Pages

Tuesday, August 3, 2010

" களவானி " களுக்கு பாடம் தந்த 'கார்கில் போர்-- வெற்றி தினம்--ஜூலை- 26
இந்தியா இனி எப்போதும் வெற்றி பெற சபதமேற்போம்.


47 இல் சுதந்திரம் பெற்று ஆசுவாச படுத்திக் கொள்வதற்க் குள்ளாகவே அதுவரை நம்மிடம் இருந்த நம் முன்னாள் சகோதரர்கள் ( புதிய வார்த்தையாக இருக்கிறதல்லவா? ) பாகிஸ்தான் நம்மீது உடனடியாக போர் தொடுத்தது. காஷ்மீரத்தின் ஒரு பகுதியை அபகரித்து கொண்டார்கள். சரித்திரம் என்பது நடந்த உண்மைதானே--மாற்றி எழுத முடியாதுதானே--அதனால் இதை எழுதினால் மதவாதம் என சொல்லமுடியாதுதானே--அபகரிக்கப் பட்ட நமது பகுதி அன்றைய பல் வேறு அரசியல் காரணங்களால் --மீட்கப்படும் பல்வேறு வாய்ப்பு கிடைத்தும் மீட்கப்படாமல் போனது. அதற்க்கு இன்றைய நமது பெயர் பி.ஒ .கே --பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர். பழைய சகோதரன் பாக்கிஸ்தான் வைத்த பெயர் "ஆசாத் காஷ்மீர் " --விடுதலை பெற்ற காஷ்மீராம்.

இதற்குப் பிறகு சீனா நம் மீது திடிரென படையெடுத்து இமயமலைப் பகுதியில் 16000 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள நமது தேசத்தை ஆக்கிரமித்துக் கொண்டது. 1966 இல் மீண்டும் பாகிஸ்தானுடனான போரில் லாகூரை நாம் பிடித்துவிடுவோம் என்னும் தருணத்தில், போர் நிறுத்தம் நம்மீது திணிக்கப்பட்டது. 1971 இல் பங்களா தேஷ் என்னும் புதிய நாட்டை ஏற்ப்படுத்தி அவர்களிடமே கொடுத்தோம். இப்படி நடந்த போர்களில் நம் பகுதியை காப்பாற்றிக் கொள்ளவோ-- எதிரி ஆக்கிரமித்த நம் பகுதியை மீட்கவோ செய்யவில்லை.

ஆனால் 1999 அடல் பிஹாரி வாஜ்பாய் என்னும் மாமனிதன் தலைமையில் இந்திய அரசு முதன்முதலாக பாக்கிஸ்தான் நம்மிடம் இருந்து ஆக்கிரமித்த பகுதியை மீட்டது.அதோடு அவர்கள் படையை ஒடோட விரட்டியடித்தது. பாக்கிஸ்தான் படைக்கு பெரும் சேதத்தை ஏற்ப்படுத்தியது .வெற்றி நம் பக்கம் குவியும் நேரம் மீண்டும் கட்டாய போர் திணிப்புக்கு முயன்ற அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் விடுத்த கட்டளையை தூக்கிஎரிந்தார் வாஜ்பாய் அவர்கள் . இது வல்லவன் வாஜ்பாயின் "பேராண்மைக்கு "--சான்று .

இப்படி சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகளில் வெற்றிகளை குவித்த முதல் போர் என்னும் பெருமை "கார்கில் " போருக்கே சொந்தம். அதே ஆண்டில் இந்த வெற்றி ""அணுஆயுத தேசம் " நியுக்கிளியர் நேஷன் " என்னும் பெருமையை அணுகுண்டு வெடித்ததன் மூலம் பெற்று தந்தது.

அரசின் திட்டங்களால் கிடைத்த வெற்றியை அரசியல் கட்சிகள் அடுத்த தேர்தலில் வெற்றிபெற தேர்தல் அறிக்கைகளாக தருவது வழக்கம். ஆனால் வாஜ்பாய் ஆட்சியின் வெற்றிகள் வரலாற்றில் இடம் பெரும் வெற்றிகள். தேசத்தின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட " தேசத்தின் வெற்றிகள் "

அனைவருக்கும் கல்வி--என்ற "சர்வ சிக்ஷா அப்பியான்" இந்தியாவை கல்வி அறிவுள்ள நாடாக மாற்றும் பணியில் வெற்றி. தங்க நாற்க்கர சாலை--தேசத்தை சாலை வழியில் இணைக்கும் பணியில் வெற்றி. இந்த வெற்றிகள் தொடர நினைத்த போது மீண்டும் காங்கிரஸ் ஆட்சியில் அமர்த்த பட்டதால், வறுமை==விலைவாசி உயர்வு--வேலை இன்மை --என்னும் நோய்களால்--மீண்டும் தொய்வு.

ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஒரு குறிக்கோள் இருக்கும். அந்த குறிக்கோளை அடைய அவன் சபதமேர்ப்பதும் உண்டு. அதற்காக அவன் , அவனது பிறந்த நாள், திருமண நாள், மற்றும் அவனுக்கு புத்துணர்ச்சி ஊட்டும் ஏதாவது ஒரு நாளில் மீண்டும் மீண்டும் சபதமேர்ப்பது நடந்து வருகிறது.

கார்கில் போர் வெற்றி தினம் --இந்த தேசத்தின் தன் மானம் காத்த நாள். அது தொடங்கி வைத்த வெற்றிகள் ஏராளம். அதே தினம் ஒவ்வொரு மனிதனுக்கும் புத்துணாச்சி ஊட்டும் தினம் தனிப்பட்ட நம் வாழ்வின் வெற்றிக்கும்--தேசத்தின் புதிய மறுமலர்ச்சிக்கும் --இந்தியாவை மீண்டும் உலகின் குருவாக்கவும். . . இந்நாளில் மீண்டும் சபதமேற்ப்போம்.

No comments: