Pages

Wednesday, November 24, 2010

மோடிஸ்தான்


மோடிஸ்தான் ---குஜராத்திற்கு இன்னொரு பெயர்---
வளமான
வாழ்வு --பல்கிப் பெருகும் தொழில்--இல்லாமை இல்லாத தேசம் --இதுதான் மோடிஸ்தான் --இப்படி இருக்கும் எந்ததேசமும் மோடிஸ்தான் தான்

என்ன
பண்ணரார்ன்னே ..தெரியல்ல -----எல்லாருமே --எல்லாமே…..நல்லா இருக்கிற மாநிலமாக இருக்கு குஜராத்--மோடிஸ்தான் ..

மோடியை பாராட்டினால் வகுப்புவாதம்...புகழ்ந்தால்..கம்யுனல்..பேசினால்..ஆன்டி--செக்யுரல் --இதுபற்றி எதுவுமேகவலைப்படாமல்..உலகிலேயே சிறப்பாக செயல்படும் தலைமை செயலகம்..என்கிற விருதை...நா.சபை மோடிக்குவழங்கியுள்ளது
காகிரசும்
கம்யூனிஸ்டுகளும் .நா.வை இன்னும் ஏன் கம்யுனல் என்று சொல்லவில்லை. என்று தெரியவில்லை

தடையற்ற
24 மணிநேர மின்சாரம்
தடையற்ற
24 மணிநேர குடிதண்ணீர்
அதேநேரம்…
10 ஆண்டுகாலமாக இவற்றுக்கு விலை ஏற்றமில்லை
.
வாழ்ந்துகாட்டும்

வளர்த்திக்காட்டும்

நிருபிக்கப்பட்ட
வெற்றியாளன் ---நரேந்திரமோடி என்னும் ஆர்.எஸ்.எஸ்.காரன்

அதாவது
ஒருமதவாதி..ஒரு கம்யுனல்.. --இது ஒரு பக்கம்..

ராகுல் காந்தி கேம்பிரிட்ஜில் படிக்கவில்லை
பட்டம் ஏதும் வாங்கவில்லை
இதெல்லாம் அரசியலுக்கு அவசியமா…தேவையில்லைதான்..
மக்களோடு..மக்களாக 36 மணிநேர ரயிலில் பயணம்..வரவேற்கிறோம்….மக்களின்மீது கொண்ட அக்கரைக்காக…
உ,பி,யில் கூலித்தொழிலாளிகளோடு..தலையில் மண் சுமந்ததை..பாராட்டுகிறோம்..அது பிளாஸ்டிக் தட்டானாலும் சரி…ஷூ…போட்டு மண் சுமந்தாலும் சரி…ஏழை மீதுள்ள கரிசனத்தை ஏற்றுக்கொண்டு பாராட்டுவோம்
இந்தியாவை ஏழை இந்தியா…பணக்கார இந்தியா..என இரண்டாக பிரித்ததற்காகவும்.. பாராட்டுவோம்..பாராட்டு....பிரித்ததற்காக அல்ல..தெரிந்து வைத்ததற்காக..
எதிர்கால இந்தியாவை ஆளப்போவது இவர்தான் என காங்கிரஸ் ராகுலை தயார் செய்துவருகிறது..சோனியாவும் ஆசைப்படுகிறார்…பத்திரிக்கிகைகள் கருத்து சொல்கின்றன..வரவேற்போம்..
திறமையானவர்கள் தான் நம்மை ஆளவேண்டுமென்பதில்..இருவேறு கருத்து இருக்கமுடியாது..
இதுவரை ராகுல் தன் திறமையை நிரூபிக்கவில்லை..ஆனால் வாய்ப்பிருக்கிறது..
அவரை காங்கிரஸ் விரும்பும் –(ரொம்பவும் பாதுகாப்பானது கூட இருக்கட்டும் )..ஏதாவது மாநிலத்துக்கு முதலமைச்சர் ஆக்குங்கள். ஒரு ஐந்தோ—மூன்றோ ஆண்டுகள் ஆளவிட்டு..அவரிடமுள்ள திறமைகளை வெளிக்கொணர்ந்து காட்டுங்கள்..

காட்டினால்..போட்டி…ராகுலுக்கும்..மோடிக்கும் மட்டும்தான்
தயங்கினால்..இபோதைக்கு போட்டியில்லாமலே..இந்தியாவின் வருங்கால பிரதமர் நரேந்திர மோடிதான்..

அப்போது இந்தியா..அதாவது..இந்துஸ்தான்…மோடிஸ்தான் ஆகும்..
வளமும் வாழ்வும் பல்கிப்பெருகும்..

1 comment:

Anonymous said...

sabash