கல்லுக்குள்கூட ஈரம் இருக்கும் என்பார்களே-----அட
மண்ணுக்குள் போகும் மனிதனே
உன்னுக்குள் என்ன இருந்தது --பேயா--பிசாசா
பிஞ்சுகளை கொன்றாயே-வஞ்சகனே
சிங்கமும் புலியும் கூட இரையாகும்
விலங்குகளின் குட்டிகளை கொல்வதில்லை
கோவை பிஞ்சுகள்-- முஸ்கின் -ரித்தீஷை
நீருக்கு இரையாக்கிய மனித மிருகமே..
மிருகத்தின் பேரை உனக்குச் சொல்லி
மிருகத்தை கேவலமாக்குவது ஞாயமல்ல
“வேல்யூக்கள்” தேய்ந்து..உருகி..எரிந்து..கரு
காய்ந்துபோகக் சினிமாவும் டி.வியும் காரணமோ
நாம் உருவாக்கியவை நம்மையே அழிக்கும் முன்
விழித்திடுவோம் “மதிப்பீடுகளை” காத்திடுவோம்
“பிஞ்சுகளின்” பெற்றோருக்கு மனபலம் தர
இறைவனை இறைஞ்சுவோம் பிரார்த்திப்போம்
No comments:
Post a Comment