Pages

Saturday, August 21, 2010

மர்மமாகிப்போன கலைஞரின் வேகம்


””மாநில அரசின் உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கும் மத்திய அரசின் செயல் வருத்தம்  அளிக்கிறது””.--இது முதல்வர் கருணாநிதி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்து பேசிய பேச்சு.

கருணாநிதிக்கு என்ன ஆனது------அவரா இப்படி பேசினார்-----எப்போது அவர் ஸ்டேட்ஸ்மென் ஆனார்------எப்படி அவருக்கு இந்த அரசியல் முதிர்ச்சி வந்தது-----இது திமுக பாணி இல்லையே-----இது கலைஞர் ஸ்டைல் இல்லையே-----இப்படியெலொலாம் பலர் நினைக்கிறார்கள்.

யாரவது ஒரு பத்திரிக்கைகாரன் இவரயோ--இவர் குடும்பத்தினரையோ லேசாக விமர்சித்துவிட்டாலே---- போனைப்போட்டு ஆசிரியரை மிரட்டுவது இவர் பழக்கமாயிற்றே--””தொட்டுப்பார்-
-பேசிப்பார்--முடிந்துபோவாய்--தொலைத்துவிடுவேன்””  -----என சவாலும் ராவடி அரசியலும் செய்யும் திமுக--””-மாநில சுயாட்சியே உயிர் மூச்சாக கொண்ட திமுக ””--””ஐய்யா--சாமி”””--- என காங்கிரஸை  கெஞ்சும் நிலை வந்ததற்கு என்ன காரணம் --
இதுவரை எங்களுக்கு ஆட்சியில் பங்கில்லையா--அரசில் பங்கில்லையா----உரிய மரியாதை இல்லையா---உங்கள் திட்டமெல்லாம் மத்திய அரசின் மாநிலத்திலேயேதான் நடக்கிறது---என்று மட்டும் பேசிவந்த இளங்கோவன்---காங்கிரஸ் நட்பு வட்டம் என்னும் அமைப்பின் உண்ணாவிரத்தை முடித்துவைத்து பேசும் போது “’சென்னை பொது மருத்துவமனைக்கு “”ராஜிவ் காந்தி” பேரை வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளர். ""நாளையே   கூட்டணி   மாறலாம் "" என  திமுக விற்கு “”பேதி மாத்திரை “”கொடுத்துள்ளார்.

இந்தியா முழுவது ராஜிவ் காந்தி பெயரி.ல் பலதிட்டங்கள்--கட்டிடங்கள்--ரோ
டுகள்--இருக்கின்றன--அப்புறம் ஒரு ஆஸ்பத்திரிக்கு அவர் பெயரை வைக்கலன்னா காங்கிரஸுக்கு என்ன பெரிய பாதிப்பு வந்துடப்போவுது.
”அவரை விடச்சொல்லு --நா--வீட்டுடறேன்---என இளங்கோவன் ஏன் கலைஞருடன் மல்லுக்கட்டுகிறார்.

ஒருவேளை அவருடைய அப்பா ஈ.வீ.கே. சம்பத்தை அநியாயமா திமுகவிலிருந்து தூக்கி எறிய கலைஞர்தான் காரணம் என்று இளங்கோவன் நினைக்கிறாரோ--
திமுக அடுத்த தலைவர் தம்பி சம்பத்துதான் என அண்ணாவால் அடயாளம் காட்டப்பட்ட தன் அப்பாவை அநியாயமாய் டிஸ்மிஸ் செய்த கலைஞரை ஒரு “”கை ‘”பார்ப்போம் என “”கை “ கட்சியில் சேர்ந்து இளங்கோவன் செய்யும் கலாட்டாவா இது.

அல்லது அம்மா சுலோச்சனா தூண்டுதலில் அதிமுக கூட்டுக்காக கலைஞரை கலைக்கிறாறா----

ஆனால் ஒன்றுமட்டும் வருத்தமாக இருக்கிறது--சீறீக்கொண்டிருந்த கலைஞர் சிங்கத்தை இப்படி “”முனகும் படி “” வைத்துவிட்டதே காங்கிரஸ். காஷ்மீருக்கு சுயாட்சி என வாய்தவரி அறிவித்த மன்மோகன் சிங்--அந்த அறிவிப்பை வைத்துக்கொண்டு காங்கிரஸை கலைஞர் என்ன பாடு படுத்தி இருப்பார்.இந்நேரம். அப்படி எல்லாம் இந்த வயசான காலத்துல செய்யவிடாமல் வாயக்கட்டி போட்டுரிப்பது வருத்தமாக உள்ளது.

ஆனாலும் நம்ம தமிழின தலைவரில்லையா--அவரை காங்கிரஸ் சீ ண்டுவது ஏற்றுக்கொள்ள முடியாததுதான்.

திமுக ஆட்சியை அகற்றவேண்டும் என குரல் கொடுக்கும் பாஜக---அதற்கு எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என கேட்டுக்கொள்ளும் பாஜக---தேஜ..கூட்டணியில் திமுகவை எவ்வளவு மரியாதையோடு நடத்தியது.

கோட்டைக்குள் ஏதோ குத்து வெட்டு நடக்குது---கூட்டணிக்குள் எதோ சத்தமில்லாமல் நடக்குது. என்னதான் எதிரணியில் இருந்தாலும் மூத்த தலைவர் கலைஞரை காங்கிரஸ் அவமதிப்பது தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாதுதான்