Pages

Tuesday, August 17, 2010

ஓட்டு--நோட்டு-- கலைஞரின் டாப் சீக்ரட்””



துன்பம் வரும் வேளையிலே சிரிங்க --வள்ளுவனுக்கு நன்றி----6800 கோடி ரூபாய். 15 லக்‌ஷம் மின்மோட்டார்
கள்--எத்தனை கமிஷனோ -எத்தனை ஊழலோ----இப்படி திட்டம் போட எத்தனை புத்தி வேண்டும் ---இது தமிழ் நாட்டுக்கு துன்ப வேளை--அதாவது சிரிக்கும் வேளை.

போலீஸ் ஸ்டஷன்களில் திருடர்கள் ( பெரிய இடத்துகாரர்கள் என்றால் மரியாதையாக சொல்ல வேண்டுமல்லவா? ) ரெக்கார்ட் இருக்கும்.ஒவ்வொரு திருடருக்கும் (மறுபடியும் மரியாதை ) ஒரு டெக்னிக்------------”பீரோ புல்லிங் “” திருடர் ----------வீடு திறந்திருந்தாலும் வீட்டுகுள் வரமாட்டான். அவனுக்கு ஜன்னல் வழியே திருடியே பழக்கம்.

பிட் பாக்கெட்----------உள்ளாடையில் காசு வைத்திருந்தாலும்--அடிச்சிடுவா
். நகைத் திருடன்------ “”டாக்குமெண்ட்களை எடுக்கமாட்டான் -உண்டியல் திருடன்------ சில்லரையை தொடமாட்டன், நோட்டைமட்டும் எடுத்துகொள்வான். வெள்ளியமட்டும் திருடும் “சில்வர் சீனிவாசன்”” மாதிரி திருடர்களும் உண்டு .

திமுக ரொம்ப கௌரவமான கட்சி------மக்கள் பணத்தை நேரடியாக “சுட “மாட்டார்கள். நல்ல நல்ல திட்டங்களை போட்டு “”அள்ளி க் “”கொள்வார்கள்.

மேலே சொன்ன திருடர்களுக்கும் இவர்களுக்கும் நீங்கள் தயவு செய்து முடிச்சு போடாதீர்கள்

மக்களுக்கு இவர்கள் செய்யும் நன்மைகளை பார்த்து---- ----ஏதோ தொழில் அதிபர்கள் சும்மா----- 1000-------2000 கோடி டிப்ஸ் கொடுக்கிறார்கள். அதை வேண்டாவெறுப்பாக இவர்கள் பெற்றுக்கோள்கிறார்கள்.

இப்பகூட விவசாயிகளுக்கு நன்மை செய்ய 15 லட்சம் மின் மோட்டார் கொடுக்க போகிறார். இந்த காலத்துல யார் இப்படி கொடுப்பாங்க. கொஞ்ச நஞ்ச பணமா?-------6800 கோடி-------தொழிலதிபர் களெல்லாம் இவ்வளவு செலவு செய்யும் கலைஞருக்கு நாம ஏதாவது திருப்பி செய்யணுமேன்னு--------ஏதோ அவங்களால முடிஞ்சது------- ஒரு 1700 கோடி ( வெறும் 25 % தான் ) சபை மரியாதை ----திருப்பி செய்றாங்க------விவசாயியெல்லாம் மனங்குளிர்ந்து ஓட்டுப்போடலாமென்றால்---எதிர்க்கட்சியெல்லாம் பொய்பிரச்சாரம் செய்றாங்க--

கொடுக்கப்போற மோட்டார்ல பாதி ----போலி-----மீதி பழசு------கட்சிக்காரங்களும் அதிகாரிகளும் ஆளாளுக்கு காசடிப்பாங்க--””கரண்டே இல்ல--வெறும் மோட்டார வெச்சுக்கிட்டு என்ன பண்றது--------இப்படி வேண்டாத “கமண்ட் “ எல்லாம் அடிக்கிறாங்க.

இப்பிடித்தான் -இலவச டி.வி.க்கும் கமண்ட் அடிச்சாங்க------டி.வி. இங்கே--கரண்ட் எங்கேன்னு------பல கிராமங்கள்ள கேக்கிறாங்கன்னு----- பல பத்திரிக்கைல எழுதினாங்க.

ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுத்தார் கலைஞர்------மக்கள் சதோஷமானாங்க.---- கட்சிக்காரங்க சந்தோஷமடைய வேண்டாமா? கேரளால அரிசி இல்லாம ஜனங்களெல்லாம் கஷ்ட பட்றாங்க -- நாம அவ்ங்களுக்கு அரிசி கொடுப்போம்னு--- லாரி லாரியா உடன் பிறப்புக்கள் எடுத்துகிட்டு போனாங்க. இந்த நல்லெண்ணத்த புரிஞ்சுகிட்ட போலிஸ் “”அரிசி கடத்தல் அது இதுன்னு “”அவங்க மேல அனாவசியமா “ வழக்கு போடல்ல. இதப்போய் ஜெயலலிதா ஏன் பெரிசு பண்றாங்கன்னு தெரியல்ல.

தேர்தலுக்கு முன்னால இன்னும் பல பெரிய திட்டங்கள் கலைஞர் வசம் உள்ளது-
அதற்காக குஷ்புவுடன் கலைஞர் அவசர ஆலோசனை நடத்தவுள்ளார்.
-விரைவில் அறிவுப்புகள் வரும்