கட்சியிலும் நடக்காது... ...பாஜக...தவிர..

“எடி”யை வீட்டுக்கு அனுப்பினால் குற்றத்தை ஒத்துக்கொண்டது போல் ஆகும்....”எடி” யை பதவியில் தொடர வைத்தால்...குற்றத்தை அங்கீகரித்தது போல் ஆகும்....இவற்றில் எது சரி என்பதற்கு சரியான பதில் தந்த பாஜக தலைவர்களுக்கு பாராட்டுக்குரியவர்கள்...

இந்த பாராட்டுக்கு பின்னாலே பல சோகங்களும் இருக்கத்தான் செய்கிறது..ஏற்கனவே “எடி’ கட்சிக்கு மூன்றுமுறை தர்ம சங்கடங்களை ஏற்படுத்தி இருக்கிறார்....அப்போதெல்லாம் பாஜக..”தும்பை தொடர்ந்து””விட்டது...விளைவு “மலை முழுங்கி மஹாதேவன்”..காங்கிரஸின் ஊழலை “உரக்ககூற” பாஜகவால் முடியவில்லை...

இதனால் காங்கிரஸ் “கேம்ப்” கொஞ்ச காலம் வெகு சந்தோஷத்தில் இருந்தது..

கர்னாடகா..பாஜவிற்கு “ எடி “ அரும்பணி ஆற்றினார்...என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை..தென் மாநில பாஜக ஆட்சிக்கு “பிள்ளையார் சுழி “ போட்டவர் “எடி” எனபதையும் மறுக்க முடியாது...

ஆனால் கட்சி தலைமைக்கு சவால் விடும் சக்தி அவருக்கு எங்கிருந்து வந்தது?...முதல் மூன்று நாட்கள் அவர் பதவி விலக மறுத்ததும்...தனது “கோஷ்டி” பலத்தை காட்டி கட்சியை மிரட்டியதும் எதனால்?....

இதே மிரட்டலை சென்றமுறை எம்.எல்.ஏக்களை...கடத்தி ஊர்..ஊராக..கூட்டிச்சென்ற போதும்.. செய்தது பத்திரிக்கைகள் சொல்லும் உண்மை...

இப்போதுகூட..அடுத்த முதல்வரை “எடியே” தேர்வு செய்வேன் என்று அடம் பிடிப்பதும்...கட்சியின் அடுத்த மாநில தலைவர் நான்தான் என்று சொல்வதும்...எதை காட்டுகிறது...கட்சிதலைமை பலவீனமாக இருக்கிறதென்றா?...அல்லது “எடி” அதிபலசாலி என்றா?...

கட்சிதான் ஒருவரை முன் நிறுத்துகிறது...போராடி...வேலை செய்து..வெற்றி பெற செய்கிறது...அதுவரை தொண்டனாக இருந்தவன் தலைவனாகிறான்....தலைவானதுதான் தாமதம்..கட்சியை தள்ளிவைக்கிறான்...கட்சியைவிட உயர்ந்தவானாக நினைக்க தொடங்குகிறான்...

அப்போது கட்சி என்ன செய்யவேண்டும்...பார்த்துக்கொண்டிருந்தால்...”எடி” மாதிரி ஆட்கள்தான் உருவாவார்கள்...

அதிகாரம் வந்த பிறகு கட்சியின் அமைப்பு பின்னுக்கு தள்ளபடுகிறது...பலவீனமாக்கப்படுகிறது....

அமைப்பிருந்தால் தானே..அதிகாரம் வரமுடியும்..பெறமுடியும்...

இவ்வகையில் கம்யூனிஸ்டுகள்..சரியாக இருக்கிறார்கள்..அதுவும் கூட பிரகாஷ் கரத் வந்த பிறகு கட்சிக்கும் ஆட்சிக்கும் ஒரே மோதல்..விளைவு..இரண்டு மாநில ஆட்சி பறிபோனது...

பாஜக வரலாற்றில் “எடியின் “ செயல்பாடுகள் ஒரு கரும்புள்ளி...இனி வருங்காலத்தில் “ கரும்புள்ளிகள்”..உருவாவதும் ...”பெரும் புள்ளிகள்”.. உருவாவதும் “கட்சியின்..தலைமையின் கைய்யில் தான் உள்ளது...

“விண்டோ மேனேஜ்மெண்ட்”..என்னும் முதல் தவறையே திருத்தினால்...கண்டித்தால்...அடுத்த தவறுகள் அஞ்சி ஓடும்...செய்வார்களா?..

No comments: