Pages

Sunday, October 31, 2010

ஊழலை--தாங்கிப் பிடிக்கும் பாதுகாப்பு அரண் --காங்கிரஸ்

-- ஆதர்ஷ்---இதற்கு அர்த்தம்--””முன்மாதிரியாக””--ுன்னோடியாக---வழிகாட்டியாக---சிறந்த உதாரணமாக””” என்பதெல்லாம் dictonary" யில் கொடுக்கப்பட்டுள்ள அர்த்தம்---

“”ஆதர்ஷ்””--இதற்கு காங்கிரஸ்காரர்கள் கொடுத்த அர்த்தம்----கொள்ளையடி---சொத்துக்குவி----ஏமாற்று--பொய்சொல்---ஏழைகள்......ராணுவம்...பொது......நாட்டு......விதவைகள்.....சொ்தை.. அபகரி---

மும்பயில் “கார்கில் போரில் வீரமரணம் எய்த--உயிர்த்தியாகம் புரிந்த வீரர்களின் விதவை மனைவியருக்கு  ஒதுக்கிய வீடுகளை மராட்டிய முதலவர் அசோக் சவானின் மாமியார்--மைத்துனி--மைத்துனர்--ஆகியோர் அபகரித்துள்ளனர்--இப்படி   எடுத்துக்கொண்ட”” முறையற்ற முறையை””-- “”அபகரித்துக்கொண்டனர்”” என்கிற வார்த்தையை தவிர வேறு வார்த்தையால் என்னால் நிரப்பமுடியவில்லை.

இதோடு இவர்களோடு-- மூன்று முன்னாள் முதல்வர்கள்--நூறூக்கும் அதிகமான எம்.எல்.ஏ.க்கள்--- “”கூட்டுக் களவாணித்தனம் “ செய்து தங்கள் குடும்பத்தாருக்கும்-- “பிளாட்ஸ்”--பெற்றுள்ளனர்.

காங்கிரஸ் கும்பல்---புரிந்த ஊழலை--அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் ஆங்கில டி.வி.க்களே ஆதரங்களை அடுக்கி--அடுக்கி --மீண்டும் மீண்டும்--போட்டு காட்டி காட்டி காங்கிரஸின்  மானத்தை அப்பளம் நொறுக்குவதை போல நொறுக்கி விட்டார்கள்.

இதற்கு பிறகும் “மீசையில் மண் ஒட்டாத “ சோனியா--”பிரணாப்--அந்தோணி”  --விசாரணைக்குழுவாம்--
ம்ம்ம்ஹூம்--இன்னும் ஏமாறுபவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்.  விசாரணை செய்து கண்டு பிடிக்கப் போகிறார்களாம்--அசோக் சவான் -நிலத்தை திருப்பிக்கொடுக்க தயாராம்--ராஜினாமா செய்து விட்டாராம்--அவருக்கு மாற்று இன்னும் கிடைக்கவில்லையாம்--ஒபாமா இந்தியா வருவதால்-....-மும்பை வருவதால் --இவர் பதவியில் இருப்பது அவசியமாம்---என்னையா வாதம் --ஊழலை தாங்கிப் பிடிக்க-- எத்தனை பாதுகாப்பு அரண்கள்.

காமன் வெல்த்தில்--70000 கோடி ஊழல்--கார்கிலில் வெறும் 103 வீடு ஊழல்தானே---காங்கிரசுக்கு இதெல்லாம் சகஜமப்பா--

No comments: