””மாநில அரசின் உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கும் மத்திய அரசின் செயல் வருத்தம் அளிக்கிறது””.--இது முதல்வர் கருணாநிதி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்து பேசிய பேச்சு.
கருணாநிதிக்கு என்ன ஆனது------அவரா இப்படி பேசினார்-----எப்போது அவர் ஸ்டேட்ஸ்மென் ஆனார்------எப்படி அவருக்கு இந்த அரசியல் முதிர்ச்சி வந்தது-----இது திமுக பாணி இல்லையே-----இது கலைஞர் ஸ்டைல் இல்லையே-----இப்படியெலொலாம் பலர் நினைக்கிறார்கள்.
யாரவது ஒரு பத்திரிக்கைகாரன் இவரயோ--இவர் குடும்பத்தினரையோ லேசாக விமர்சித்துவிட்டாலே---- போனைப்போட்டு ஆசிரியரை மிரட்டுவது இவர் பழக்கமாயிற்றே--””தொட்டுப்பார்-
இந்தியா முழுவது ராஜிவ் காந்தி பெயரி.ல் பலதிட்டங்கள்--கட்டிடங்கள்--ரோ
“”அவரை விடச்சொல்லு --நா--வீட்டுடறேன்---என இளங்கோவன் ஏன் கலைஞருடன் மல்லுக்கட்டுகிறார்.
ஒருவேளை அவருடைய அப்பா ஈ.வீ.கே. சம்பத்தை அநியாயமா திமுகவிலிருந்து தூக்கி எறிய கலைஞர்தான் காரணம் என்று இளங்கோவன் நினைக்கிறாரோ--
திமுக அடுத்த தலைவர் தம்பி சம்பத்துதான் என அண்ணாவால் அடயாளம் காட்டப்பட்ட தன் அப்பாவை அநியாயமாய் டிஸ்மிஸ் செய்த கலைஞரை ஒரு “”கை ‘”பார்ப்போம் என “”கை “ கட்சியில் சேர்ந்து இளங்கோவன் செய்யும் கலாட்டாவா இது.
அல்லது அம்மா சுலோச்சனா தூண்டுதலில் அதிமுக கூட்டுக்காக கலைஞரை கலைக்கிறாறா----
ஆனால் ஒன்றுமட்டும் வருத்தமாக இருக்கிறது--சீறீக்கொண்டிருந்த கலைஞர் சிங்கத்தை இப்படி “”முனகும் படி “” வைத்துவிட்டதே காங்கிரஸ். காஷ்மீருக்கு சுயாட்சி என வாய்தவரி அறிவித்த மன்மோகன் சிங்--அந்த அறிவிப்பை வைத்துக்கொண்டு காங்கிரஸை கலைஞர் என்ன பாடு படுத்தி இருப்பார்.இந்நேரம். அப்படி எல்லாம் இந்த வயசான காலத்துல செய்யவிடாமல் வாயக்கட்டி போட்டுரிப்பது வருத்தமாக உள்ளது.
ஆனாலும் நம்ம தமிழின தலைவரில்லையா--அவரை காங்கிரஸ் சீ ண்டுவது ஏற்றுக்கொள்ள முடியாததுதான்.
திமுக ஆட்சியை அகற்றவேண்டும் என குரல் கொடுக்கும் பாஜக---அதற்கு எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என கேட்டுக்கொள்ளும் பாஜக---தேஜ..கூட்டணியில் திமுகவை எவ்வளவு மரியாதையோடு நடத்தியது.
கோட்டைக்குள் ஏதோ குத்து வெட்டு நடக்குது---கூட்டணிக்குள் எதோ சத்தமில்லாமல் நடக்குது. என்னதான் எதிரணியில் இருந்தாலும் மூத்த தலைவர் கலைஞரை காங்கிரஸ் அவமதிப்பது தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாதுதான்