Pages

Tuesday, August 3, 2010

அமித் ஷா கைது --காங்கிரஸின் ஊரறிந்த ரகசிய திட்டம்.


குஜராத் உள்துறை அமைச்சர் அமித் ஷா சி.பி.ஐ ஆல் கைது செய்யப்பட்டது காங்கிரசின் முகத்திரையை கிழித்து விட்டது.பா.ஜ.கவை பழி வாங்க வேண்டும்--நரேந்திர மோடி ஆட்சியை அகற்ற வேண்டும் என்பது எல்லாம் காங்கிரசின் "ஊரறிந்த ரகசியங்களில் " ஒன்று.என்பது நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது.

ஆனால் ஐந்து ஆண்டுகாளாக கிடப்பில் போடப்பட்டிருந்த இவ்வழக்கை இப்போது சி.பி.ஐ.ஏன் தூசி தட்டி எடுத்தது. விவரம் இல்லாமல் இல்லை

.பார்லிமென்ட் இந்த வாரம் கூடுகிறது. விலைவாசி விண்ணை முட்டுகிறது. பெட்ரோல் டீசல் விலை மீண்டும் ஏற்றியாகிவிட்டது. கூட்டாளி திமுக வின் ஆ.ராசா ஸ்பெக்ட்ரம் ஊழல்--- பார்லிமெண்டில் புயலைகிளப்பபோகிறது.

. ஏற்கனவே இவைகளை எதிர்த்து அனைத்து எதிர்க்கட்சிகளுடன்,-- கம்யூனிஸ்ட்டையும் சேர்த்துக்கொண்டு "பாரத் பந்த்தை " வெற்றிகரமாக--- பா.ஜ.நடத்தி விட்டது. எனவே பார்லிமென்ட் உள்ளே இந்த கூட்டணி மீண்டும் சேர்ந்தால், காங்கிரஸ் உரித்த கோழியாகிவிடும். எனவே தான்” மதவாத சாயம் பூசும் வழக்குகளை”-- எடுப்போம்--பாஜகவை தனிமைப்படுத்துவோம் --என்ற காங்கிரசின் "சகுனி வேலையின் ஒரு பகுதி”-- அமித் ஷா கைது.

இரண்டாவது--பீகார் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் வருகிறது. பீகார் வாக்களர்களில் 10 சதவீதம் முஸ்லிம்கள் --அவர்களை பா.ஜ.கூட்டணிக்கு ஒட்டுபோடவிடாமல் செய்ய பா.ஜ.வை மதவாதி என சித்தரிக்க--இக்கைது நாடகம்காங்கிரஸுக்கு பக்கபலமாக இருக்கும் என்று காங்கிரஸ் நம்புகிறது.

பாவம் சி.பி.ஐ.----ஏற்கனவே- எம்.எல்.ஏக்களை விலைக்கிவாங்கிய வழக்கில் ---அஜித் ஜோகி மீது குற்றம் ருசுவான பிரகும் கூட கேசை வாபஸ் வாங்கியது--பெட்ரோல் பங்க் ஊழல் சதீஷ் ஷர்மா கேஸை காலாவதியாகவிட்டது--சீக்கியர்களை கொன்று குவித்த-- ஜகதீஷ் டைட்லர் கேசை வாபஸ் பெற்றது --மாயாவதிக்கு பல்லக்கு தூக்கியது--முலயாமுக்கு பல்லைக் காட்டியது --போஃபர்ஸ் ஊழல் புகழ் குவட்ரோச்சியை தப்பவிட்டது----என காங்கிரசால் அவமானப் பட்டுக்கொண்டிருக்கும் சி.பி. ஐ இப்போது மீண்டும் காங்கிரசின் ஏவலாளாக செயல் பட்டு மீண்டும்--- மாபெரும் அவமானத்தை சந்திக்கப் போகிறது. எவ்வளவு ஜோடிச்சாலும் இந்த பொய் வழக்கு நிக்காது என்பது தெரிந்தே சி.பி.ஐ. இதில் இறங்கி உள்ளது.

சரி -அமித் ஷா யார்--இவரை ஏன் காங்கிரஸ் கண் வைத்தது--மீடியாக்கள் போட்டிபோட்டுக்கொண்டு ஏன் அமித் ஷா மீது மண்ணை வாரி இறைக்கிறார்கள். குஜராத்தில் அவருக்கு அப்படி என்ன செல்வாக்கு--

அமித் ஷா விஸ்வ ஹிந்து பரிஷித் இருந்து வந்தவர்--மிக பெரிய பணக்கார குடும்பத்தை சார்ந்தவர்-

-ஊழல் விஷயங்களில் சிக்காதவர்-- 24 மணிநேரமும் உழைப்பவர்--இந்துத்வாவை வ்ற்றிகரமாக அமுல் படுத்திக் கொண்டிருப்பவர்.---பயங்கரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்பவர்--மோடியின் வலதுகரம்--அத்வானியின் தேர்தல்களுக்கு இரண்டுமுறை இவரே முழுப்பொறுப்பாளர்-- குஜராத் போலிஸ் ஸ்டேஷன்கள் எல்லாம் மார்பிள் கற்களால் இழைக்கப்பட்டிருக்கும் வண்ணம் சுத்தம்--சுகாதாரம்--சட்டம் ஒழுங்கை பாதுகாப்பவர்.

இவரது தொகுதியான ஆமதாபாத் அருகிலுள்ள ”சர்கெஜ் தொகுதியை” போய் பார்த்தால் ஒவ்வொரு தெருவும் இவர் எப்படிப்பட்ட திறமையான நிர்வாகி என பாடம் சொல்லும்.மன்மோகன் சிங்கின் பொருளாதார சீர்திருத்தம் எல்லாம் இவர் செய்திருக்கும் வளர்சிக்குமுன் தூசி.


இவர் தொகுதியின் வஸ்த்ரபூர்-- மக்கள் பிரிதி நிதிகள் எப்படி பணியாற்ற வேண்டும் என்பதற்கான " முன்மாதிரி ஊர் ""-- இனி பாஜகவை குஜராத்தில் எத்தனை தேர்தல் வந்தாலும் வீழ்த்த முடியாது ---என்று பயந்து போன காங்கிரஸ் அமித் ஷாவை கைது செய்ய சி.பி.ஐயை பயன்படுத்துகிறது..-\\\\\\

-நிச்சயம்--- எப்போதும் போல--- நீதி லேட்டாக ஜெயிப்பதும்-- அநீதி லேட்டாக தோற்பதும் இம்முறை நடக்காது-

சி.பி.ஐயை சுய லாபத்துக்கு இயக்குபவர்கள்--சீக்கிரம் --இயக்கமில்லாமல் போகப்போகிறார்கள்
.

No comments: