“”ஆதர்ஷ்””--இதற்கு காங்கிரஸ்காரர்கள் கொடுத்த அர்த்தம்----கொள்ளையடி---சொத்து
மும்பயில் “கார்கில் போரில் வீரமரணம் எய்த--உயிர்த்தியாகம் புரிந்த வீரர்களின் விதவை மனைவியருக்கு ஒதுக்கிய வீடுகளை மராட்டிய முதலவர் அசோக் சவானின் மாமியார்--மைத்துனி--மைத்துனர்-
இதோடு இவர்களோடு-- மூன்று முன்னாள் முதல்வர்கள்--நூறூக்கும் அதிகமான எம்.எல்.ஏ.க்கள்--- “”கூட்டுக் களவாணித்தனம் “ செய்து தங்கள் குடும்பத்தாருக்கும்-- “பிளாட்ஸ்”--பெற்றுள்ளனர்.
காங்கிரஸ் கும்பல்---புரிந்த ஊழலை--அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் ஆங்கில டி.வி.க்களே ஆதரங்களை அடுக்கி--அடுக்கி --மீண்டும் மீண்டும்--போட்டு காட்டி காட்டி காங்கிரஸின் மானத்தை அப்பளம் நொறுக்குவதை போல நொறுக்கி விட்டார்கள்.
இதற்கு பிறகும் “மீசையில் மண் ஒட்டாத “ சோனியா--”பிரணாப்--அந்தோணி” --விசாரணைக்குழுவாம்--
ம்ம்ம்ஹூம்--இன்னும் ஏமாறுபவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். விசாரணை செய்து கண்டு பிடிக்கப் போகிறார்களாம்--அசோக் சவான் -நிலத்தை திருப்பிக்கொடுக்க தயாராம்--ராஜினாமா செய்து விட்டாராம்--அவருக்கு மாற்று இன்னும் கிடைக்கவில்லையாம்--ஒபாமா இந்தியா வருவதால்-....-மும்பை வருவதால் --இவர் பதவியில் இருப்பது அவசியமாம்---என்னையா வாதம் --ஊழலை தாங்கிப் பிடிக்க-- எத்தனை பாதுகாப்பு அரண்கள்.
காமன் வெல்த்தில்--70000 கோடி ஊழல்--கார்கிலில் வெறும் 103 வீடு ஊழல்தானே---காங்கிரசுக்கு இதெல்லாம் சகஜமப்பா--
No comments:
Post a Comment