Pages

Thursday, August 12, 2010

காஷ்மீருக்கு “சுயாட்சி “” மண்டுமோகன் போட்ட குண்டு



ஒரு திரைப்படத்தில் தற்கொலை செய்துகொள்ள முயல்பவரை பஸ்கண்டக்டர் வடிவேலு காப்பாற்ற போவார்.

அந்த உரையாடல-----

கீழே குதிச்சு தற்கொலை பண்ணிக்குவேன்

அப்ப---- சாகலைன்னா---------

இதோ கைல வச்சுருக்கிற கைறுல தூக்கு போட்டு செத்துருவேன்

அப்பிடியும் சாகலைன்னா----------

இந்த பாட்டில்ல உள்ள வெஷத்த குடிச்சு செத்துருவேன்

அப்பிடியும் சாகலைன்னா---------

இந்த கத்தியால கழுத்த கரகரன்னு அறுத்துகிட்டு செத்துருவேன்---------

உரையாடல் இப்படி போகும்—

அதுபோல—நம் பிரதமர் அப்பாவி மண்டு மோகன் சிங்கும்—என்ன கேள்வி கேட்டாலும் —வடிவேலு காமடி அடிப்பதுபோல் வழக்கமாய் உள்ளது.

ஆனால் இன்று காஷ்மீர் பற்றிய அவர் காமடிதான் “”ஈரக்குலை நடுங்க “”செய்கிறது---

அவரது “”கிளிப்பிள்ளை “”பதில்கள்---

விலைவாசி எப்போது குறையும்

விரைவில்

மாவோயிஸ்டுகள் பிரச்சினை எப்போது தீர்க்கப்படும்

விரைவில்

மும்பை துறைமுகத்தில் ஆயில் கசிவு எப்போது கட்டுக்குள் கொண்டுவரப்படும்

அறிக்கை கேட்டுரிக்கிறேன்-விரைவில்

சுரேஷ் கல்மாடி எப்போது நீக்கப்படுவார்—பதிலில்லை—மௌனம்

தெலுங்கானா தனி மாநிலமாக்கப்படுமா

விரைவில் முடிவு செய்யப்படும்

காஷ்மீரில் எப்போது இயல்புநிலை திரும்பும்—

அவர்களுக்கு “”சுயாட்சி “பரிசீலிக்கப்படும் காஷ்மீருக்கு மட்டுமல்ல—மன்மோகன் சிங் யாருக்கு வாக்கு (அவருடைய மனைவி தவிர )கொடுத்தாலும் அவரால் ஒன்றும் செய்ய முடியாது.

பற்றி எரியும் காஷ்மீரில் இப்படி “”சுயாட்சி “”ஆறுதலை கொளுத்திப் போட்டுவிட்டாரே மண்டு மோகன் சிங்—இது மேலும் எரியுமா?—இல்லை காங்கிரஸ் ----- சொல்லும்--- சொல்வதோடு சரி--- செய்-------யா====து—என்பது காஷ்மீர் மக்களுக்கு தெரிந்து அடங்கி விடுவார்களா?—தெரியவில்லையே?