Pages

Sunday, October 17, 2010

அயோத்தி பிரச்சினை தீர்ந்தது--கோயில்--மசூதி வேண்டாம்--இந்து..முஸ்லீம் மக்கள் முடிவு

- அயோத்தி தீர்ப்புக்கு பிறகு.. இரு தரப்பிலும் பெரும்பான்மையினர் நீதி மன்ற தீர்ப்பை வரவேற்றாலும் “”தீவிர எண்ணம் கொண்ட “”ஒரு பகுதியினர் ”தங்களுக்கு அந்த இடத்தில்-- கோயில்--மசூதி-- “கட்டித்தர வேண்டும்  என்று கூறி ஜனாதிபதி பிரதிபா பட்டீலை சந்தித்தனர்-- ஜனாதிபதியும் கட்டித்தருவதாக ஒத்துக்கொண்டார்.
இரு தரப்பும் மகிழ்ச்சியாக திரும்பினர்--

அடுத்தநாள் இருதரப்பின் அலுவலகத்திற்கும் கோயில்--மசூதி வரைபடத்தோடு ஒரு கடிதம் வந்தது----அதில்  காமன் வெல்த் கேம்ஸ் புகழ் சுரேஷ் கல்மாடி யிடம் காண்டிராக்ட் ஒப்படைக்கப் பட்டிருப்பதாகவும் ஓரிரு மாதத்தில் கட்டிமுடிக்கப்படும் என்று எழுதி இருந்தது.

இருதரப்பும் உடனே ஜனாதிபதியை பார்த்து எங்களுக்கு கோயிலும் வேண்டாம்--மசூதியும் வேண்டாம்--ஒரு மழையில் கட்டடம் இடியபோகிறது. அதற்கு சண்டையிடுவதைவிட --நாங்கள் சமாதானமாக போகிறோம்--என்று அறிவித்துவிட்டு வந்துவிட்டனர்.

காமன் வெல்தில் குழப்பம் உண்டாக்கினாலும்--நாட்டின் குழப்பம் தீரக்காரணமான சுரேஷ் கல்மாடி மீதிருந்த அத்தனை ஊழல் வழக்குகளும் வாபஸ்பெறப்பட்டு--அவருக்கு “பாரத ரத்னா””அறிவிக்கபட்டது..

No comments: