தன்னை அழித்தநாளை சந்தோஷமாக கொண்டாட வேண்டும் என்றானாம்
அதனால்தான் பட்டாசு வெடித்து கொண்டாடு கிறோமாம்
இந்த பண்டிகையும் --காரணமும் வந்து..வந்து போகிறது
அசுரனும்..அரக்கனும்..அநீதியும்
எத்தனை நாளைக்கு பண்டிகையை மட்டும் கொண்டாடப் போகிறோம்--அநீதியை அழிக்காமல்
ஆட்சியை பிடிக்க ஆசைப் படுபவர்கள் மட்டும்
அநீதியும்..அரக்கனையும் அழிப்பதாக சூளுரைப்பார்கள்
அவர்கள்தான் அநீதியின் மொத்தஉருவம் என்று தெரிந்தும்கூட
இந்தமுறை அநீதியை நிச்சயமாக அழித்துவிடுவோம்
இந்த நம்பிக்கையாவது தொடரவேண்டுமென்பதால்தான் இப்படி
அநீதியை அழிக்க தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவோம்
வாழ்த்துக்கள்--வாழ்த்துக்கள்--
No comments:
Post a Comment