ஒரு திரைப்படத்தில் தற்கொலை செய்துகொள்ள முயல்பவரை பஸ்கண்டக்டர் வடிவேலு காப்பாற்ற போவார்.
அந்த உரையாடல-----
கீழே குதிச்சு தற்கொலை பண்ணிக்குவேன்
அப்ப---- சாகலைன்னா---------
இதோ கைல வச்சுருக்கிற கைறுல தூக்கு போட்டு செத்துருவேன்
அப்பிடியும் சாகலைன்னா----------
இந்த பாட்டில்ல உள்ள வெஷத்த குடிச்சு செத்துருவேன்
அப்பிடியும் சாகலைன்னா---------
இந்த கத்தியால கழுத்த கரகரன்னு அறுத்துகிட்டு செத்துருவேன்---------
உரையாடல் இப்படி போகும்—
அதுபோல—நம் பிரதமர் அப்பாவி மண்டு மோகன் சிங்கும்—என்ன கேள்வி கேட்டாலும் —வடிவேலு காமடி அடிப்பதுபோல் வழக்கமாய் உள்ளது.
ஆனால் இன்று காஷ்மீர் பற்றிய அவர் காமடிதான் “”ஈரக்குலை நடுங்க “”செய்கிறது---
அவரது “”கிளிப்பிள்ளை “”பதில்கள்---
விலைவாசி எப்போது குறையும்
விரைவில்
மாவோயிஸ்டுகள் பிரச்சினை எப்போது தீர்க்கப்படும்
விரைவில்
மும்பை துறைமுகத்தில் ஆயில் கசிவு எப்போது கட்டுக்குள் கொண்டுவரப்படும்
அறிக்கை கேட்டுரிக்கிறேன்-விரைவில்
சுரேஷ் கல்மாடி எப்போது நீக்கப்படுவார்—பதிலில்லை—மௌனம்
தெலுங்கானா தனி மாநிலமாக்கப்படுமா
விரைவில் முடிவு செய்யப்படும்
காஷ்மீரில் எப்போது இயல்புநிலை திரும்பும்—
அவர்களுக்கு “”சுயாட்சி “பரிசீலிக்கப்படும்