வீடு இல்லாதவர்கள் இனி கவலைப் படவேண்டாம்--
சொத்து இல்லாதவர்கள் இனி வருத்தப்படவேண்டாம்--
வண்டியோ வாகனமோ இல்லாதவர்கள் இனி துயரப்படவேண்டாம்--
அலஹாபாத் உயர்நீதிமன்றம் ஒரு அழகான முன்மாதிரியை நாட்டுமக்களின் நன்மைக்காக காட்டியுள்ளது.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றுதான்.
1.வாடகை வீட்டில் ஒருசில வருடங்கள் குடியிருங்கள்--வீட்டுக்காரன் காலி செய்ய சொன்னால் கோர்ட்டுக்கு போங்கள்...கோர்ட்--வீட்டின் ஒரு பகுதியை உங்களுக்கு எழுதித்தந்துவிடும்
2.யாருடையாவது நிலத்தில் சிலவருடம் குடிசை போட்டு குடியிருங்கள்..நில சொந்தக்காரனுக்கு தெரிந்து காலி பண்ண சொன்னால் கோர்ட்டுக்கு போங்கள்--கோர்ட் நிலத்தை உங்களுக்கும் குடிசையை நில சொந்தக்காரனுக்கும் தரச்சொல்லி தீர்ப்பு வழங்கும்--உழைக்காமலே சொத்து உங்களைச் சேரும்
3.வாகனங்களை சில மாதங்களுக்கு வாடகைக்கு எடுங்கள்--திருப்பி கொடுக்காமல் கோர்ட்டுக்கு போங்கள்--முன் சக்கரம் உங்களுக்கும் பின் சக்கரம் வண்டி ஓனருக்கும் என தீர்ப்பாகும்..
அலஹாபாத் நீதிமன்றம் வழிகாட்டியுள்ளது.இனி மற்ற கோர்ட்டுகள் இதை தொடரும்
தமிழக அரசு இலவசங்கள் தருவது போல இனி "கோர்ட் இலவசங்களை" பெற கூட்டம் அலைமோதும்.கேசுகள் எகிறும்.
No comments:
Post a Comment