Pages

Sunday, December 5, 2010

பாவம்--ரா.ல் வின்சி என்கிற ராகுல் காந்தி


பாவம்--ரா.ல் வின்சி என்கிற ராகுல் காந்தி

 குஜராத்தில் அஹமதாபாத் பல்கலைகழக மாணவர்களை சந்தித்த” ரால் வின்சி”--இதுதான் ராகுல் காந்தியின் ஒரிஜினல் பெயர்---இப்படி நடக்கும் என நினைத்துப் பார்திருக்கமாட்டார்.

எந்த ஊருக்குப் போனாலும் காலேஜ்..காலேஜாக இவரை ஏற்றி இறக்குவதுதான் காங்கிரஸாரின் பழக்கம்..
ராகுல் கல்லூரி வாசல் மிதித்ததில்லை--
லண்டன் டிரினிட்டி கல்லூரியில் சேர்ந்ததோடு சரி..பரிட்சை எழுதவில்லை..
சிந்துஜாவின் மானேஜ்மெண்ட் கோட்டாவில் ஹாவேர்ட் பல்கலைகழகத்தில் சேர்ந்ததோடு சரி..”மக்கு ”என்பதால் படிப்பு ஏறவில்லை..பல்கலைகழகமே மூணு மாதத்தில்  விரட்டிவிட்டது.

இவரின்  படிக்காத ஆசையெல்லாம் ..இப்போது காங்கிரஸார் ...கல்லூரிக்கு அழத்துப்போய் நிறைவேற்றுகிறார்கள்.
அப்படி ஏறியதில்தான் குஜராத் மாணவர்கள் கேட்ட கேள்வி ராகுலின் முகத்திரையை கிழித்தது..

”குஜராத்தில் நரேந்திர மோடி சிறப்பாக ஆட்சி புரிகிறாரே..பின் ஏன் நாங்கள் காங்கிரஸுக்கு ஓட்டுப்போடவேண்டும்”’--இதுதான் அவர்கள் கேட்ட கேள்வி--

இந்த கேள்விக்கு விடை தெரியாத “”ரால் வின்சி..என்ற ராகுல்”..மோடியை மாசேதுங்குக்கு ஒப்பிட..மாணவர்கள் ரகளையில் இறங்க..ரால் வின்சி ஒரே ஓட்டம்..

பாவம் ராகுல் காந்தி..அவருக்கு தகவல் சொல்லுபவர்கள் எப்போதும் தவறாகவே சொல்லுகிறார்கள்..

இப்போதுகூட தமிழகத்தில் காங்கிரஸ் (இளைஞர் காங்கிரஸ் )உறுப்பினர்கள் எண்ணிக்கை இரண்டு கோடியாம்..
வாக்களர் பட்டியல்--டெலெபோன் டைரக்டரியை பாத்து எழுதும் காங்கிரஸாரின் போலிக்கணக்கு. ரால்..வின்சிக்கு தெரிந்திருக்க நியாமில்லை.

மாநிலம் முழுதும் நடை பயணம் வெற்றியாம்...அடுத்து காங்கிரஸ்தான் ஆட்சியை பிடிக்குமாம்..””டுபாக்கூர்” புள்ளிவிவரங்களை நம்பி டெல்லியில் இளைஞர் காங்கிரஸாரிடையே ராகுல் உதிர்த்த பொன் மொழிகள் இவை.

உ.பி.யில் மண் சுமந்தும் மாற்றம் வரவில்லை

கர்னாடகாவில் செய்த பிரசாரங்கள் பலன் தரவில்லை.

குஜராத்தில் நரேந்திர மோடியை “மாசேதுங்க்” என விமர்சித்து இருந்த கொஞ்சம் நஞ்சம் “இம்மேஜ்ஜையும்” இறக்கிகொண்டாகிவிட்டது.

வெளிநாட்டு ரத்தமில்லையா?..இந்தியாவைப் பற்றி எதுவும் தெரியல்ல..அதுவும் காங்கிரஸ்காரன பத்தி கொஞ்சமும் தெரியல்ல.கூட இருந்தே குழிபரிக்கிறான்..பக்கத்தில் இருந்தே தவறான வழி நடத்துரான்..

பிஹாரில் இவர் பேச்சு கேட்டு தனியா நின்னு..மரண அடி.
குஜராத்தில் இனி வரவே முடியாது
அடுத்து தமிழ் நாட்ல காங்கிரஸ தோக்க தயார் பண்ணிக்கிட்டு இருக்காங்க..

பாவம் ரால்..வின்சி...விவரமில்லாத புள்ள..

No comments: