Pages

Saturday, October 16, 2010

கர்னாடகா -- விவகாரம்-- எடியூரப்பா—குமாரசாமிக்கு---ஜோதிடம்—கொடுத்ததா?—கெடுத்ததா?


அப்பாடா—தலை தப்பியது தம்புரான் புண்ணியமாக எடியூரப்ப அரசு பிழைத்துக்கொண்டது.
“உன்னைத்தொலைக்காமல் விடமாட்டேன் “ என்ற உறுமல் குமாரசாமியிடம் இதற்கு பிறகும் நின்றபாடில்லை.

என் தலைப்பு “நான் ஜோதிடத்திற்கு எதிரானவன் “போல் தோன்றுகிறதல்லவா…

ஜோதிடம் என்னும் விஞ்ஞான பூர்வமான கலையை நான் நம்புகிறேன்.

தன்னை நம்பாமல்—அதை மட்டுமே நம்பி----தன் கடமையை செய்யாமல்------அதுவே---அதுவே………அதுவாகவே----எல்லாம் செய்யும் என்னும் மூட நம்பிக்கையில்….சோம்பேரியாய்….சுற்றிக்கொணடு இருப்பவர்களைத்தான் நான் வெறுக்கிறேன்..

நமக்கு என்ன கிடைக்கும் என்பதை---ஜாதகம்….ஜோசியம்….நியுமராலஜி….வாஸ்து….அதிர்ஷ்டகல்…
.தீர்மானிக்கிரதா?
இவைகள்தான் -தீர்மானிக்கிறது... என்றால் உழைப்பு எனபது எதற்கு?
இல்லை…””ராஜா குடும்பத்திலும்..நல்ல நேரம்—தேதி—இடம்---இவற்றில் பிறந்திருந்தால்தான் எல்லாம் கிடைக்கும் என்றால்----நீதி…நியாயம்…நேர்மை…தர்மம்…கடவுள்…உழைப்பு…..
இவையெல்லாம் எதற்கு?

தமிழகத்தில் மேற்கு மண்டலத்தில் –ஆஞ்சனேயரால் புகழ்பெற்ற ஒரு ஊரிலுள்ள ஒரு ஜோதிடர்---குமாராசாமியின் அப்பா—தேவேகவுடாவை—நீ..ஒருநாள்..பிரதமர் ஆவாய்..என்றார்.. அதுவும் நடந்தது…ஏதோ..வந்தோம்..இருந்தோம்…என பிரதமர் பட்டியலில் “”குல்ஜாரிலால் நந்தா “’ மாதிரி இவர்பெயரும் வந்தது..

ஒரு கணிப்பு பலித்ததால்—அவரே கதி என்று இவர் கிடந்தார்---இப்போது இவரின் மைந்தர்…குமாரசாமியும்..கிடக்கிறார்..குமாரசாமிக்கு இவர் ஒருவர் மட்டும் கிடையாது—ஊருக்கு ஊர் பலர்.  இப்போது அவரை சுற்றி இருப்பவர்களில் பலர் இப்படிப் பட்ட ஆட்கள்தான்.

பா.ஜ.கவோடு பதவியை பங்குபோட்ட காலத்தில் –தான் ஒண்ணரை வருடம் அனுபவித்தை---பின்னர் அடுத்த பகுதியை  பா.ஜ.கவிற்கு தராமல் மறுத்ததற்கு ஜோதிடர்கள் சொன்ன ஆலோசனை தான் காரணமாம்..பா.ஜ.கவிற்கு 18 மாதம் கொடுத்தால்—அப்புறம் ம.ஜ.தவிற்கு ஆட்சி கிடைப்பதற்கு பதில் “”அல்வாதான்” கிடைக்கும் –என எச்சரித்ததால்—குமாரசாமி உஷாராகி—நடத்திய நாடகமும் அதன் விளைவுகளும்—நாடறியும்.

இதோடு விடவில்லை “ஜோதிடர் கூட்டம்”---””டிரை பண்ணுங்க—டிரை பண்ணுங்க—பண்ணிகிட்டே இருங்க---( சூரியன் எஃப்.எம் மாதிரி )உங்க ஜாதகம் உச்சம்—உங்களுக்கு போகதான் மத்தவங்களுக்கு மிச்சம்---”சி.எம் நிச்சயம்—பி.எம் லட்சியம்---
என கலைஞர்—வசனங்களை பேசி—குமாரசாமியின் “மண்டை கிருக்கை “ ஏற்றிவிட்டனர்..18 மாத முதல்வரில் சம்பாதித்த பணமும் விளையாடியது.

கர்னாடகவில் ஜனநாயகம் கேலிக்கூத்தானது—ஒருவார காலமாக அரசாங்கமே நடக்கவில்லை—போலி ஜோதிடர்கள் உசுப்பேற்றிய--- பதவிப் பித்தும்—பணபலமும்—நன்றாக நடந்து கொண்டிருந்த அரசை—அமைதியை---சீர்குலைத்தது.
இது ஒரு பக்கம்----
எடியூரப்பாவும் லேசுபட்ட ஆளில்லை---ஜோதிடர்கள் போட்ட கோட்டுமேலேயே தடம் புரளாமல் நடப்பார்—அவரால் தமிழ் நாட்டு கோயில்களுக்கு “ஜாக்பாட்”---பலகோயில்களுக்கு அரசு பணத்தை லக்‌ஷ…லக்‌ஷமாக…வாரி வழங்கினார்…ஓட்டெடுப்பு முதல் நாள் கூட கேரளாவில் ஒரு கோயிலுக்கு சென்றுவிட்டுத்தான் வந்தார் அவர்..

சென்ற பொதுத்தேர்தலில் ஜெயித்த வுடன் தனி மெஜாரிடிக்கு 10—15 எண்ணிக்கை குறைவாக இருந்தபோது—அதை அடைக்க—திட்டம் தீட்டியிருக்க வேண்டும்.. காங்கிரஸை—ம.ஜ.தவை—திட்டமிட்டு—வெட்டியெரிந்து—உடைந்த பானையாக்கி—இருக்கவெண்டும்..
அரசாங்கம் கையில் இருந்தது—முதல் மந்திரியே இவர்தான் -பொதுக்கூட்டதில் அழுவதை நிறுத்திவிட்டு—எதிர் கட்சிகளை அழவைதிருக்க வேண்டாமா?----மூளையை கசக்கி இருந்தால்—எதிர் கட்சிகள் கசங்கி –சுருங்கி—போயிருக்க மாட்டர்களா?—

ஆட்சியை கவிழ்க்க ஒருவர் ஜோதிடர்களிடம் தஞ்சம்---ஆட்சியை காப்பற்ற மற்றொருவர் ஆண்டவனிடம் தஞ்சம்—மொத்ததில் கர்னாடகா மக்களுக்கு—இது போதாத காலம் --

2 comments:

ராவணன் said...

சோதிடம் பற்றி ஏதும் தெரியுமா?
சொம்மாக் கேட்டேன்!

எஸ்.ஆர்.சேகர் said...

தெரியும்